கர்த்தர் தன்னுடைய ஊழிய நாட்களில், உறவினர் என்கிற போர்வையில் ஒருவரும் பின்பற்ற அனுமதிக்கவில்லை, உதாரணத்திற்கு, தன்னை சந்திக்க வந்த தன் தாயாரையும் சகோதரரையும், என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று கேட்டு அவர்களை அனுப்பி விட்டார் - 31.அப்பொழுது அவருடைய சகோதரரும், தாயாரும் வந்து, வெளியே நின்று, அவரை அழைக்கும்படி அவரிடத்தில் ஆள் அனுப்பினார்கள். 32.அவரைச் சுற்றிலும் உட்கார்ந்திருந்த ஜனங்கள் அவரை நோக்கி: இதோ, உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் வெளியே நின்று உம்மைத் தேடுகிறார்கள் என்றார்கள். 33.அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று சொல்லி, 34.தம்மைச்சூழ உட்கார்ந்திருந்தவர்களைச் சுற்றிப் பார்த்து: இதோ, என் தாயும் என் சகோதரரும் இவர்களே! 35.தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ அவனே எனக்குச் சகோதரனும், எனக்குச் சகோதரியும், எனக்குத் தாயுமாய் இருக்கிறான் என்றார் - மாற்கு 3:31-35
இயேசு கிறிஸ்துவின் சகோதரரும், கர்த்தருடைய ஊழியநாட்களில் அவருடன் இணைந்து செயல்பட வில்லை என்று வேதாகமம் சொல்லுகிறது - 2.யூதருடைய கூடாரப்பண்டிகை சமீபமாயிருந்தது. 3.அப்பொழுது அவருடைய சகோதரர் அவரை நோக்கி: நீர் செய்கிற கிரியைகளை உம்முடைய சீஷர்களும் பார்க்கும்படி, இவ்விடம்விட்டு யூதேயாவுக்குப் போம். 4.பிரபலமாயிருக்க விரும்புகிற எவனும் அந்தரங்கத்திலே ஒன்றையும் செய்யமாட்டான்; நீர் இப்படிப்பட்டவைகளைச் செய்தால் உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தும் என்றார்கள். 5.அவருடைய சகோதரரும் அவரை விசுவாசியாதபடியால் இப்படிச் சொன்னார்கள் - யோவான் 6:41-44
கர்த்தர் சீஷர்களுடன் பயணம் செய்தார் என்று வேதாகமம் சொல்லும் பொழுது, தகப்பனாக கருதப்பட்ட யோசேப்போ அல்லது தாயாகிய மரியாளோ, அல்லது அவருடைய சகோதரரோ கர்த்தருடன் பயணம் செய்யவில்லை என்பதை அறிந்துக் கொள்ளலாம், கர்த்தர் பேதுரு யாக்கோபு யோவானை மாத்திரம் அழைத்து கொண்டு போனார் என்று வேதாகமம் சொல்லும் பொழுது, தகப்பனாக கருதப்பட்ட யோசேப்போ அல்லது தாயாகிய மரியாளோ, அல்லது அவருடைய சகோதரரோ அங்கு இல்லை என்பதை அறிந்துக் கொள்ளலாம், அது போலவே, கர்த்தர் தனது ஊழியத்தின் கடைசி பயணமாக எருசலேமுக்கு வந்த பொழுதும், ஜனங்கள் ஓசன்னா! என்று ஆர்ப்பரித்த பொழுதும், யோசேப்போ அல்லது தாயாகிய மரியாளோ, அல்லது அவருடைய சகோதரரோ அங்கு இல்லை என்பதை அறிந்துக் கொள்ளலாம்.
இயேசு கிறிஸ்துவின் தகப்பனாக கருதப்பட்ட யோசேப்பு, அதாவது மரியாளின் புருஷனாகிய யோசேப்பு, இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் போது அங்கு இல்லை என்பது அனைவரும் அறிந்த விஷயம், எப்படியெனில் மத்தேயு, மாற்கு, லூக்கா, மற்றும் யோவான் என நான்கு சுவிசேஷ புஸ்தகத்திலும் யோசேப்பை குறித்து ஒன்றுமே சொல்லப்படவில்லை, அது போலவே, மரியாளும் சிலுவையின் அருகே இல்லை என்பதை மத்தேயு, மாற்கு, மற்றும் லூக்கா புஸ்தகங்கள் பறை சாற்றுகின்றன, எப்படியெனில், முதலாம் சுவிசேஷ புஸ்தகத்தை எழுதிய மத்தேயு, கர்த்தரின் சிலுவை மரணத்தின் போது அநேக ஸ்திரீகள் பார்த்துக்கொண்டிருந்தார்கள் என்று சொல்லி அவர்களில் மூன்று பேரை குறிப்பிட்டுச் சொன்னவர், இயேசுவின் தாயாகிய மரியாளை குறித்து ஒன்றுமே சொல்லவில்லை, ஒருவேளை இயேசுவின் தாயார் அங்கிருந்திருந்தால் அவர்களின் பெயரை தானே முதல் பெயராக குறிப்பிட்டிருப்பார் - 54.நூற்றுக்கு அதிபதியும், அவனோடேகூட இயேசுவைக் காவல் காத்திருந்தவர்களும், பூமியதிர்ச்சியையும் சம்பவித்த காரியங்களையும் கண்டு, மிகவும் பயந்து: மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன் என்றார்கள். 55.மேலும், இயேசுவுக்கு ஊழியஞ்செய்யும்படி கலிலேயாவிலிருந்து அவரோடே வந்திருந்த அநேக ஸ்திரீகள் அங்கே தூரத்திலே நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். 56.அவர்களுக்குள்ளே மகதலேனா மரியாளும், யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளும், செபெதேயுவின் குமாரருடைய தாயும் இருந்தார்கள் - மத்தேயு 27:54-56
இரண்டாவது சுவிசேஷ புஸ்தகத்தை எழுதிய மாற்கும், கர்த்தரின் சிலுவை மரணத்தின் போது, அங்கிருந்த ஸ்திரீகளில் மூன்று பேரை குறிப்பிட்டுச் சொன்னவர், இயேசுவின் தாயாகிய மரியாளை குறித்து ஒன்றும் சொல்லவில்லை, ஒரு வேளை கர்த்தரின் தாயாகிய மரியாள் அங்கிருந்திருந்தால், அவர்களின் பெயரை தானே முதல் பெயராக எழுதியிருப்பார்? மரியாள் அங்கு இல்லை என்பதை வலியுறுத்தவே தேவ ஆவியானவர் மாற்குவின் மூலமாகவும் இதை எழுதியுள்ளார் - 37.இயேசு மகா சத்தமாய்க் கூப்பிட்டு ஜீவனை விட்டார். 38.அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது. 39.அவருக்கு எதிரே நின்ற நூற்றுக்கு அதிபதி அவர் இப்படிக் கூப்பிட்டு ஜீவனை விட்டதைக் கண்டபோது: மெய்யாகவே இந்த மனுஷன் தேவனுடைய குமாரன் என்றான். 40.சில ஸ்திரீகளும் தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர் கலிலேயாவிலிருந்தபோது அவருக்குப் பின்சென்று ஊழியஞ்செய்துவந்த மகதலேனா மரியாளும், சின்ன யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும், 41.அவருடனேகூட எருசலேமுக்கு வந்திருந்த வேறே அநேக ஸ்திரீகளும் அவர்களோடே இருந்தார்கள் - மாற்கு 15:37-41
மூன்றாவது சுவிசேஷ புஸ்தகத்தை எழுதிய லூக்காவும், இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் போது, அங்கிருந்தவர்களை, கர்த்தருக்கு அறிமுகமானவர்கள் என்றும், மற்றும் கலிலேயாவிலிருந்து அவருக்குப் பின்சென்று வந்த ஸ்திரீகள் என்று இரண்டு சாராராக பிரித்து ழுதியுள்ளார், இதில் "இயேசுவின் தாயாகிய மரியாள்" கர்த்தருக்கு அறிமுகமானவர்களில் ஒருவராகவோ, அல்லது கலிலேயாவிலிருந்து அவருக்குப் பின்சென்று வந்த ஸ்திரீகளின் ஒருவராகவோ இருந்திருக்க வாய்ப்பே இல்லை - 46.இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனைவிட்டார். 47.நூற்றுக்கு அதிபதி சம்பவித்ததைக் கண்டு: மெய்யாகவே இந்த மனுஷன் நீதிபரனாயிருந்தான் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினான். 48.இந்தக் காட்சியைப் பார்க்கும்படி கூடிவந்திருந்த ஜனங்களெல்லாரும் சம்பவித்தவைகளைப் பார்த்தபொழுது, தங்கள் மார்பில் அடித்துக்கொண்டு திரும்பிப்போனார்கள். 49.அவருக்கு அறிமுகமானவர்களெல்லாரும், கலிலேயாவிலிருந்து அவருக்குப் பின்சென்று வந்த ஸ்திரீகளும் தூரத்திலே நின்று இவைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள் - லூக்கா 23:46-49
ஆனால், அதே லூக்கா, அப்போஸ்தலர் புஸ்தகத்தில், பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்திற்கு காத்திருந்தவர்களை பற்றி சொல்லும் பொழுது, "இயேசுவின் தாயாகிய மரியாள்" என்று சந்தேகத்திற்க்கு இடமில்லாத படி எழுதியுள்ளார், அப்படியென்றால் கர்த்தரின் சிலுவை மரணத்தின் சமயத்தில் "இயேசுவின் தாயாகிய மரியாள்" அங்கு இல்லை என்று தானே அர்த்தம் - 12.அப்பொழுது அவர்கள் எருசலேமுக்குச் சமீபமாய் ஒரு ஓய்வுநாள் பிரயாண தூரத்திலிருக்கிற ஒலிவமலை என்னப்பட்ட மலையிலிருந்து எருசலேமுக்குத் திரும்பிப்போனார்கள். 13.அவர்கள் அங்கே வந்தபோது மேல்வீட்டில் ஏறினார்கள்; அதில் பேதுருவும், யாக்கோபும், யோவானும், அந்திரேயாவும், பிலிப்பும், தோமாவும், பர்த்தொலொமேயும், மத்தேயும், அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபும், செலோத்தே என்னப்பட்ட சீமோனும், யாக்கோபின் சகோதரனாகிய யூதாவும் தங்கியிருந்தார்கள். 14.அங்கே இவர்களெல்லாரும், ஸ்திரீகளோடும் இயேசுவின் தாயாகிய மரியாளோடும், அவருடைய சகோதரரோடுங்கூட ஒருமனப்பட்டு, ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள் - அப்போஸ்தலர் 1:12-14
இப்படி முதல் மூன்று சுவிஷேச புஸ்தகங்கள், இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் போது "அவரின் தாயாகிய மரியாள்" அங்கு இல்லை என்று சாட்சி பகரும் பொழுது, கர்த்தருக்கு அன்பாயிருந்த யோவான், சிலுவையினருகே இயேசு கிறிஸ்துவின் தாயாரும் மற்றவர்களோடு நின்றுகொண்டிருந்ததாக எப்படி எழுதியுள்ளார்? இயேசுவின் சிலுவையினருகே அவருடைய தாயும், அவருடைய தாயின் சகோதரி கிலெயோப்பா மரியாளும், மகதலேனா மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள் - யோவான் 19:25
உவமையாக சொல்லப்பட்ட இந்த காரியம் ஒரு முக்கியமான விஷயத்தை அறிவிக்கிறது, அது என்னவென்றால், இயேசு கிறிஸ்துவின் சிலுவையினருகே நின்றுகொண்டிருந்த மற்ற எல்லாரை பார்க்கிலும் தாங்க முடியாத வேதனையுடன் ஒருவர் இருந்திருக்கிறார், அது இயேசு கிறிஸ்துவின் உண்மையான தாயாகிய பரலோகத்தின் தேவனே.
மரிக்கும் தருவாயிலிருந்த ஸ்தேவான், பரிசுத்தஆவியினாலே பரலோக தரிசனங்களை கண்டபொழுது, மரியாளும் யோசேப்புமா இயேசுவோடு இருந்தார்கள்? பரலோகத்தின் தேவனல்லவா இயேசுவோடு உடனிருந்தது - 55.அவன் பரிசுத்தஆவியினாலே நிறைந்ததவனாய், வானத்தை அண்ணாந்துபார்த்து, தேவனுடைய மகிமையையும், தேவனுடைய வலதுபாரிசத்தில் இயேசு நிற்கிறதையும் கண்டு: 56.அதோ வானங்கள் திறந்திருக்கிறதையும், மனுஷகுமாரன் தேவனுடைய வலதுபாரிசத்தில் நிற்கிறதையும் காண்கிறேன் என்றான் - அப்போஸ்தலர் 7:55-56
தொடர்ந்து படிக்க அதோ, உன் தாய்
முந்தைய பாகத்தை படிக்க ஸ்திரீயே என்று ஏன் அழைத்தார்?