வாசல், மேய்ப்பன், காவல்காரன்
இயேசு கிறிஸ்து திரியேக தேவனாக, அதாவது பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியானவரின் தற்சுரூபமாய் இருக்கிறார்
இயேசு கிறிஸ்து திரியேக தேவனாக, அதாவது பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியானவரின் தற்சுரூபமாய் இருக்கிறார்
முந்தைய பாகம்: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி
நம் இரட்சகராகிய இயேசு கிறிஸ்து, வார்த்தையானவரின் குமாரன் மாத்திரம் அல்ல, அவருக்குள் பிதாவானவரின் குமாரனும், பரிசுத்த ஆவியானவரின் குமாரனும் வாசம் செய்தார்கள், இப்படியாக நம் கர்த்தர் திரியேக தேவனாக இருக்கிறார், ஆனால், இயேசு கிறிஸ்து என்றாலே திருத்துவத்தில் இரண்டாவது நபர் என்பது போல தான் அறிவிக்கப்பட்டது, அதே சமயத்தில் இயேசு கிறிஸ்துவுக்குள் பிதாவானவரும் பரிசுத்த ஆவியானவரும் வாசம் செய்தது உவமைகளாகளாகவும் மறைமுகமாகவும் அறிவிக்கப்பட்டது, இந்த தொகுப்பில், சிலுவையில் வார்த்தையானவரின் குமாரனோடு, பிதாவானவரின் குமாரனும், பரிசுத்த ஆவியானவரின் குமாரனும் பாடுபட்டது எப்படியாக அறிவிக்கப்பட்டது என்பதை பார்ப்போம்.
இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தை, சர்வாங்க தகனபலி என்று சொன்ன மோசே, கர்த்தர் யூதா கோத்திரத்தை சேர்ந்தவராய் இருப்பார் என்பதையும், எருசலேமிலே சிலுவையில் அறையப்படுவார் என்பதையும் மறைமுகமாகச் சொல்லி, மேலும் நமக்காக பலியான கர்த்தரை[வார்த்தையானவரின் குமாரனை] வாசல் என்றும், அந்த வாசலிலே வெளிமானையும்[பிதாவானவரின் குமாரன்] கலைமானையும்[பரிசுத்த ஆவியானவரின் குமாரன்] புசிக்கலாம் என்று இரண்டு காரியங்களையும் சொல்லி இருந்தார் - 14.உன் கோத்திரங்கள் ஒன்றில் கர்த்தர் தெரிந்துகொள்ளும் இடத்தில்மாத்திரம் நீ உன் சர்வாங்க தகனபலிகளையிட்டு, நான் உனக்குக் கற்பிக்கிற யாவையும் அங்கே செய்வாயாக. 15.ஆனாலும் உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு அருளும் ஆசீர்வாதத்திற்குத்தக்கதாய், நீ உன் வாசல்களிலெங்கும் உன் இஷ்டப்படியே மிருகஜீவன்களை அடித்துப் புசிக்கலாம்; தீட்டுப்பட்டவனும் தீட்டுப்படாதவனும், அவைகளை, வெளிமானையும் கலைமானையும் புசிக்கிறதுபோல புசிக்கலாம் - உபாகமம் 12:14-15
இதை விளக்குவதற்காகவே இயேசு கிறிஸ்து தன்னை வாசல் என்றும், தன்னோடு மேய்ப்பன் மற்றும் வாசலைக் காக்கிறவர் என இருவர் இருக்கிறார்கள் என்றும் உவமையாக சொன்னார், ஆனால் ஒருவரும் அதைப் புரிந்துக் கொள்ளவில்லையாம் - 1.மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆட்டுத்தொழுவத்துக்குள் வாசல்வழியாய்ப் பிரவேசியாமல், வேறுவழியாய் ஏறுகிறவன் கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறான். 2.வாசல்வழியாய்ப் பிரவேசிக்கிறவனோ ஆடுகளின் மேய்ப்பனாயிருக்கிறான். 3.வாசலைக் காக்கிறவன் அவனுக்குத் திறக்கிறான்; ஆடுகளும் அவன் சத்தத்துக்குச் செவிகொடுக்கிறது. அவன் தன்னுடைய ஆடுகளைப் பேர்சொல்லிக் கூப்பிட்டு, அவைகளை வெளியே நடத்திக்கொண்டுபோகிறான். 4.அவன் தன்னுடைய ஆடுகளை வெளியே விட்டபின்பு, அவைகளுக்கு முன்பாக நடந்துபோகிறான், ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின்செல்லுகிறது. 5.அந்நியருடைய சத்தத்தை அறியாதபடியினால் அவைகள் அந்நியனுக்குப் பின்செல்லாமல், அவனை விட்டோடிப்போம் என்றார். 6.இந்த உவமையை இயேசு அவர்களுடனே சொன்னார்; அவர்களோ அவர் சொன்னவைகளின் கருத்தை அறியவில்லை. 7.ஆதலால் இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: நானே ஆடுகளுக்கு வாசல் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 8.எனக்கு முன்னே வந்தவர்களெல்லாரும் கள்ளரும் கொள்ளைக்காரருமாயிருக்கிறார்கள்; ஆடுகள் அவர்களுக்குச் செவிகொடுக்கவில்லை - யோவான் 10:1-8
அதனால் தான் கர்த்தர் இதை ஒரு உதாரணத்தோடு ஒப்பிட்டுச் சொன்னார், அந்நாட்களில் ஆடுகளைத் திருட வருகிறவர்கள் தனியாக வர மாட்டார்கள், குறைந்தது இருவர் இருப்பார்கள், அதில் ஒருவனுக்கு பேர் கள்ளன், மற்றவர்களுக்கு பெயர் கொள்ளைக்காரர்கள், முதலாவது அந்த கள்ளன் ஆடுகள் இருக்கும் தொழுவத்தை கன்னமிட்டு ஒரு துவாரத்தை கண்டு பிடிப்பான், அதன்பின்பு அந்த துவாரத்தின் வழியாக உள்ளே சென்று ஒவ்வொரு ஆடாக வெளியே கொடுக்க, வெளியே இருக்கும் கொள்ளைக்காரன் அதை எடுத்துக் கொண்டு போவான்.
மறுநாள் ஆட்டுக்கு உரிமையாளர் வந்து பார்க்கும் பொழுது, அந்த துவாரத்தை மாத்திரம் பார்த்து, ஆடுகள் திருடப்பட்டிருப்பதை கண்டு வருத்தம் கொள்வான், ஆனால் கள்ளனும் கொள்ளைக்காரனும் அங்கிருக்க மாட்டார்கள்.
இதை ஒரு உதாரணமாக சொல்லி, கர்த்தர் தன்னுடைய திருத்துவதை விளக்கிச் சொன்னார், எப்படியெனில் தன்னை வாசல் என்றும், நீங்கள் என்னை காண்கிறீர்கள், ஆனால் என்னோடு மேய்ப்பன் மற்றும் வாசலைக் காக்கிறவர் என இருவர் இருக்கிறார்கள், அவர்களையும் நீங்கள் அறிந்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சொன்னார்.
அதனால் தான் தேவன் நோவாவிடம் மூன்று அடுக்குள்ள பேழையை செய்யச் சொன்னார், அதாவது வாசலுள்ள மேலடுக்கு, அதின் வழியாக உட்பிரவேசிக்கும் பொழுது, நாம் மூன்று அடுக்குகளையும் சுதந்தரித்துக் கொள்ளலாம் -.நீ பேழைக்கு ஓர் ஜன்னலை உண்டுபண்ணி, மேல்தட்டுக்கு ஒரு முழத் தாழ்த்தியிலே அதைச் செய்துமுடித்து, பேழையின் கதவை அதின் பக்கத்தில் வைத்து, கீழ் அறைகளையும், இரண்டாம் தட்டின் அறைகளையும், மூன்றாம் தட்டின் அறைகளையும் பண்ணவேண்டும் - ஆதியாகமம் 6:16
மூவரின் மரணத்தை சொன்ன கர்த்தர்
இதை சொல்லி, சிலுவையில் வார்த்தையானவரின் குமாரனோடு, பிதாவானவரின் குமாரனும், பரிசுத்த ஆவியானவரின் குமாரனும் மரிக்க வேண்டும் என்பதை இப்படி விளக்கிச் சொன்னார், முதலாவது வார்த்தையானவரின் குமாரன், நாம் நித்திய வீடு என்கிற பரலோக தேவனை சேர்ந்தடையும் வாசலாக இருக்கிறார் என்பதையும், நமக்காக தன் ஜீவனையும் கொடுப்பவர் என்று சொன்னார் - 9.நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான். 10.திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன் - யோவான் 10:7-10
அதற்கு பின்பு, தனக்குள் வாசம் செய்யும் பரிசுத்த ஆவியானவரின் குமாரனை, ஓநாய்களை கண்டு ஓடிப்போகாத நல்ல மேய்ப்பன் என்றும் [அதாவது வெள்ளம்போல் சத்துரு வரும்போது அவனுக்கு விரோதமாய்க் கொடியேற்றுகிற கர்த்தருடைய ஆவியானவர்] அவரும் சிலுவையில் தன் ஜீவனை தர போகிறார் என்று சொன்னார் - 11.நானே நல்ல மேய்ப்பன்: நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான். 12.மேய்ப்பனாயிராதவனும், ஆடுகள் தனக்குச் சொந்தமல்லாதவனுமான கூலியாள் ஓநாய் வருகிறதைக் கண்டு ஆடுகளைவிட்டு ஓடிப்போகிறான்; அப்பொழுது ஓநாய் ஆடுகளைப்பீறி, அவைகளைச் சிதறடிக்கும். 13.கூலியாள் கூலிக்காக வேலைசெய்கிறவனாகையால் ஓடிப்போகிறான், ஆடுகளுக்காக அவன் கவலைப்படான் - யோவான் 10:11-13
அடுத்ததாக, தனக்குள் வாசம் செய்யும் பிதாவானவரின் குமாரனை, நம்மை இழுத்துக் கொள்ளுகிற நல்ல மேய்ப்பன் என்றும், அவரும் சிலுவையில் தன் ஜீவனை தர போகிறார் என்று சொன்னார் - 14.நானே நல்ல மேய்ப்பன்; பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும், 15.நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன். 16.இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு; அவைகளையும் நான் கொண்டுவரவேண்டும், அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும், அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும். 17.நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்துகொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார். 18.ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார் - யோவான் 10:14-18
அதனால் தான் சங்கீதகாரனாகிய தாவீது, வார்த்தையானவரின் குமாரனை "வாசல்" என்று சொல்லி, அவரோடு இருக்கும் பிதாவானவரின் குமாரனை "மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார்" என்று சொல்லி, மறுபடியுமாக "மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார்" என்று பரிசுத்த ஆவியானவரின் குமாரனை குறித்துச் சொன்னார் - 3.யார் கர்த்தருடைய பர்வதத்தில் ஏறுவான்? யார் அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் நிலைத்திருப்பான்? 4.கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் மாசில்லாதவனுமாயிருந்து, தன் ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடாமலும், கபடாய் ஆணையிடாமலும் இருக்கிறவனே. 5.அவன் கர்த்தரால் ஆசீர்வாதத்தையும், தன் இரட்சிப்பின் தேவனால் நீதியையும் பெறுவான். 6.இதுவே அவரைத் தேடி விசாரித்து, அவருடைய சமுகத்தை நாடுகிற யாக்கோபு என்னும் சந்ததி. (சேலா.) 7.வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே, உயருங்கள்; மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார். 8.யார் இந்த மகிமையின் ராஜா? அவர் வல்லமையும் பராக்கிரமமுமுள்ள கர்த்தர்; அவர் யுத்தத்தில் பராக்கிரமமுமுள்ள கர்த்தராமே. 9.வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே, உயருங்கள்; மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார். 10.யார் இந்த மகிமையின் ராஜா? அவர் சேனைகளின் கர்த்தரானவர்; அவரே மகிமையின் ராஜா. (சேலா.) - சங்கீதம் 24:3-10
அடுத்த பாகம்: போஜனபானம்பண்ணுகிறவராய் வந்தார்