முந்தைய பாகம்: மெல்கிசேதேக்கின் விளக்கம்
இந்த உலகத்தில் ஏத்தனையோ நதிகள் இருக்கும் பொழுது, ஏதேனிலிருந்து ஓடின ஒரு நதியை குறித்தும், அதிலிருந்து பிரிந்த நாலு பெரிய ஆறுகளையும் குறித்து சொல்லப்பட்டது, இயேசு கிறிஸ்துவையும் பிதாவாகிய திரியேக தேவனையும் நாம் அறிந்துக் கொள்ள வேண்டும் என்கிற மேலான நோக்கத்தினால் தான், இது சகரியா தீர்க்கதரிசியின் தரிசனத்திற்கு ஒத்ததாகவே இருக்கிறது - 10.தோட்டத்துக்குத் தண்ணீர் பாயும்படி ஏதேனிலிருந்து ஒரு நதி ஓடி, அங்கேயிருந்து பிரிந்து நாலு பெரிய ஆறுகளாயிற்று. 11.முதலாம் ஆற்றுக்குப் பைசோன் என்று பேர், அது ஆவிலா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்; அவ்விடத்திலே பொன் விளையும். 12.அந்தத் தேசத்தின் பொன் நல்லது; அவ்விடத்திலே பிதோலாகும், கோமேதகக் கல்லும் உண்டு. 13.இரண்டாம் ஆற்றுக்குக் கீகோன் என்று பேர், அது எத்தியோப்பியா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும். 14.மூன்றாம் ஆற்றுக்கு இதெக்கேல் என்று பேர், அது அசீரியாவுக்குக் கிழக்கே ஓடும்; நாலாம் ஆற்றுக்கு ஐபிராத்து என்று பேர் - ஆதியாகமம் 2:10-14
இதில் முதலாம் நதி இயேசு கிறிஸ்துவை குறிக்கிறது - 10.தோட்டத்துக்குத் தண்ணீர் பாயும்படி ஏதேனிலிருந்து ஒரு நதி ஓடி, அங்கேயிருந்து பிரிந்து நாலு பெரிய ஆறுகளாயிற்று. 11.முதலாம் ஆற்றுக்குப் பைசோன் என்று பேர், அது ஆவிலா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்; அவ்விடத்திலே பொன் விளையும். 12.அந்தத் தேசத்தின் பொன் நல்லது; அவ்விடத்திலே பிதோலாகும், கோமேதகக் கல்லும் உண்டு - ஆதியாகமம் 2:10-12
மற்ற மூன்று நதிகளாகிய கீகோன், இதெக்கேல், மற்றும் ஐபிராத்து நதிகள் பிதாவாகிய திரியேக தேவனை குறிக்கிறது, - 13.இரண்டாம் ஆற்றுக்குக் கீகோன் என்று பேர், அது எத்தியோப்பியா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும். 14.மூன்றாம் ஆற்றுக்கு இதெக்கேல் என்று பேர், அது அசீரியாவுக்குக் கிழக்கே ஓடும்; நாலாம் ஆற்றுக்கு ஐபிராத்து என்று பேர் - ஆதியாகமம் 2:10-14
இந்த மூவரும் தான், பொன், பிதோலாகும், மற்றும் கோமேதகக் கல்லாக இயேசு கிறிஸ்து என்கிற பைசோன் ஆற்றில் இருக்கிறார்கள், இதுவே இயேசு கிறிஸ்துவின் திருத்துவதை விளக்குவதாகவும் இருக்கிறது - 10.தோட்டத்துக்குத் தண்ணீர் பாயும்படி ஏதேனிலிருந்து ஒரு நதி ஓடி, அங்கேயிருந்து பிரிந்து நாலு பெரிய ஆறுகளாயிற்று. 11.முதலாம் ஆற்றுக்குப் பைசோன் என்று பேர், அது ஆவிலா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்; அவ்விடத்திலே பொன்(வார்த்தை) விளையும். 12.அந்தத் தேசத்தின் பொன் நல்லது; அவ்விடத்திலே பிதோலாகும்(கிருபையும்), கோமேதகக்(சத்தியமும்) கல்லும் உண்டு - ஆதியாகமம் 2:10-12
அதனால் தான், ஆதியாகமம் 3ஆம் அதிகாரத்தில் ஆதாமும் ஏவாளும் பாவத்தின் விளைவால் ஏதேன் தோட்டத்திலிருந்து அனுப்பிவிடப்படும் முன்பே, இயேசு கிறிஸ்துவின் மூலமாய் நமக்கு இரட்சிப்பு உண்டு என்பதை விளக்கும் பொருட்டு, ஆதியாகமம் 2ஆம் அதிகாரத்தில் இந்த பைசோன் ஆற்றில் பொன்(வார்த்தை) நல்லது என்றும், அவ்விடத்திலே பிதோலாகும், கோமேதகக் கல்லும்(கிருபையும் சத்தியமும்) உண்டு என்றும் சொல்லப்பட்டுள்ளது
அடுத்த பாகம்: சீனாய்மலையின் விளக்கம்