நம் இரட்சகராகிய இயேசு கிறிஸ்து, ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் கொண்டு ஐயாயிரம் பேரை போஷித்த அற்புதமானது, கர்த்தர் தன்னையே சிலுவையில் ஜீவஅப்பமாக பகிர்ந்தளித்ததை குறிக்கிறது, இயேசு கிறிஸ்து சீஷர்களுடனிருந்தது தன் ஊழியத்தை செய்தாலும், ஜீவஅப்பமாகிய அவர் பரலோக தேவனிடமிருந்து வெளிப்பட்டவர், அதனால் தேவஆவியானவர், யோவான் மூலமாக எழுதி தந்த இயேசு கிறிஸ்துவின் சுவிஷேச புஸ்தகத்தில், ஒரு பையன் அந்த "ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும்" வைத்திருந்ததாக சொல்லி, பரலோகத்தின் தேவனை ஒரு பையன் என்று சொன்னது ஆச்சரியமாக தான் இருக்கிறது, ஏனென்றால் பாவமறியாத, கள்ளங்கபடமற்ற, எவ்வளவேனும் இருளில்லாத பரலோகத்தின் தேவனை ஒரு பையன் என்று சொன்னது சரி தானே! - 4.அப்பொழுது யூதருடைய பண்டிகையாகிய பஸ்கா சமீபமாயிருந்தது. 5.இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து, திரளான ஜனங்கள் தம்மிடத்தில் வருகிறதைக் கண்டு, பிலிப்புவை நோக்கி: இவர்கள் சாப்பிடத்தக்கதாக அப்பங்களை எங்கே கொள்ளலாம் என்று கேட்டார். 6.தாம் செய்யப்போகிறதை அறிந்திருந்தும், அவனைச் சோதிக்கும்படி இப்படிக் கேட்டார். 7.பிலிப்பு அவருக்குப் பிரதியுத்தரமாக: இவர்களில் ஒவ்வொருவன் கொஞ்சங்கொஞ்சம் எடுத்துக்கொண்டாலும், இருநூறு பணத்து அப்பங்களும் இவர்களுக்குப் போதாதே என்றான். 8.அப்பொழுது அவருடைய சீஷரிலொருவனும், சீமோன் பேதுருவின் சகோதரனுமாகிய அந்திரேயா அவரை நோக்கி: 9.இங்கே ஒரு பையன் இருக்கிறான், அவன் கையில் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உண்டு, ஆனாலும் அவைகள் இத்தனை ஜனங்களுக்கு எம்மாத்திரம் என்றான். 10.இயேசு: ஜனங்களை உட்காரவையுங்கள் என்றார். அந்த இடம் மிகுந்த புல்லுள்ளதாயிருந்தது. பந்தியிருந்த புருஷர்கள் ஏறக்குறைய ஐயாயிரம் பேராயிருந்தார்கள். 11.இயேசு அந்த அப்பங்களை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, சீஷர்களிடத்தில் கொடுத்தார்; சீஷர்கள் பந்தியிருந்தவர்களுக்குக் கொடுத்தார்கள்; அப்படியே மீன்களையும் அவர் எடுத்து அவர்களுக்கு வேண்டியமட்டும் கொடுத்தார். 12.அவர்கள் திருப்தியடைந்தபின்பு, அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒன்றும் சேதமாய்ப் போகாதபடிக்கு மீதியான துணிக்கைகளைச் சேர்த்துவையுங்கள் என்றார். 13.அந்தப்படியே அவர்கள் சேர்த்து, வாற்கோதுமை அப்பங்கள் ஐந்தில் அவர்கள் சாப்பிட்டு மீதியான துணிக்கைகளினாலே பன்னிரண்டு கூடைகளை நிரப்பினார்கள். 14.இயேசு செய்த அற்புதத்தை அந்த மனுஷர் கண்டு: மெய்யாகவே இவர் உலகத்தில் வருகிறவரான தீர்க்கதரிசி என்றார்கள் - யோவான் 6:4-14
ஏசாயா தீர்க்கதரிசியும், எவ்வளவேனும் இருளில்லாத பரலோகத்தின் தேவனை, சர்வவல்லமையுள்ளவராய், நித்தியானந்தமுள்ள ஏக சக்கராதிபதியாய் ஆளுகை செய்பவரை "சிறு பையன்" என்றே குறிப்பிட்டிருக்கிறார், அவரே தன்னுடைய ஒரேபேறான குமாரனை, ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களுமாக நமக்கு தந்தருளி நம்மை நித்திய நரகத்திலிருந்து மீட்டார் - 1.ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும். 2.ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவியானவர் அவர்மேல் தங்கியிருப்பார். 3.கர்த்தருக்குப் பயப்படுதல் அவருக்கு உகந்த வாசனையாயிருக்கும்; அவர் தமது கண் கண்டபடி நியாயந்தீர்க்காமலும், தமது காது கேட்டபடி தீர்ப்புச்செய்யாமலும், 4.நீதியின்படி ஏழைகளை நியாயம்விசாரித்து, யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள சிறுமையானவர்களுக்குத் தீர்ப்புச்செய்து, பூமியைத் தமது வாக்கின் கோலால் அடித்து, தமது வாயின் சுவாசத்தால் துன்மார்க்கரைச் சங்கரிப்பார். 5.நீதி அவருக்கு அரைக்கட்டும், சத்தியம் அவருக்கு இடைக்கச்சையுமாயிருக்கும். 6.அப்பொழுது ஓநாய் ஆட்டுக்குட்டியோடே தங்கும், புலி வெள்ளாட்டுக்குட்டியோடே படுத்துக்கொள்ளும்; கன்றுக்குட்டியும், பாலசிங்கமும், காளையும், ஒருமித்திருக்கும்; ஒரு சிறு பையன் அவைகளை நடத்துவான் - ஏசாயா 11:1-6
தொடர்ந்து படிக்க யுஸ்து என்னும் மறுநாமமுள்ள பர்சபா என்னப்பட்ட யோசேப்பு
முந்தைய பாகத்தை படிக்க லூக்கா சுவிஷேச புஸ்தகத்தில் இயேசுவின் தாய்