பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசியான சகரியா, இதை குறித்துச் சொல்லும் பொழுது, பிதாவாகிய தேவன் மற்றும் குமாரனாகிய இயேசு கிறிஸ்து இரண்டு பேருமே சிலுவையை நோக்கி பயணம் செல்ல வேண்டும் என்பதை, உன் ராஜா "கழுதையின்மேலும்" மற்றும் "கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும்" ஏறிவருகிறார் என்று சொல்லியிருந்தார் - சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிவருகிறவருமாயிருக்கிறார் - சகரியா 9:9
அதனால் தான் சீஷர்கள், பிதா குமாரன் இரண்டு பேரும் பயணம் செய்ய, கழுதையையும் அதின் குட்டியையும் கொண்டு வந்து, அதின் மேல் தங்கள் வஸ்திரங்களைப் விரித்தார்கள் - 6.சீஷர்கள் போய், இயேசு தங்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்து, 7.கழுதையையும் குட்டியையும் கொண்டுவந்து, அவைகள்மேல் தங்கள் வஸ்திரங்களைப் போட்டு, அவரை ஏற்றினார்கள் - மத்தேயு 21:6-7
ஆனால் ஜனங்கள் கண்டது, இயேசு கிறிஸ்து கழுதையின் குட்டியின் மேல் ஏறிப்போனதை மாத்திரமே, ஆனால் இயேசு கிறிஸ்துவோ தன்னோடு வருபவரை நன்றாய் அறிந்திருந்தார், அவர் பரலோகத்தின் தேவனேயன்றி வேறு யாரும் அல்ல - அவர்கள் அந்தக் குட்டியை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, அதின்மேல் தங்கள் வஸ்திரங்களைப் போட்டார்கள்; அவர் அதின்மேல் ஏறிப்போனார் - மாற்கு 11:7
மேலும் இயேசு கிறிஸ்து சொன்னது என்னவென்றால், பிதாவுக்குப் பிரியமானவைகளையே அவர் செய்வதினால், பிதாவாகிய தேவன் அவரை ஒருபொழுதும் தனியாக இருக்கவிடவே இல்லையாம், அப்படியென்றால், நம்முடைய இரட்சிப்புக்காக பிதா சொன்ன காரியத்தை சிலுவையில் நிறைவேற்றி கொண்டிருக்கும் பொழுது, பிதா அருகே இருந்தது நிச்சியம் அல்லவா! - 28.ஆதலால் இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனை உயர்த்தினபின்பு, நானே அவரென்றும், நான் என்சுயமாய் ஒன்றும் செய்யாமல், என் பிதா எனக்குப் போதித்தபடியே இவைகளைச் சொன்னேன் என்றும் அறிவீர்கள். 29.என்னை அனுப்பினவர் என்னுடனேகூட இருக்கிறார், பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறபடியால் அவர் என்னைத் தனியே இருக்கவிடவில்லை என்றார் - யோவான் 8:28-29
தொடர்ந்து படிக்க சிரேனே ஊரானாகிய சீமோனாக வந்தது யார்?
முந்தைய பாகத்தை படிக்க அதோ, உன் தாய்