எந்த ஒரு மனிதனாலும், அல்லது எந்த ஒரு படைப்பினாலும், நம்முடைய பாவங்களுக்கும் சாபங்களும் பரிகாரம் ஆக முடியாது, அதனால், தேவனே நம்முடைய பாவங்களைச் சுமந்து தீர்த்தாரென்று வேதாகமம் சொல்லுகிறது - 5.அவர் நம்முடைய பாவங்களைச் சுமந்து தீர்க்க வெளிப்பட்டாரென்று அறிவீர்கள்; அவரிடத்தில் பாவமில்லை. 6.அவரில் நிலைத்திருக்கிற எவனும் பாவஞ்செய்கிறதில்லை; பாவஞ்செய்கிற எவனும் அவரைக் காணவுமில்லை, அவரை அறியவுமில்லை - I யோவான் 3:5-6
அதனால் தான் தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்து சிலுவையைச் சுமந்துகொண்டார் என்று வேதாகமம் சொல்லுகிறது - அவர் தம்முடைய சிலுவையைச் சுமந்துகொண்டு, எபிரெயு பாஷையிலே கொல்கொதா என்று சொல்லப்படும் கபாலஸ்தலம் என்கிற இடத்திற்குப் புறப்பட்டுப்போனார் - யோவான் 19:17
காரியம் இப்படி இருக்க, சிரேனே ஊரானாகிய சீமோனும் சிலுவையை சுமந்தார் என்று வேதாகமம் சொல்வதின் அர்த்தம் என்ன? தேவனே செய்து முடிக்க வேண்டிய காரியத்தில் எப்படி ஒரு மனிதன் பங்கெடுக்க முடியும்? - 26.அவர்கள் இயேசுவைக் கொண்டுபோகிறபோது, நாட்டிலிருந்து வருகிற சிரேனே ஊரானாகிய சீமோன் என்கிற ஒருவனைப் பிடித்து, சிலுவையை அவர் பின்னே சுமந்துகொண்டுவரும்படி அதை அவன்மேல் வைத்தார்கள். 27.திரள்கூட்டமான ஜனங்களும் அவருக்காகப் புலம்பி அழுகிற ஸ்திரீகளும் அவருக்குப் பின்சென்றார்கள் - லூக்கா 23:26-27
ஏனென்றால், குமாரன் பலியாகும் பொழுது, தகப்பனாகிய ஆபிரகாமும் கட்டைகளை சுமக்க வேண்டியதாய் இருந்தது, இந்த தீர்க்கதரிசனத்தை தான், பிதாவாகிய தேவன், நாட்டிலிருந்து வருகிற சிரேனே ஊரானாகிய சீமோனாக சிலுவையை சுமந்து நிறைவேற்றினார், இல்லாவிட்டால் திடீரெனெ ஒருவர் வந்து ஏன் சிலுவையை சுமந்துக் கொண்டு செல்ல வேண்டும்? - ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, தன் கழுதையின்மேல் சேணங்கட்டி, தன் வேலைக்காரரில் இரண்டுபேரையும் தன் குமாரன் ஈசாக்கையும் கூட்டிக்கொண்டு, தகனபலிக்குக் கட்டைகளையும் பிளந்துகொண்டு, தேவன் தனக்குக் குறித்த இடத்திற்குப் புறப்பட்டுப்போனான் - ஆதியாகமம் 22:3
இல்லாவிட்டால், நம்முடைய பாவங்களை இயேசுவும் சிரேனே ஊரானாகிய சீமோன் என்கிற மனிதனும் சுமந்தார்கள் என்று தானே சொல்லப்பட வேண்டும், அது அப்படியல்ல, நம் மேல் வைத்த அன்பினால், பிதாவாகிய தேவனும் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவோடு நமக்காக பாடுபட்டார் என்கிற பரம இரகசியத்தை விளக்கவே இவைகள் எழுதப்பட்டுள்ளது.
தொடர்ந்து படிக்க சூரியன் இருளடைந்தது
முந்தைய பாகத்தை படிக்க கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும்