முந்தைய பாகம்: நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால்
மத்தேயு தன்னுடைய சுவிஷேச புஸ்தகத்தில், கர்த்தர் குஷ்டரோகியை சுகப்படுத்தின அற்புதத்தையும், நூற்றுக்கு அதிபதியின் வேலைக்காரனை சுகப்படுத்தின அற்புதத்தையும் அடுத்தடுத்து எழுதினத்திற்கு ஒரு காரணம் உண்டு, ஏனென்றால் இந்த இரண்டு அற்புதங்களையும் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது பல தேவ ரகசியங்களை அறிந்து கொள்ள முடியும்.
கர்த்தர் குஷ்டரோகியை சுகப்படுத்தின அற்புதத்தை குறித்து மத்தேயுவின் சுவிசேஷ புஸ்தகத்தில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது - 1.அவர் மலையிலிருந்து இறங்கினபோது, திரளான ஜனங்கள் அவருக்குப் பின்சென்றார்கள். 2.அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் வந்து அவரைப் பணிந்து: ஆண்டவரே! உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்றான். 3.இயேசு தமது கையை நீட்டி அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். உடனே குஷ்டரோகம் நீங்கி அவன் சுத்தமானான். 4.இயேசு அவனை நோக்கி: இதை நீ ஒருவருக்கும் சொல்லாதபடி எச்சரிக்கையாயிரு; ஆயினும், அவர்களுக்குச் சாட்சியாக நீ போய் ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, மோசே கட்டளையிட்ட காணிக்கையைச் செலுத்து என்றார் - மத்தேயு 8:1-4
அதனை தொடர்ந்து, கர்த்தர் நூற்றுக்கு அதிபதியின் வேலைக்காரனை சுகப்படுத்தின அற்புதத்தை குறித்து இவ்வாறு எழுதப்பட்டுள்ளது - 5.இயேசு கப்பர்நகூமில் பிரவேசித்தபோது, நூற்றுக்கு அதிபதி ஒருவன் அவரிடத்தில் வந்து: 6.ஆண்டவரே! என் வேலைக்காரன் வீட்டிலே திமிர்வாதமாய்க் கிடந்து கொடிய வேதனைப்படுகிறான் என்று அவரை வேண்டிக்கொண்டான். 7.அதற்கு இயேசு: நான் வந்து அவனைச் சொஸ்தமாக்குவேன் என்றார். 8.நூற்றுக்கு அதிபதி பிரதியுத்தரமாக: ஆண்டவரே! நீர் என் வீட்டுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல; ஒரு வார்த்தைமாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான். 9.நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தும், எனக்குக் கீழ்ப்பட்டிருக்கிற சேவகருமுண்டு; நான் ஒருவனைப் போவென்றால் போகிறான், மற்றொருவனை வாவென்றால் வருகிறான், என் வேலைக்காரனை, இதைச் செய் என்றால் செய்கிறான் என்றான். 10.இயேசு இதைக் கேட்டு ஆச்சரியப்பட்டு, தமக்குப் பின் செல்லுகிறவர்களை நோக்கி: இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 11.அநேகர் கிழக்கிலும் மேற்கிலுமிருந்து வந்து, பரலோகராஜ்யத்தில் ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களோடே பந்தியிருப்பார்கள். 12.ராஜ்யத்தின் புத்திரரோ புறம்பான இருளிலே தள்ளப்படுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்குமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 13.பின்பு இயேசு நூற்றுக்கு அதிபதியை நோக்கி: நீ போகலாம், நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகக்கடவது என்றார். அந்த நாழிகையிலே அவன் வேலைக்காரன் சொஸ்தமானான் - மத்தேயு 8:5-13
தொட்டு சுகமாக்கினீர் VS தொடாமலேயே சுகமாக்க உம்மால் கூடும்
இங்கு கர்த்தர் குஷ்டரோகியை தொட்டு சுகப்படுத்தினது ஒரு மிகப்பெரிய அற்புதம் தான், ஆனால் இந்த சாட்சியை கேட்டவர்களுக்கு கர்த்தர் தொட்டால் தான் சுகம் நடக்கும் என்கிற குறுகிய எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை, அப்படி தான் கர்த்தரோடு நூற்றுக்கு அதிபதியின் சென்று கொண்டிருந்த எல்லோரும் விசுவாசித்தர்கள், கர்த்தர் நூற்றுக்கு அதிபதியின் வீட்டுக்கு வர வேண்டும், அந்த திமிர்வாதகாரனை தொட்டால் சுகம் கிடைக்கும் கர்த்தரை அழைத்து சென்று கொண்டிருந்தார்கள்.
அப்படித்தான் நாமும் இருக்கிறோம், ஒரு சாட்சியை கேட்கும் போது தேவன் மேல் அளவுக்கு அதிகமான விசுவாசம் உள்ளவர்களாய் மாறுகிறோம், அந்த அற்புதத்தை போலவே என் வாழ்க்கையிலும் அற்புதம் செய்யும் என்று சொல்லி ஜெபிக்கிறோம், ஆனால் இங்கு அந்த நூற்றுக்கு அதிபதி நமக்கு ஒரு பாடத்தை சொல்லிக் கொடுக்கிறார், அது என்னவென்றால், அவன் கர்த்தரிடம் நீங்க அந்த குஷ்டரோகியை தொட்டு சுகப்படுத்தினது உண்மைதான், ஆனால் நீங்க சர்வ வல்லமையுள்ள தேவனாச்சே, உம்மால் தொடாமலும் சுகப்படுத்த முடியும் என்று வேண்டுதல் செய்தார் என்று பார்க்கிறோம், அது கர்த்தரை ஆச்சரியப்பட செய்தது மாத்திரமில்லாமல், அந்த நூற்றுக்கு அதிபதியின் வாழ்க்கையிலும் அற்புதத்தை செய்து முடித்தது என்று பார்க்கிறோம்.
மற்றவர்களின் சாட்சிகளை கேட்டு விசுவாசம் கொள்வது சந்தோஷமான விஷயம் தான், ஆனால் அந்த அற்புதத்தை போலவே எங்களுக்கு செய்யுங்க என்று சொல்லி சர்வ வல்லமையுள்ள தேவனை ஒரு குறுகிய வட்டத்திற்குள் நாம் கொண்டு வந்து விடக்கூடாது, அதை காட்டிலும் மேலான அற்புதத்தையும் தேவனால் செய்ய முடியும் என்று விசுவாசிக்க வேண்டும், அப்பொழுது தேவன் நமது விசுவாசத்தில் ஆச்சரியப்படுகிறவராய் மேலான அற்புதங்களை நம் வாழ்வில் செய்வார்.
சொல்லாதே VS நானே சொல்வேன்
மேலும் குஷ்டரோகியை சுகப்படுத்தின கர்த்தர், நீ ஒருவருக்கும் சொல்லாதபடி எச்சரிக்கையாயிரு என்று சொல்ல காரணம் என்ன? எந்த ஒரு தாயும் தன் பிள்ளைகளுக்கு செய்ததை மற்றவர்களிடம் சொல்லி சந்தோஷப்பட விரும்ப மாட்டாள், அது போல தான் நம் கர்த்தரும் இந்த குஷ்டரோகியை தொட்டு சுகமாக்கிவிட்டு "இதை நீ ஒருவருக்கும் சொல்லாதபடி எச்சரிக்கையாயிரு" என்றார், இன்றைக்கும் வயதானவர்கள் தங்களுக்கு விருப்பமான பேரக்குழந்தைக்கு இனிப்புகளை வாங்கி கொடுத்து விட்டு இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சொல்லுவதுண்டு, அதற்குள் மறைந்திருப்பது நம் மேல் தேவன் வைத்திருக்கும் மேலான அன்பே.
இங்கு அந்த நூற்றுக்கு அதிபதியின் வீட்டில் இன்னும் அற்புதம் நடக்கவில்லை, ஆனால், அவன் செய்த விசுவாச அறிக்கை, இது ஒரு பிள்ளை தன் தாயின் மேல் வைக்கும் நம்பிக்கைக்கு ஒப்பாகவே இருந்தது, அது கர்த்தரே நம் தேவன், அவரால் எல்லாம் கூடும் என்பதாகவும் இருந்தது, தன் பிள்ளைக்கு பாலூட்டுவதை மற்றவர்களுக்கு சொல்ல விரும்பாத தாயானவள், பிள்ளை தன்னை அம்மா என்று அழைக்கும் பொழுது எப்படி நெகிழ்ந்து போவாளோ, அது போலவே கர்த்தர் நூற்றுக்கு அதிபதியின் விசுவாசத்தை எல்லோரிடமும் "இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை" என்று சொல்லி ஆச்சரியப்பட்டார்.
அவரை ஊருக்குப் புறம்பே தள்ளி
நம்மை இரட்சிக்க இந்த பூமிக்கு வந்த தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை, நாசரேத்து ஊரார் இவன் யோசேப்பின் குமாரன் என்று சொன்னது கர்த்தரை எவ்வளவாய் துக்கப்படுத்தியது, இறுதியில் அந்த நாசரேத்து ஊரார் கர்த்தரை செங்குத்தான மலையின் சிகரத்திலிருந்து தலைகீழாய்த் தள்ளிவிடும்படிக்கு முயற்சித்தார்கள் என்பதை லூக்கா தன்னுடைய சுவிஷேச புஸ்தகத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் - 16.தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு அவர் வந்து, தம்முடைய வழக்கத்தின்படியே ஓய்வுநாளில் ஜெபஆலயத்திலே பிரவேசித்து, வாசிக்க எழுந்து நின்றார். 17.அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகம் அவரிடத்தில் கொடுக்கப்பட்டது. அவர் புஸ்தகத்தை விரித்தபோது: 18.கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும், 19.கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும், என்னை அனுப்பினார், என்று எழுதியிருக்கிற இடத்தை அவர் கண்டு, 20.வாசித்து, புஸ்தகத்தைச் சுருட்டி, பணிவிடைக்காரனிடத்தில் கொடுத்து, உட்கார்ந்தார். ஜெபஆலயத்திலுள்ள எல்லாருடைய கண்களும் அவர்மேல் நோக்கமாயிருந்தது. 21.அப்பொழுது அவர் அவர்களோடே பேசத்தொடங்கி: உங்கள் காதுகள் கேட்க இந்த வேதவாக்கியம் இன்றையத்தினம் நிறைவேறிற்று என்றார். 22.எல்லாரும் அவருக்கு நற்சாட்சி கொடுத்து, அவருடைய வாயிலிருந்து புறப்பட்ட கிருபையுள்ள வார்த்தைகளைக்குறித்து ஆச்சரியப்பட்டு: இவன் யோசேப்பின் குமாரன் அல்லவா என்றார்கள். 23.அவர் அவர்களை நோக்கி: வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள் என்கிற பழமொழியைச் சொல்லி, நாங்கள் கேள்விப்பட்டபடி கப்பர்நகூமூரில் உன்னால் செய்யப்பட்ட கிரியைகள் எவைகளோ அவைகளை உன் ஊராகிய இவ்விடத்திலும் செய் என்று நீங்கள் என்னுடன் சொல்லுவீர்கள் என்பது நிச்சயம். 24.ஆனாலும் தீர்க்கதரிசி ஒருவனும் தன் ஊரிலே அங்கீகரிக்கப்படமாட்டான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 25.அன்றியும் எலியாவின் நாட்களிலே மூன்று வருஷமும் ஆறுமாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தபோது, இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள். 26.ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை. 27.அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலருக்குள்ளே அநேகம் குஷ்டரோகிகள் இருந்தார்கள்; ஆயினும் சீரியா தேசத்தானாகிய நாகமானேயல்லாமல் அவர்களில் வேறொருவனும் சுத்தமாக்கப்படவில்லை என்று சத்தியத்தின்படியே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 28.ஜெபஆலயத்திலிருந்த எல்லாரும், இவைகளைக் கேட்டபொழுது, கோபமூண்டு, 29.எழுந்திருந்து, அவரை ஊருக்குப் புறம்பே தள்ளி, தங்கள் ஊர் கட்டப்பட்டிருந்த செங்குத்தான மலையின் சிகரத்திலிருந்து அவரைத் தலைகீழாய்த் தள்ளிவிடும்படிக்கு அவ்விடத்திற்குக் கொண்டுபோனார்கள். 30.அவரோ அவர்கள் நடுவினின்று கடந்துபோய்விட்டார் - லூக்கா 4:16-29
கர்த்தர் வளர்ந்த நாசரேத்தில் ஊரில் நடந்த இந்த சம்பவத்தை, மத்தேயுவும் மார்க்கும் தங்களுடைய சுவிஷேச புஸ்தகத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர், ஆனால், நாசரேத்து ஊரார் கர்த்தரை, செங்குத்தான மலையின் சிகரத்திலிருந்து தலைகீழாய்த் தள்ளி கொலை செய்ய முயற்சித்ததை குறித்து மத்தேயுவும் மார்க்கும் ஏன் ஒன்றும் சொல்லவில்லை?
53.இயேசு இந்த உவமைகளைச் சொல்லி முடித்தபின்பு, அவ்விடம் விட்டு, 54.தாம் வளர்ந்த ஊரிலே வந்து, அவர்களுடைய ஜெபஆலயத்திலே அவர்களுக்கு உபதேசம்பண்ணினார். அவர்கள் ஆச்சரியப்பட்டு: இவனுக்கு இந்த ஞானமும் பலத்த செய்கைகளும் எப்படி வந்தது? 55.இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா? இவன் தாய் மரியாள் என்பவள் அல்லவா? யாக்கோபு, யோசே, சீமோன், யூதா என்பவர்கள் இவனுக்குச் சகோதரர் அல்லவா? 56.இவன் சகோதரிகளெல்லாரும் நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? இப்படியிருக்க, இதெல்லாம் இவனுக்கு எப்படி வந்தது? என்று சொல்லி, 57.அவரைக்குறித்து இடறலடைந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி: தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான் என்றார். 58.அவர்களுடைய அவிசுவாசத்தினிமித்தம் அவர் அங்கே அநேக அற்புதங்களைச் செய்யவில்லை - மத்தேயு 13:53-58
1.அவர் அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, தாம் வளர்ந்த ஊருக்கு வந்தார்; அவருடைய சீஷரும் அவரோடேகூட வந்தார்கள். 2.ஓய்வுநாளானபோது, ஜெபஆலயத்தில் உபதேசம்பண்ணத்தொடங்கினார். அநேகர் கேட்டு, ஆச்சரியப்பட்டு, இவைகள் இவனுக்கு எங்கே இருந்து வந்தது? இவன் கைகளினால் இப்படிப்பட்ட பலத்த செய்கைகள் நடக்கும்படி இவனுக்குக் கொடுக்கப்பட்ட ஞானம் எப்படிப்பட்டது? 3.இவன் தச்சன் அல்லவா? மரியாளுடைய குமாரன் அல்லவா? யாக்கோபு யோசே யூதா சீமோன் என்பவர்களுக்குச் சகோதரன் அல்லவா? இவன் சகோதரிகளும், இங்கே நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? என்று சொல்லி, அவரைக்குறித்து இடறலடைந்தார்கள். 4.இயேசு அவர்களை நோக்கி: தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் இனத்திலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான் என்றார். 5.அங்கே அவர் சில நோயாளிகள்மேல் கைகளை வைத்து, அவர்களைக் குணமாக்கினதேயன்றி, வேறொரு அற்புதமும் செய்யக்கூடாமல், 6.அவர்களுடைய அவிசுவாசத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டு; கிராமங்களிலே சுற்றித்திரிந்து, உபதேசம்பண்ணினார் - மாற்கு 6:1-6
மத்தேயுவும், மார்க்கும், நாசரேத்து ஊரார் கர்த்தரை கொலை செய்ய முயற்சித்ததை சொல்வதற்கு பதிலாக, ஒரே வார்த்தையில் "அவிசுவாசம்" என்று சொல்லி முடித்து விட்டார்கள், அப்படியென்றால் நம்மை இரட்சிக்க இந்த பூமிக்கு வந்த இயேசு கிறிஸ்துவை தேவனுடைய குமாரன் என்று ஏற்றுக் கொள்ளாமல் இருப்பது, கர்த்தரை செங்குத்தான மலையின் சிகரத்திலிருந்து தலைகீழாய்த் தள்ளிவிடுவதற்கு சமம் என்பதை அறிந்துக் கொள்ளலாம்.
விசுவாசியாதவர்கள் இன்னாரென்றும், தம்மைக் காட்டிக்கொடுப்பவன் இன்னானென்றும்
அப்போஸ்தனாகிய யோவானும், நம்மை இரட்சிக்க இந்த பூமிக்கு வந்த தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை, இவன் யோசேப்பின் குமாரனாகிய இயேசு அல்லவா என்று கேட்டவர்களை, விசுவாசியாதவர்கள் என்று முத்திரை போட்டு, கர்த்தரை காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்தோடு ஒப்பிட்டு எழுதியுள்ளார் - 41.நான் வானத்திலிருந்து வந்த அப்பம் என்று அவர் சொன்னதினிமித்தம் யூதர்கள் அவரைக்குறித்து முறுமுறுத்து: 42.இவன் யோசேப்பின் குமாரனாகிய இயேசு அல்லவா, இவனுடைய தகப்பனையும் தாயையும் அறிந்திருக்கிறோமே; அப்படியிருக்க, நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன் என்று இவன் எப்படிச் சொல்லுகிறான் என்றார்கள். 43.இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: உங்களுக்குள்ளே முறுமுறுக்கவேண்டாம். 44.என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன். 45.எல்லாரும் தேவனாலே போதிக்கப்பட்டிருப்பார்கள் என்று தீர்க்கதரிசிகளின் ஆகமத்தில் எழுதியிருக்கிறதே; ஆகையால் பிதாவினிடத்தில் கேட்டுக் கற்றுக்கொள்ளுகிறவன் எவனும் என்னிடத்தில் வருகிறான். 46.தேவனிடத்தினின்று வந்தவரே தவிர வேறொருவரும் பிதாவைக் கண்டதில்லை, இவரே பிதாவைக் கண்டவர். 47.என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 48.ஜீவ அப்பம் நானே. 49.உங்கள் பிதாக்கள் வனாந்தரத்திலே மன்னாவைப் புசித்திருந்தும் மரித்தார்கள். 50.இதிலே புசிக்கிறவன் மரியாமலிருக்கும்படி வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே. 51.நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே என்றார். 52.அப்பொழுது யூதர்கள்: இவன் தன்னுடைய மாம்சத்தை எப்படி நமக்குப் புசிக்கக் கொடுப்பான் என்று தங்களுக்குள்ளே வாக்குவாதம்பண்ணினார்கள். 53.அதற்கு இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 54.என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன். 55.என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது, என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது. 56.என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவன் என்னிலே நிலைத்திருக்கிறான், நானும் அவனிலே நிலைத்திருக்கிறேன். 57.ஜீவனுள்ள பிதா என்னை அனுப்பினதுபோலவும், நான் பிதாவினால் பிழைத்திருக்கிறதுபோலவும், என்னைப் புசிக்கிறவனும் என்னாலே பிழைப்பான். 58.வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே; இது உங்கள் பிதாக்கள் புசித்த மன்னாவைப் போலல்ல, அவர்கள் மரித்தார்களே; இந்த அப்பத்தைப் புசிக்கிறவனோ என்றென்றைக்கும் பிழைப்பான் என்றார். 59.கப்பர்நகூமிலுள்ள ஜெபஆலயத்திலே அவர் உபதேசிக்கையில் இவைகளைச் சொன்னார். 60.அவருடைய சீஷரில் அநேகர் இவைகளைக் கேட்டபொழுது, இது கடினமான உபதேசம், யார் இதைக் கேட்பார்கள் என்றார்கள். 61.சீஷர்கள் அதைக்குறித்து முறுமுறுக்கிறார்களென்று இயேசு தமக்குள்ளே அறிந்து, அவர்களை நோக்கி: இது உங்களுக்கு இடறலாயிருக்கிறதோ? 62.மனுஷகுமாரன் தாம் முன்னிருந்த இடத்திற்கு ஏறிப்போகிறதை நீங்கள் காண்பீர்களானால் எப்படியிருக்கும்? 63.ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது. 64.ஆகிலும் உங்களில் விசுவாசியாதவர்கள் சிலர் உண்டு என்றார்; விசுவாசியாதவர்கள் இன்னாரென்றும், தம்மைக் காட்டிக்கொடுப்பவன் இன்னானென்றும் ஆதிமுதலாக இயேசு அறிந்திருந்தபடியால், அவர் பின்னும்: 65.ஒருவன் என் பிதாவின் அருளைப் பெறாவிட்டால் என்னிடத்திற்கு வரமாட்டான் என்று இதினிமித்தமே உங்களுக்குச் சொன்னேன் என்றார். - யோவான் 6:48-58
அடுத்த பாகம்: தேவதூதரைப்போல் இருப்பார்கள்