ஆகாய சுடர்களின் விளக்கம்
இயேசு கிறிஸ்து திரியேக தேவனாக, அதாவது பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியானவரின் தற்சுரூபமாய் இருக்கிறார் !
இயேசு கிறிஸ்து திரியேக தேவனாக, அதாவது பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியானவரின் தற்சுரூபமாய் இருக்கிறார் !
முந்தைய பாகம்: நோவாவின் விளக்கம்
நம் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவை பரிசுத்த வேதாகமம் நம்முடைய மெய்யான ஒளி என்று சொல்லுவதை தான் இந்த வசனத்தில் பார்க்கிறோம் - 1. ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. 2. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். 3. சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. 4. அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது. 5. அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை. 6. தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனுஷன் இருந்தான், அவன் பேர் யோவான். 7. அவன் தன்னால் எல்லாரும் விசுவாசிக்கும்படி அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க சாட்சியாக வந்தான். 8. அவன் அந்த ஒளியல்ல, அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க வந்தவனாயிருந்தான். 9. உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி - யோவான் 1:1-9
இந்த மெய்யான ஒளியாகிய இயேசு கிறிஸ்துவுக்குள் பிதா வார்த்தை பரிசுத்த ஆவியானவர் என்ற மூன்று பேருமே வாசம் செய்தார்கள், எப்படியென்றால் வார்த்தையானவர் தன்னுடைய குமாரனை இந்த உலகத்திற்கு அனுப்பின போது, பிதாவின் குமாரனும், பரிசுத்த ஆவியின் குமாரனும், அந்த இயேசு என்கிற வார்த்தையானவருக்குள் வாசம் செய்தார்கள், இதை அப்போஸ்தலனாகிய யோவான் விவரிக்கும் பொழுது பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியாகிய திரியேக தேவன் ஜலம், இரத்தம், ஆவியாக கிறிஸ்து இயேசுவுக்குள் இருந்தார்கள் என்று குறிப்பிட்டுள்ளார் - 8.பூலோகத்திலே சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது. 9.நாம் மனுஷருடைய சாட்சியை ஏற்றுக்கொண்டால், அதைப்பார்க்கிலும் தேவனுடைய சாட்சி அதிகமாயிருக்கிறது; தேவன் தமது குமாரனைக்குறித்துக் கொடுத்த சாட்சி இதுவே - I யோவான் 5:8-9
இதை விளக்கவே, ஆதியிலே வெளிச்சத்தை உண்டாக்கின தேவன், மூன்று விதமான சுடர்களை, அதாவது சூரியன் சந்திரன் நட்சத்திரங்களை பூமியின் மேல் வெளிச்சம் கொடுப்பதற்காக உருவாக்கினார், அந்த மூன்று விதமான சுடர்கள் மெய்யான ஒளியாகிய இயேசு கிறிஸ்துவையும், அவர் திரியக தேவனாக இருக்கிறார் என்கிற பரம ரகசியத்தையும் ஒவ்வொரு நாளும் நமக்கு அறிவித்துக் கொண்டிருக்கிறது - 14. பின்பு தேவன்: பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது, அவைகள் அடையாளங்களுக்காகவும், காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார். 15. அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கும்படிக்கு வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்களாயிருக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று. 16. தேவன், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார். 17. அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கவும், 18. பகலையும் இரவையும் ஆளவும், வெளிச்சத்துக்கும் இருளுக்கும் வித்தியாசம் உண்டாக்கவும், தேவன் அவைகளை வானம் என்கிற ஆகாயவிரிவிலே வைத்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார். 19. சாயங்காலமும் விடியற்காலமுமாகி நாலாம் நாள் ஆயிற்று - ஆதியாகமம் 1:14-19
இதில், சூரியன் பிதாவையும், சந்திரன் வார்த்தையானவரையும், நட்சத்திரங்கள் பரிசுத்த ஆவியானவரையும் குறிக்கிறது, இந்த பரிசுத்த ஆவியானவரை பன்மையாக அழைத்ததும், நட்சத்திரங்களோடு ஒப்பிட்டதும், இயேசு கிறிஸ்து தன்னுடைய வருகையை குறித்து சொன்னதற்கு ஒப்பாகவே இருக்கிறது - என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக்குறித்தும் எவன் வெட்கப்படுகிறானோ, அவனைக்குறித்து மனுஷகுமாரன் "தம்முடைய மகிமையோடும்" "பிதாவின் மகிமையோடும்" "பரிசுத்த தூதர்களின் மகிமையோடும்" வரும்போது வெட்கப்படுவார் - லூக்கா 9:26
அடுத்த பாகம்: மூன்று அடையாளங்களின் விளக்கம்