முந்தைய பாகம்: என்னைத் தொடாதே
இயேசு கிறிஸ்து யோனாவின் மகனாகிய சீமோனுக்கு, ஏன் கேபா(பேதுரு) என்று பெயரிட்டார்? 35.மறுநாளிலே யோவானும் அவனுடைய சீஷரில் இரண்டுபேரும் நிற்கும்போது, 36.இயேசு நடந்துபோகிறதை அவன் கண்டு: இதோ, தேவ ஆட்டுக்குட்டி என்றான். 37.அவன் அப்படிச் சொன்னதை அவ்விரண்டு சீஷருங்கேட்டு, இயேசுவுக்குப் பின்சென்றார்கள். 38.இயேசு திரும்பி, அவர்கள் பின்செல்லுகிறதைக் கண்டு: என்ன தேடுகிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: ரபீ, நீர் எங்கே தங்கியிருக்கிறீர் என்று கேட்டார்கள்; ரபீ என்பதற்குப் போதகரே என்று அர்த்தமாம். 39.அவர்: வந்து பாருங்கள் என்றார். அவர்கள் வந்து அவர் தங்கியிருந்த இடத்தைக் கண்டு, அன்றையத்தினம் அவரிடத்தில் தங்கினார்கள். அப்பொழுது ஏறக்குறையப் பத்துமணி வேளையாயிருந்தது. 40.யோவான் சொன்னதைக் கேட்டு, அவருக்குப் பின்சென்ற இரண்டுபேரில் ஒருவன் சீமோன் பேதுருவின் சகோதரனாகிய அந்திரேயா என்பவன். 41.அவன் முதலாவது தன் சகோதரனாகிய சீமோனைக் கண்டு: மேசியாவைக் கண்டோம் என்று சொன்னான்; மேசியா என்பதற்குக் கிறிஸ்து என்று அர்த்தமாம். 42.பின்பு, அவனை இயேசுவினிடத்தில் கூட்டிக்கொண்டுவந்தான். இயேசு அவனைப் பார்த்து: நீ யோனாவின் மகனாகிய சீமோன், நீ கேபா என்னப்படுவாய் என்றார்; கேபா என்பதற்குப் பேதுரு(கல்) என்று அர்த்தமாம் - யோவான் 1:35-42
இன்று உலகமெங்கும் ஒவ்வொரு வினாடியும் கோடிக்கணக்கான ஜெபங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஏறெடுக்கப்படுகின்றன, இப்படி இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஜெபிப்பதே கிறிஸ்தவ ஜீவியத்தின் ஆதாரமாக இருக்கிறது, இதை முதலாவது செய்து காட்டியது பேதுருவே, சபைக்கு அடித்தளமான இந்த இரகசியத்தை பாறை என்று அழைக்கப்பட்ட பேதுருவின் மூலமாகவே தேவ ஆவியானவர் வெளிப்படுத்தினார் - 1.ஜெபவேளையாகிய ஒன்பதாம் மணி நேரத்திலே பேதுருவும் யோவானும் தேவாலயத்துக்குப் போனார்கள். 2.அப்பொழுது தன் தாயின் வயிற்றிலிருந்து சப்பாணியாய்ப் பிறந்த ஒரு மனுஷனைச் சுமந்துகொண்டு வந்தார்கள்; தேவாலயத்திலே பிரவேசிக்கிறவர்களிடத்தில் பிச்சைகேட்கும்படி, நாடோறும் அவனை அலங்கார வாசல் என்னப்பட்ட தேவாலய வாசலண்டையிலே வைப்பார்கள். 3.தேவாலயத்திலே பிரவேசிக்கப்போகிற பேதுருவையும் யோவானையும் அவன் கண்டு பிச்சைகேட்டான். 4.பேதுருவும் யோவானும் அவனை உற்றுப்பார்த்து: எங்களை நோக்கிப்பார் என்றார்கள். 5.அவன் அவர்களிடத்தில் ஏதாகிலும் கிடைக்குமென்று எண்ணி, அவர்களை நோக்கிப்பார்த்தான். 6.அப்பொழுது பேதுரு: வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை; என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்; நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொல்லி; 7.வலதுகையினால் அவனைப் பிடித்துத் தூக்கிவிட்டான்; உடனே அவனுடைய கால்களும் கரடுகளும் பெலன் கொண்டது. 8.அவன் குதித்தெழுந்து நின்று நடந்தான்; நடந்து, குதித்து, தேவனைத் துதித்துக்கொண்டு, அவர்களுடனேகூட தேவாலயத்திற்குள் பிரவேசித்தான் - அப்போஸ்தலர் 3:1-8
இந்தக் கல்லின்மேல் என் சபையைக்கட்டுவேன்
இயேசு கிறிஸ்து பேதுருவிடம் "இந்தக் கல்லின்மேல் என் சபையைக்கட்டுவேன்" என்று சொன்னதினால், பேதுருவை போல் ஒருவர் எப்பொழுதும் சபைக்கு தேவை என்று எண்ணி போப்பாண்டவர் என்கிற தலைமை பொறுப்பு கத்தோலிக்க மதத்தில் உருவாக்கப்பட்டது - 13.பின்பு, இயேசு பிலிப்பு செசரியாவின் திசைகளில் வந்தபோது, தம்முடைய சீஷரை நோக்கி: மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார். 14.அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான் ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறு சிலர் எரேமியா, அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள். 15.அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார். 16.சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான். 17.இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். 18.மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக்கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை. 19.பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார். 20.அப்பொழுது, தாம் கிறிஸ்துவாகிய இயேசு என்று ஒருவருக்கும் சொல்லாதபடிக்குத் தம்முடைய சீஷர்களுக்குக் கட்டளையிட்டார் - மத்தேயு 16:13-20
ஆனால் இயேசு கிறிஸ்து "இந்தக் கல்லின்மேல் என் சபையைக்கட்டுவேன்" என்று சொன்னது, பேதுருவை குறித்தா என்றால், அது யோசித்து பார்க்க வேண்டிய விஷயம் தான், காரணம் அடுத்த வசனத்திலேயே பேதுரு "சாத்தானே" என்றும் அழைக்கப்பட்டான், அப்படி இருக்கும் பொழுது, சபையானது எப்படி பேதுருவின் மேல் கட்டப்படும் - 21.அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் பல பாடுகள் பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லத்தொடங்கினார். 22.அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய்: ஆண்டவரே, இது உமக்கு நேரிடக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத் தொடங்கினான். 23.அவரோ திரும்பிப் பேதுருவைப் பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார் - மத்தேயு 16:21-23
இதை நன்றாய் ஆராய்ந்து பார்த்தால், இயேசு கிறிஸ்து "இந்தக் கல்லின்மேல் என் சபையைக்கட்டுவேன்" என்று சொன்னது பேதுருவின் மேல் கட்டுப்படும் சபையை குறித்து அல்ல, மாறாக பேதுருவுக்குள் இருந்த "இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன்" என்கிற விசுவாசத்தின் மேல் கட்டுப்படுவதையே குறித்ததாய் இருக்கிறது.
மேலும் சபையானது இயேசு கிறிஸ்துவுக்காகவும் அவரின் கட்டளைகளுக்காகவும் உழைக்கும் பொழுது மாத்திரமே "பாதாளத்தின் வாசல்கள் மேற்கொள்ளமுடியாது" என்கிற வாக்குத்தத்தை சுதந்தரித்துக் கொள்ளமுடியும்.
இயேசு கிறிஸ்து, கலிலேயாக் கடலோரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த யோனாவின் மகனாகிய சீமோனை, ஊழியத்திற்கு அழைத்து, அவனுக்கு "பேதுரு" என்று பெயரிட்டிருந்தார் - 40.யோவான் சொன்னதைக் கேட்டு, அவருக்குப் பின்சென்ற இரண்டுபேரில் ஒருவன் சீமோன் பேதுருவின் சகோதரனாகிய அந்திரேயா என்பவன். 41.அவன் முதலாவது தன் சகோதரனாகிய சீமோனைக் கண்டு: மேசியாவைக் கண்டோம் என்று சொன்னான்; மேசியா என்பதற்குக் கிறிஸ்து என்று அர்த்தமாம். 42.பின்பு, அவனை இயேசுவினிடத்தில் கூட்டிக்கொண்டுவந்தான். இயேசு அவனைப் பார்த்து: நீ யோனாவின் மகனாகிய சீமோன், நீ கேபா என்னப்படுவாய் என்றார்; கேபா என்பதற்குப் பேதுரு என்று அர்த்தமாம். 43.மறுநாளிலே இயேசு கலிலேயாவுக்குப்போக மனதாயிருந்து, பிலிப்புவைக்கண்டு: நீ எனக்குப் பின்சென்று வா என்றார் - யோவான் 1:40-43
இயேசு கிறிஸ்து தன்னை "யோனாவின் குமாரனாகிய சீமோனே" என்று அழைப்பதை பேதுருவும் விரும்பினார், அது பேதுருவுக்கு மிகப்பெரிய உற்சாகத்தையும் கொடுத்தது.
ஏனென்றால், இயேசு கிறிஸ்து வாழ்ந்த நசரேத்துக்கு மிக அருகாமையிலும், நசரேத்திலுருந்து கப்பர்நகூமுக்கு போகும் வழியில் காத்தேப்பேர் என்கிற ஊர் இருந்தது, அது மீனின் வயிற்றில் மூன்று நாள் இருந்த, பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசியாகிய யோனா வாழ்ந்த ஊர் - காத்தேப்பேர் ஊரானாகிய அமித்தாய் என்னும் தீர்க்கதரிசியின் குமாரன் யோனா என்னும் தம்முடைய ஊழியக்காரனைக்கொண்டு இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லியிருந்த வார்த்தையின்படியே, அவன்[யோவாசின் குமாரன் யெரொபெயாம்] ஆமாத்தின் எல்லை முதற்கொண்டு சமபூமியின் கடல்மட்டுமுள்ள இஸ்ரவேலின் எல்லைகளைத் திரும்பச் சேர்த்துக்கொண்டான் - II இராஜாக்கள் 14:25
கர்த்தருடைய தூதன் யோசேப்பை, தாவீதின் குமாரனாகிய யோசேப்பே என்று அழைத்த பொழுது, நம் எல்லோருக்கும் தெரியும் கர்த்தருடைய தூதனானவர் யோசேப்பின் காலத்திற்கு எறக்குறைய 800 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அவனுடைய மூதாதையராகிய தாவீது ராஜாவை குறிப்பிட்டு பேசுகிறார் என்று - 18.இயேசு கிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது: அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடி வருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது. 19.அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான். 20.அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது. 21.அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான் - மத்தேயு 1:18-21
அது போல தான், பேதுருவும் "யோனாவின் மகனாகிய சீமோனே" என்று அழைக்கப்பட்டார், மேலும் கர்த்தரால் பேதுரு என்று பெயரிடப்பட்டிருந்தாலும், கர்த்தர் தன்னுடைய ஊழிய நாட்களிலெல்லாம், "யோனாவின் குமாரனாகிய சீமோனே" என்று தான் பேதுருவை அழைத்து வந்தார் - 15.அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார். 16.சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான். 17.இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். 18.மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக்கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை. 19.பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார் - மத்தேயு 16:15-19
கர்த்தர் தன் சிலுவை மரணத்திற்கு முன்பு, கடைசியாக கெத்செமனே தோட்டத்திலும், பேதுருவை "சீமோனே" என்று தான் அழைத்தார் - 37.பின்பு அவர் வந்து, அவர்கள் நித்திரைபண்ணுகிறதைக்கண்டு, பேதுருவை நோக்கி: சீமோனே, நித்திரைபண்ணுகிறாயா? ஒரு மணிநேரம் நீ விழித்திருக்கக்கூடாதா? 38.நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார் - மாற்கு 14:32-38
முதல் முறையாக பேதுரு என்று அழைக்கப்பட்ட சீமோன்
இப்படி "யோனாவின் குமாரனாகிய சீமோன்" என்று உலக அடையாளத்தோடு அழைக்கப்பட்டு வந்தவர், கர்த்தரின் உயிர்த்தெழுதலுக்கு பின்பே வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட "பேதுரு" என்கிற பெயரால் அழைக்கப்பட்டார், அது நம் ரட்சகராகிய இயேசு கிறிஸ்து தன் சொந்த இரத்தத்தை சிந்தி உண்டாக்கின சிலுவையின் உடன்படிக்கையால் உண்டானது, அந்த பரிசுத்த இரத்தம் தன்னை தெரியாது என்று சொல்லி சபித்த சீமோனுக்காகவும் பரிந்து பேசினதினால் தான் பரலோகம் அவரை பேதுரு என்று அழைத்தது - 6.அவன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள், சிலுவையில் அறையப்பட்ட நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிர்த்தெழுந்தார்; அவர் இங்கேயில்லை; இதோ, அவரை வைத்த இடம். 7.நீங்கள் அவருடைய சீஷரிடத்திற்கும் பேதுருவினிடத்திற்கும் போய்: உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போகிறார், அவர் உங்களுக்குச் சொன்னபடியே அங்கே அவரைக் காண்பீர்கள் என்று, அவர்களுக்குச் சொல்லுங்கள் என்றான் - மாற்கு 16:6-7
ஆனால், அதற்கு பின்பும் கர்த்தர், கடைசியாக பேதுருவை "யோனாவின் குமாரனாகிய சீமோனே" என்று அழைத்தார், அதுவும் ஒருமுறை அல்ல மூன்று முறை "யோனாவின் குமாரனாகிய சீமோனே" என்று அழைத்து "நீ என்னை நேசிக்கிறாயா" என்று கேட்டார், அது கர்த்தர் பேதுருவிடம் நீ உன் மூதாதையராகிய யோனாவை நேசிக்கிறாயா? அல்லது, உனக்காக மரணத்தை ருசித்த என்னை நேசிக்கிறாயா? என்பதாகவே இருந்தது - 14.இயேசு மரித்தோரிலிருந்தெழுந்தபின்பு தம்முடைய சீஷருக்கு அருளின தரிசனங்களில் இது மூன்றாவது தரிசனம். 15.அவர்கள் போஜனம்பண்ணினபின்பு, இயேசு சீமோன்பேதுருவை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக என்றார். 16.இரண்டாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார். 17.மூன்றாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா என்றார். என்னை நேசிக்கிறாயா என்று அவர் மூன்றாந்தரம் தன்னைக் கேட்டபடியினாலே, பேதுரு துக்கப்பட்டு: ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்றான். இயேசு: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார் - யோவான் 21:14-17
அப்பொழுது பேதுரு, "நான் உம்மை நேசிக்கிறேன்" என்று தன் நாவினால் அறிக்கை செய்து, தன்னை முழுமையாக கர்த்தரின் ஊழியத்திற்கு ஒப்புக்குக் கொடுத்தார், தன்னை "யோனாவின் குமாரனாகிய சீமோன்" என்று சொல்லிக் கொள்ளாமல், தன்னை "இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பேதுரு" என்று சொல்லி வேதபுத்தகத்தையும் எழுதினார் - 1.இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பேதுரு, பொந்து, கலாத்தியா, கப்பத்தோக்கியா, ஆசியா, பித்தினியா தேசங்களிலே சிதறியிருக்கிறவர்களில், 2.பிதாவாகிய தேவனுடைய முன்னறிவின்படியே, ஆவியானவரின் பரிசுத்தமாக்குதலினாலே, கீழ்ப்படிதலுக்கும் இயேசுகிறிஸ்துவினுடைய இரத்தந் தெளிக்கப்படுதலுக்கும் தெரிந்துகொள்ளப்பட்ட பரதேசிகளுக்கு எழுதுகிறதாவது: கிருபையும் சமாதானமும் உங்களுக்குப் பெருகக்கடவது. 3.நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக - I பேதுரு 1:1-3
நாம் நம் பெயருடன், நமது படிப்பையோ, பதவியையோ, ஜாதியையோ, நாம் பிறந்த ஊரையோ அல்லது குடும்ப பெயரோ இணைத்திருப்பது, கர்த்தரை காட்டிலும் அதின் மேலிருக்கும் பற்றுதலாய் இருக்குமானால் சீர்படுத்திக் கொள்வோம்.
மேலும், இயேசு கிறிஸ்துவின் நாட்களில், இஸ்ரவேல் தேசத்தில் லட்சக் கணக்கான வாலிபர்கள் இருந்தார்கள், ஆனாலும் கர்த்தர் யோனாவின் குமாரனாகிய பேதுருவை தேடி வந்ததுக்கு ஒரு நோக்கம் உண்டு, அது யோனாவின் மேல் தேவனுக்கு இருந்த அன்பு தான், இப்படி கர்த்தர் யோனாவின் சந்ததியை 500 ஆண்டுகள் கழித்தும் பயன்படுத்துவார் என்றால், நாம் ஏன் நம் பிள்ளைகளை குறித்து கவலை கொள்ள வேண்டும்? கர்த்தருடைய பணியை மாத்திரம் தொடர்ந்து உற்சாகத்தோடு செய்வோம்.
அடுத்த பாகம்: பொவனெர்கேஸ்