பரலோக தேவனாம் இயேசு கிறிஸ்து, செபெதேயுவின் குமாரனாகிய யாக்கோபு மற்றும் யோவானை பொவனெர்கேஸ் என்று அழைத்த பொழுது, ஏன் தங்களை அப்படி அழைத்தார் என்பதை அறிந்திருக்க வாய்ப்பில்லை - செபெதேயுவின் குமாரனாகிய யாக்கோபு, யாக்கோபின் சகோதரனாகிய யோவான், இவ்விருவருக்கும் இடிமுழக்க மக்களென்று அர்த்தங்கொள்ளும் பொவனெர்கேஸ் என்கிற பெயரிட்டார் - மாற்கு 3:17
ஆனால் யாக்கோபும் யோவானும் தங்களுக்கு கர்த்தர் பொவனெர்கேஸ் என்று பெயரிட்டதை, அதாவது இடிமுழக்க மக்களென்று என்று அழைத்ததை தவறாக புரிந்துக் கொண்டு ஒருமுறை வானத்திலிருந்து அக்கினியை வரவழைத்து மற்றவர்களை அழிக்க பார்த்தார்கள் - 51.பின்பு, அவர் எடுத்துக்கொள்ளப்படும் நாட்கள் சமீபித்தபோது, அவர் எருசலேமுக்குப் போகத் தமது முகத்தைத் திருப்பி, 52.தமக்கு முன்னாகத் தூதர்களை அனுப்பினார். அவர்கள் போய், அவருக்கு இடத்தை ஆயத்தம்பண்ணும்படி சமாரியருடைய ஒரு கிராமத்திலே பிரவேசித்தார்கள். 53.அவர் எருசலேமுக்குப் போக நோக்கமாயிருந்தபடியினால் அவ்வூரார் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. 54.அவருடைய சீஷராகிய யாக்கோபும் யோவானும் அதைக் கண்டபோது: ஆண்டவரே, எலியா செய்ததுபோல, வானத்திலிருந்து அக்கினி இறங்கி இவர்களை அழிக்கும்படி நாங்கள் கட்டளையிட உமக்குச் சித்தமா என்று கேட்டார்கள். 55.அவர் திரும்பிப்பார்த்து: நீங்கள் இன்ன ஆவியுள்ளவர்களென்பதை அறியீர்கள் என்று அதட்டி, 56.மனுஷகுமாரன் மனுஷருடைய ஜீவனை அழிக்கிறதற்கு அல்ல, இரட்சிக்கிறதற்கே வந்தார் என்றார். அதன்பின்பு அவர்கள் வேறொரு கிராமத்துக்குப் போனார்கள் - லூக்கா 9:51-56
இப்படி பொவனெர்கேஸ் என்று அழைத்த இயேசு கிறிஸ்து, தான் சிலுவைக்குப் போகும் முன்பு தான் அளித்த வரத்தை யோவானுக்கு விளங்க செய்தார், எப்படியெனில், பிதா இடிமுழக்க சத்தத்தில் இயேசு கிறிஸ்துவுக்கு பதிலளித்த பொழுது, எல்லோரும் இது இடிமுழக்க சத்தம் என்றார்கள், ஆனால் பொவனெர்கேஸ் என்று அழைக்கப்பட்ட யோவானோ அந்த இடிமுழக்க சத்தத்தை வியாக்கியானம் செய்து "மகிமைப்படுத்தினேன், இன்னமும் மகிமைப்படுத்துவேன்" என்று அதின் அர்த்தத்தை அறிந்துக் கொண்டார், அதனால் தான் இதன் அர்த்தம் யோவான் புஸ்தகத்தில் மாத்திரம் சொல்லப்பட்டுள்ளது - 24.மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும். 25.தன் ஜீவனைச் சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்; இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அவன் அதை நித்திய ஜீவகாலமாய்க் காத்துக்கொள்ளுவான். 26.ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்; ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார். 27.இப்பொழுது என் ஆத்துமா கலங்குகிறது, நான் என்ன சொல்லுவேன். பிதாவே, இந்த வேளையினின்று என்னை இரட்சியும் என்று சொல்வேனோ; ஆகிலும், இதற்காகவே இந்த வேளைக்குள் வந்தேன். 28.பிதாவே, உமது நாமத்தை மகிமைப்படுத்தும் என்றார். அப்பொழுது: மகிமைப்படுத்தினேன், இன்னமும் மகிமைப்படுத்துவேன் என்கிற சத்தம் வானத்திலிருந்து உண்டாயிற்று. 29.அங்கே நின்று கொண்டிருந்து, அதைக் கேட்ட ஜனங்கள்: இடிமுழக்கமுண்டாயிற்று என்றார்கள். வேறுசிலர்: தேவதூதன் அவருடனே பேசினான் என்றார்கள். 30.இயேசு அவர்களை நோக்கி: இந்தச் சத்தம் என்னிமித்தம் உண்டாகாமல் உங்கள் நிமித்தமே உண்டாயிற்று - யோவான் 12:24-30
கர்த்தர் ஏன் இந்த வரத்தை யோவானுக்கு கொடுத்தார்? கர்த்தருக்குத் தெரியும் அப்போஸ்தலனாகிய யோவான் தன் முதிர் வயதிலே பத்மு தீவிலிருந்து பிதாவின் சத்தத்தை கேட்டு வெளிப்படுத்தின விசேஷம் புஸ்தகத்தை எழுத வேண்டும் என்று, அதனால் தான் யோவானை பொவனெர்கேஸ் என்று அழைத்து, பயிற்சியும் கொடுத்தார் - 10.அப்பொழுது வானத்திலே ஒரு பெரிய சத்தமுண்டாகி: இப்பொழுது இரட்சிப்பும் வல்லமையும் நமது தேவனுடைய ராஜ்யமும், அவருடைய கிறிஸ்துவின் அதிகாரமும் உண்டாயிருக்கிறது; இரவும் பகலும் நம்முடைய தேவனுக்குமுன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ் சுமத்தும்பொருட்டு அவர்கள் மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தாழத் தள்ளப்பட்டுப்போனான். 11.மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள். 12.ஆகையால் பரலோகங்களே! அவைகளில் வாசமாயிருக்கிறவர்களே! களிகூருங்கள். பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு ஆபத்துவரும் என்று சொல்லக்கேட்டேன் - வெளி 12:10-12
பத்மு தீவிலே உண்டான அந்த சத்தம் மற்றவர்களுக்கு அது ஒரு எக்காளசத்தம் அல்லது இடிமுழக்க சத்தம் போல் தான் இருந்திருக்கும், ஆனால் யோவானுக்கோ அது ஒரு பரலோகத்தின் பாஷையாக வெளிப்பட்டது - கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது எனக்குப் பின்னாலே எக்காளசத்தம்போன்ற பெரிதான ஒரு சத்தத்தைக் கேட்டேன் - வெளிப்படுத்தின விசேஷம் 1:10
இவைகளுக்குப்பின்பு, இதோ, பரலோகத்தில் திறக்கப்பட்டிருந்த ஒரு வாசலைக் கண்டேன். முன்னே எக்காளசத்தம்போல என்னுடனே பேச நான் கேட்டிருந்த சத்தமானது: இங்கே ஏறிவா, இவைகளுக்குப்பின்பு சம்பவிக்கவேண்டியவைகளை உனக்குக் காண்பிப்பேன் என்று விளம்பினது - வெளிப்படுத்தின விசேஷம் 4:1
6.அப்பொழுது திரளான ஜனங்கள் இடும் ஆரவாரம்போலவும், பெருவெள்ள இரைச்சல்போலவும், பலத்த இடிமுழக்கம்போலவும், ஒரு சத்தமுண்டாகி: அல்லேலூயா, சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ராஜ்யபாரம்பண்ணுகிறார். 7.நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதிசெலுத்தக்கடவோம். ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள் என்று சொல்லக்கேட்டேன். 8.சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம் தரித்துக்கொள்ளும்படி அவளுக்கு அளிக்கப்பட்டது; அந்த மெல்லிய வஸ்திரம் பரிசுத்தவான்களுடைய நீதிகளே. 9.பின்னும், அவன் என்னை நோக்கி: ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள் என்றெழுது என்றான். மேலும், இவைகள் தேவனுடைய சத்தியமான வசனங்கள் என்று என்னுடனே சொன்னான் - வெளி 19:6-9
தேவன் யோவானை பயன்படுத்திய விதம்
இயேசு கிறிஸ்து, பல்வேறு கால கட்டங்களில் ஜனங்களுக்கு செய்த உபதேசங்களை, அப்போஸ்தலனாகிய மத்தேயு, தேவ ஆவியானவரின் ஏவுதலின் படி ஒன்றாய் தொகுத்து மலை பிரசங்கமாக மத்தேயுவின் புஸ்தகம் 5, 6, 7ம் அதிகாரங்களில் எழுதியுள்ளார், அதே போல இயேசு கிறிஸ்து தான் சிலுவைக்கு போகும் முன்பு தன்னுடைய சீஷர்களுக்கு செய்த போதனைகளை தேவ ஆவியானவரின் உதவியுடன் அப்போஸ்தலனாகிய யோவான் 13, 14, 15, 16, 17ம் அதிகாரங்களில் எழுதியுள்ளார்.
யாக்கோபை காட்டிலும் யோவானின் ஊழியம், நிச்சியமாகவே ஒரு கனி தருகிற ஊழியமாக இருந்தது, பரிசுத்த வேதாகமத்தில் யோவான், 1 யோவான், 2 யோவான், 3 யோவான், மற்றும் வெளிப்படுத்தின விசேஷம் என 5 புஸ்தகங்கள் இந்த யோவான் எழுதினதாய் இருக்கிறது, இது எப்படியாயிற்று?
யாக்கோபு மற்றும் யோவான் இரண்டு பேருமே ஒரே தாய் தகப்பனுக்கு பிறந்தவர்கள், இரண்டு பேருமே ஒரே நேரத்தில் இந்த உலக காரியங்களை உதறிவிட்டு கர்த்தரின் ஊழியத்திற்கு வந்தவர்கள் - 16.அவர் கலிலேயாக் கடலோரமாய் நடந்துபோகையில், மீன்பிடிக்கிறவர்களாயிருந்த சீமோனும், அவன் சகோதரன் அந்திரேயாவும் கடலில் வலைபோட்டுக்கொண்டிருக்கிறபோது அவர்களைக் கண்டார். 17.இயேசு அவர்களை நோக்கி: என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார். 18.உடனே அவர்கள் தங்கள் வலைகளைவிட்டு, அவருக்குப் பின்சென்றார்கள். 19.அவர் அவ்விடம் விட்டுச் சற்று அப்புறம் போனபோது, செபெதேயுவின் குமாரன் யாக்கோபும் அவன் சகோதரன் யோவானும் படவிலே வலைகளைப் பழுது பார்த்துக்கொண்டிருக்கிறதைக் கண்டு, 20.உடனே அவர்களையும் அழைத்தார்; அப்பொழுது அவர்கள் தங்கள் தகப்பனாகிய செபெதேயுவைக் கூலியாட்களோடு படவிலே, விட்டு அவருக்குப் பின்சென்றார்கள் - மாற்கு 1:16-20
இரண்டு பேருமே ஒரே நேரத்தில் அப்போஸ்தலர்களாக தெரிந்தெடுக்கப்பட்டிருந்தவர்கள் - 12.அந்நாட்களிலே, அவர் ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இராமுழுதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார். 13.பொழுது விடிந்தபோது, அவர் தம்முடைய சீஷர்களை வரவழைத்து, அவர்களில் பன்னிரண்டுபேரைத் தெரிந்துகொண்டு, அவர்களுக்கு அப்போஸ்தலர் என்று பேரிட்டார். 14.அவர்கள் யாரெனில், பேதுரு என்று தாம் பேரிட்ட சீமோன், அவன் சகோதரனாகிய அந்திரேயா, யாக்கோபு, யோவான், பிலிப்பு, பர்த்தொலொமேயு, 15.மத்தேயு, தோமா, அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபு, செலோத்தே என்னப்பட்ட சீமோன், 16.யாக்கோபின் சகோதரனாகிய யூதா, துரோகியான யூதாஸ்காரியோத்து என்பவர்களே - லூக்கா 6:12-16
யாக்கோபு மற்றும் யோவான் இரண்டு பேருமே இயேசு கிறிஸ்துவின் மறுரூப மகிமையை தரிசித்தவர்கள் - 1.ஆறுநாளைக்குப் பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவனுடைய சகோதரனாகிய யோவானையும் கூட்டிக்கொண்டு தனித்திருக்கும்படி உயர்ந்த மலையின்மேல் போய், 2.அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார்; அவர் முகம் சூரியனைப்போலப் பிரகாசித்தது, அவர் வஸ்திரம் வெளிச்சத்தைப்போல வெண்மையாயிற்று. 3.அப்பொழுது மோசேயும், எலியாவும் அவரோடே பேசுகிறவர்களாக அவர்களுக்குக் காணப்பட்டார்கள். 4.அப்பொழுது பேதுரு இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது; உமக்குச் சித்தமானால், இங்கே உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவுக்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்றான். 5.அவன் பேசுகையில், இதோ, ஒளியுள்ள ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது. இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று. 6.சீஷர்கள் அதைக் கேட்டு, முகங்குப்புற விழுந்து, மிகவும் பயந்தார்கள். 7.அப்பொழுது, இயேசு வந்து, அவர்களைத் தொட்டு: எழுந்திருங்கள், பயப்படாதேயுங்கள் என்றார். 8.அவர்கள் தங்கள் கண்களை ஏறெடுத்துப்பார்க்கையில் இயேசுவைத்தவிர வேறொருவரையும் காணவில்லை - மத்தேயு 17:1-8
யாக்கோபு மற்றும் யோவான் இரண்டு பேருமே, இயேசு கிறிஸ்து ஜெபஆலயத்தலைவனுடைய மகளை உயிருடன் எழுப்பினதை கண்டு, கர்த்தரின் வல்லமையை அறிந்தவர்கள் - 35.அவர் இப்படிப்பேசிக்கொண்டிருக்கையில், ஜெபஆலயத்தலைவனுடைய வீட்டிலிருந்து சிலர் வந்து: உம்முடைய குமாரத்தி மரித்துப்போனாள், இனி ஏன் போதகரை வருத்தப்படுத்துகிறீர் என்றார்கள். 36.அவர்கள் சொன்ன வார்த்தையை இயேசு கேட்டவுடனே, ஜெபஆலயத்தலைவனை நோக்கி: பயப்படாதே, விசுவாசமுள்ளவனாயிரு என்று சொல்லி; 37.பேதுருவையும், யாக்கோபையும், யாக்கோபின் சகோதரன் யோவானையும் தவிர, வேறொருவரும் தம்மோடே வருகிறதற்கு இடங்கொடாமல்; 38.ஜெபஆலயத்தலைவனுடைய வீட்டிலே வந்து, சந்தடியையும் மிகவும் அழுது புலம்புகிறவர்களையும் கண்டு, 39.உள்ளே பிரவேசித்து: நீங்கள் சந்தடிபண்ணி அழுகிறதென்ன? பிள்ளை மரிக்கவில்லை, நித்திரையாயிருக்கிறாள் என்றார். 40.அதற்காக அவரைப் பார்த்து நகைத்தார்கள். எல்லாரையும் அவர் வெளியே போகப்பண்ணி, பிள்ளையின் தகப்பனையும் தாயையும், தம்மோடே வந்தவர்களையும் அழைத்துக்கொண்டு, பிள்ளையிருந்த இடத்தில் பிரவேசித்து, 41.பிள்ளையின் கையைப் பிடித்து: தலீத்தாகூமி என்றார்; அதற்கு, சிறுபெண்ணே எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்று அர்த்தமாம். 42.உடனே சிறுபெண் எழுந்து நடந்தாள்; அவள் பன்னிரண்டு வயதுள்ளவளாயிருந்தாள். அவர்கள் மிகுந்த ஆச்சரியப்பட்டுப் பிரமித்தார்கள். அதை ஒருவருக்கும் அறிவியாதபடி அவர்களுக்கு உறுதியாகக் கட்டளையிட்டு, அவளுக்கு ஆகாரங்கொடுக்கும்படி சொன்னார் - மாற்கு 5:35-42
யாக்கோபு மற்றும் யோவான் இரண்டு பேருக்கும், அவர்களின் தாய் கர்த்தரிடம் வேண்டுதல் செய்தாள் - 20.அப்பொழுது, செபெதேயுவின் குமாரருடைய தாய் தன் குமாரரோடுகூட அவரிடத்தில் வந்து, அவரைப் பணிந்துகொண்டு: உம்மிடத்தில் ஒரு விண்ணப்பம் பண்ணவேண்டும் என்றாள். 21.அவர் அவளை நோக்கி: உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு அவள்: உம்முடைய ராஜ்யத்திலே என் குமாரராகிய இவ்விரண்டுபேரில் ஒருவன் உமது வலது பாரிசத்திலும், ஒருவன் உமது இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி அருள் செய்யவேண்டும் என்றாள். 22.இயேசு பிரதியுத்தரமாக: நீங்கள் கேட்டுக்கொள்ளுகிறது இன்னது என்று உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும், நான் பெறும் ஸ்நானத்தை நீங்கள் பெறவும் உங்களால் கூடுமா என்றார். அதற்கு அவர்கள் கூடும் என்றார்கள். 23.அவர் அவர்களை நோக்கி: என் பாத்திரத் தில் நீங்கள் குடிப்பீர்கள், நான் பெறும் ஸ்நானத்தையும் நீங்கள் பெறுவீர்கள்; ஆனாலும், என் வலது பாரிசத்திலும் என் இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி என் பிதாவினால் எவர்களுக்கு ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கேயல்லாமல், மற்றொருவருக்கும் அதை அருளுவது என் காரியமல்ல என்றார். 24.மற்றப் பத்துப்பேரும் அதைக்கேட்டு, அந்த இரண்டு சகோதரர்பேரிலும் எரிச்சலானார்கள் - மத்தேயு 20:20-24
ஆனால், ஒவ்வொரு கால கட்டத்திலும், யோவான் அதிகமாய் பயன்படுத்தப்பட்டதை பார்க்க முடிகிறது, நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, தன்னுடைய சிலுவை பாடுகளின் மத்தியில், தன் ஜீவனை விடும் கடைசி வினாடிகளில் யோவானோடு பேசினதை பார்க்கிறோம் - 26.அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார். 27.பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார். அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான். 28.அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன் என்றார். 29.காடி நிறைந்த பாத்திரம் அங்கே வைக்கப்பட்டிருந்தது; அவர்கள் கடற்காளானைக் காடியிலே தோய்த்து, ஈசோப்புத்தண்டில் மாட்டி, அவர் வாயினிடத்தில் நீட்டிக்கொடுத்தார்கள். 30.இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார் - யோவான் 19:26-30
மேலும், நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, உயிர்த்தெழுந்த பின்பும் யோவானை குறித்துப் பேசினதை பார்க்கிறோம் - 21.அவனைக் கண்டு, பேதுரு இயேசுவை நோக்கி: ஆண்டவரே, இவன் காரியம் என்ன என்றான். 22.அதற்கு இயேசு: நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால், உனக்கென்ன, நீ என்னைப் பின்பற்றிவா என்றார். 23.ஆகையால் அந்தச் சீஷன் மரிப்பதில்லையென்கிற பேச்சு சகோதரருக்குள்ளே பரம்பிற்று. ஆனாலும், அவன் மரிப்பதில்லையென்று இயேசு சொல்லாமல், நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால் உனக்கென்னவென்று சொன்னார் - யோவான் 21:21-23
இப்படி யாக்கோபு மற்றும் யோவான் இரண்டு பேரும் ஒன்றாய் ஊழியம் செய்த பொழுது, ஊழியத்தின் துவக்கத்திலேயே யாக்கோபு கொலை செய்யப்பட்டு விட்டார், யாக்கோபின் மரணம் யோவானை நிச்சயம் சோர்வடைய செய்திருக்கும், ஆனால் அதனையும் தாண்டி எப்படி யோவானால் தொடர்ந்து ஊழியம் செய்ய முடிந்தது? - 1.அக்காலத்திலே ஏரோதுராஜா சபையிலே சிலரைத் துன்பப்படுத்தத் தொடங்கி; 2.யோவானுடைய சகோதரனாகிய யாக்கோபைப் பட்டயத்தினாலே கொலைசெய்தான். 3.அது யூதருக்குப் பிரியமாயிருக்கிறதென்று அவன் கண்டு, பேதுருவையும் பிடிக்கத்தொடர்ந்தான். அப்பொழுது புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாட்களாயிருந்தது - அப்போஸ்தலர் 12:1-3
யாக்கோபை காட்டிலும் யோவான் அதிகமாய் பயன்படுத்தப்பட்டதெப்படி? அதிகமான கனிகளை கொடுக்க முடிந்தது?
இதற்கு காரணம், யோவான் பிறந்த குடும்பம் என்று சொல்ல முடியாது, ஏனென்றால் யாக்கோபு யோவான் இரண்டு பேருமே ஒரே குடும்பத்தில் பிறந்தவர்கள், இதற்கு காரணம், யோவான் பிறந்த கோத்திரம்[ஜாதி] என்றும் சொல்ல முடியாது, காரணம் யாக்கோபு யோவான் இரண்டு பேருமே ஒரே கோத்திரத்தில் வந்தவர்கள் தான், யோவானின் ஊழிய அழைப்பு என்றும் சொல்ல முடியாது, காரணம் யாக்கோபு யோவான் இரண்டு பேருமே ஒரே நேரத்தில் ஒரே மாதிரியான ஊழியத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்கள், இதற்கு காரணம், யோவான் பெற்ற வரம் என்றும் சொல்ல முடியாது, காரணம் யாக்கோபு யோவான் இரண்டு பேருமே பொவனெர்கேஸ் என்று அழைக்கப்படும் மேலான வரமுடையவராய் இருந்தார்கள், இப்படி இந்த சகோதரர்களின் காரியங்கள் எல்லாமே ஒரே மாதிரியாய் இருக்கும் பொழுது, யோவானிடம் ஒரே ஒரு வித்தியாசம் காணப்பட்டது, அது என்னவென்றால், அவர் இயேசுவை நேசிக்கிறவராகவும் கர்த்தரின் மார்பினிலே சாய்ந்து இளைப்பாறுகிறவராகவும் இருந்தார், அதுவே யோவானை கனி கொடுப்பவராய் மாற்றினது - 23.அந்தச் சமயத்தில் அவருடைய சீஷரில் இயேசுவுக்கு அன்பானவனாயிருந்த ஒருவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டிருந்தான். 24.யாரைக்குறித்துச் சொல்லுகிறாறென்று விசாரிக்கும்படி சீமோன்பேதுரு அவனுக்குச் சைகைகாட்டினான். 25.அப்பொழுது அவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டு: ஆண்டவரே, அவன் யார் என்றான் - யோவான் 13:23-25