முந்தைய பாகம்: போஜனபானம்பண்ணுகிறவராய் வந்தார்
இயேசு கிறிஸ்துவே நம்முடைய பரிசுத்தமும், சமாதானமும், நித்திய ஜீவனுமுமாய் இருக்கிறார், இதை தான் பரிசுத்த வேதாகமம் இயேசு கிறிஸ்து நம்முடைய பரலோகராஜ்யமாய் இருக்கிறார் என்று ஒரே வார்த்தையில் சொல்லுகிறது, அதே சமயத்தில் பரிசுத்த வேதாகமம் நம் பரலோகராஜ்யமாம் இயேசு கிறிஸ்துவை மூன்றுபடி மாவோடு ஒப்பிடுவதற்கு காரணம், கர்த்தரின் திருத்துவமே, எப்படியெனில் வார்த்தையானவர் வெளிப்பட்ட பொழுது பிதாவும் பரிசுத்த ஆவியானவரும் அவருக்குள் வாசம் செய்ததினால் தான் மூன்றுபடி மாவோடு ஒப்பிடப்பட்டார் - 33.வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் புளித்தமாவுக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு ஸ்திரீ எடுத்து, முழுவதும் புளிக்கும் வரைக்கும், மூன்றுபடி மாவிலே அடக்கிவைத்தாள் என்றார். 34.இவைகளையெல்லாம் இயேசு ஜனங்களோடே உவமைகளாகப் பேசினார்; உவமைகளினாலேயன்றி, அவர்களோடே பேசவில்லை. 35.என் வாயை உவமைகளினால் திறப்பேன்; உலகத்தோற்றமுதல் மறைபொருளானவைகளை வெளிப்படுத்துவேன் என்று தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது - மத்தேயு:33-35
இது பழைய ஏற்பாட்டின் காலத்தில் சாராள் செய்ததற்கு ஒப்பாகவே இருக்கிறது - 20.மேலும் அவர்: தேவனுடைய ராஜ்யத்தை நான் எதற்கு ஒப்பிடுவேன்? 21.அது புளித்தமாவுக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு ஸ்திரீ எடுத்து முழுவதும் புளிக்கும்வரைக்கும் மூன்றுபடிமாவிலே அடக்கிவைத்தாள் என்றார் - லூக்கா 13:20-21
அடுத்த பாகம்: மூன்று அப்பத்தின் விளக்கம்