மனிதர்கள் ஒரு வீட்டை கட்டுவதற்கு முன்பு, அதன் சாயலை உருவாக்குவது உண்டு, அதை building sketch அல்லது cardboard model என்று அழைப்பதுண்டு, அந்த building sketch அல்லது அந்த சின்ன cardboard model வீட்டை (சாயலை) பார்க்கும் பொழுது, அங்கு கட்டப்பட போகிற வீட்டை பற்றி அறிந்துக் கொள்ளலாம். அந்த building sketch அல்லது அந்த cardboard model வீட்டைபோலவே, ஆதாமும் ஏவாளும் தேவனுடைய சாயலாய் இருக்கிறார்களாம், எப்படியெனில் ஜீவாத்துமாவாக படைக்கப்பட்ட ஆதாம், நம் பிதாவாகிய தேவனுக்கு அடையாளமாக இருக்கிறார் - தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான் - ஆதியாகமம் 2:7
ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாயான ஏவாள், நம்மை சிலுவையின் பெற்றெடுத்த இயேசு கிறிஸ்துவின் அடையாளமாக இருக்கிறார் - ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்று பேரிட்டான்; ஏனெனில், அவள் ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாயானவள் - ஆதியாகமம் 3:20
இந்த இயேசு கிறிஸ்துவானவர், பிதாவின் மடியில் இருந்து வெளிப்பட்டவராய் இருக்கிறார், அதனால் தான் ஏவாள் ஆதாமை போல் மண்ணிலிருந்து உண்டாக்கப்படாமல், பிதாவின் மடிக்கு ஒப்பான ஆதாமின் விலா எலும்பிலிருந்து உண்டாக்கப்பட்டாள் - 21.அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணினார், அவன் நித்திரையடைந்தான்; அவர் அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார். 22.தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டுவந்தார் - ஆதியாகமம் 2:21-22
அதே சமயத்தில், நம் பிதாவாகிய தேவனும், நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் தனித்தனி நபர்களாக இருந்தாலும், ஒரே தெய்வமாக இருக்கிறார்கள் என்பதை தான் இந்த வசனங்கள் விளக்குகிறது - 23.அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான். 24.இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள் - ஆதியாகமம் 2:23-24
இப்படி ஏவாள் நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அடையாளமாக இருந்ததினாலும், மேலும், நாம் இயேசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளினால் மாத்திரமே, அவரின் பிள்ளைகளாக முடியும் என்பதை தான் இந்த வசனங்கள் தீர்க்கதரிசனமாக சொல்லுகிறது, இதில் ஸ்திரீ என்கிற வார்த்தை எபிரேய பாஷையில் ஈஷா(ʼishshâh) என்று அழைக்கப்படுகிறது, அது நம்மை சிலுவையின் பாடுகளினால் பெற்றெடுத்த இயேசு கிறிஸ்துவே - 13.அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஸ்திரீயை நோக்கி: நீ இப்படிச் செய்தது என்ன என்றார். ஸ்திரீயானவள்: சர்ப்பம் என்னை வஞ்சித்தது, நான் புசித்தேன் என்றாள். 14.அப்பொழுது தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப் பார்த்து: நீ இதைச் செய்தபடியால் சகல நாட்டுமிருகங்களிலும் சகல காட்டுமிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய்; 15.உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார். 16.அவர் ஸ்திரீயை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன்; வேதனையோடே பிள்ளை பெறுவாய்; உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான் என்றார் - ஆதியாகமம் 3:16
தேவன் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும் படைத்தபோது, அவைகளை "தங்கள் ஜாதியின்படியே" படைத்ததாக வேதாகமம் கூறுகிறது - 21.தேவன், மகா மச்சங்களையும், ஜலத்தில் தங்கள் தங்கள் ஜாதியின்படியே திரளாய் ஜநிப்பிக்கப்பட்ட சகலவித நீர் வாழும் ஜந்துக்களையும், சிறகுள்ள ஜாதிஜாதியான சகலவிதப் பட்சிகளையும் சிருஷ்டித்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார். 22.தேவன் அவைகளை ஆசீர்வதித்து, நீங்கள் பலுகிப் பெருகி, சமுத்திர ஜலத்தை நிரப்புங்கள் என்றும், பறவைகள் பூமியில் பெருகக்கடவது என்றும் சொன்னார். 23.சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஐந்தாம் நாள் ஆயிற்று. 24.பின்பு தேவன்: பூமியானது ஜாதிஜாதியான ஜீவஜந்துக்களாகிய நாட்டுமிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டுமிருகங்களையும் ஜாதிஜாதியாகப் பிறப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று. 25.தேவன் பூமியிலுள்ள ஜாதிஜாதியான காட்டுமிருகங்களையும், ஜாதிஜாதியான நாட்டுமிருகங்களையும், பூமியில் ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும் உண்டாக்கினார்; தேவன் அது நல்லது என்று கண்டார் - ஆதியாகமம் 1:21-25
ஆனால், மனிதனையோ, தேவன் தனது சொந்த சாயலில் படைத்தார் என்றும், அவர்களை ஆணும் பெண்ணுமாகப் படைத்தார் என்றும் வேதாகமம் கூறுகிறது. அப்படியென்றால் தேவசாயலில் படைக்கப்பட்டவர்கள் தேவனுடைய பண்பை நமக்கு விளக்கவேண்டும் அல்லவா? எப்படியெனில் ஆணும் பெண்ணுமாக படைக்கப்பட்டவர்கள், அதிலும் குறிப்பாக திருமணமான தம்பதிகள், ஒரே தேவன் இரண்டு நபர்களாக இருக்கிறார்கள் என்பதை விளக்குகிறார்கள், அதாவது தேவன் பிதா மற்றும் குமாரனாக இருக்கிறார்கள் என்பதின் மாதிரியாக இருக்கிறார்கள் - 26.பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார். 27.தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார். 28.பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார் - ஆதியாகமம் 1:26-28
அவன் விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி
தேவன் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும் படைத்தபோது, அவைகளை எப்படி ஆணும் பெண்ணுமாக படைத்தார் என்பதைக் குறித்து வேதாகமம் ஒன்றும் சொல்லவில்லை, ஆனால் தேவசாயலில் படைக்கப்பட்ட மனிதனை பற்றி சொல்லும் பொழுதோ, தேவன் அவர்களை எப்படி ஆணும் பெண்ணுமாக படைத்தார் என்று சொல்லுகிறது, எப்படியெனில் முதலாவது மனுஷனை மண்ணிலிருந்து படைத்தார் என்றும், அதன் பின்பு மனுஷனின் விலா எலும்பிலிருந்து மனுஷியை படைத்தார் என்றும் வேதாகமம் சொல்லுகிறது - 21.அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணினார், அவன் நித்திரையடைந்தான்; அவர் அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார். 22.தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டுவந்தார் - ஆதியாகமம் 2:21-22
ஏன் தேவன் முதலாவது மனுஷனை படைத்து, அதன் பின்பு அவன் விலா எலும்பிலிருந்து மனுஷியை படைக்க வேண்டும்? ஏனென்றால் பிதாவாகிய தேவனுக்கும், குமாரனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் உள்ள உறவையும், குமாரனாகிய இயேசு கிறிஸ்து, பிதாவின் மடியிலிருந்து வெளிப்பட்டவர் என்பதையும் விளக்குவதற்காகவே - தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார் - யோவான் 1:18
மனுஷி என்பதின் அர்த்தம்
மனுஷனின் விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டவள் மனுஷி என்று அழைக்கப்பட காரணம் என்ன? ஏனென்றால் எபிரேய பாஷையில் "மனுஷி" என்பது இயேசு[Iēsoûs, Jisas, Isus, Isa] என்று உச்சரிப்பதற்கு ஒத்ததாகவே இருக்கிறது - 23.அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி[Iēsoûs, Jisas, Isus, Isa] என்னப்படுவாள் என்றான். 24.இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள் - ஆதியாகமம் 2:23-24
மேலும் மனுஷனிலிருந்து மனுஷியானவள் படைக்கப்பட்டது, இயேசு கிறிஸ்து பிதாவினிடத்திலிருந்து புறப்பட்டு வந்தவர் என்பதை விளக்குவதற்காகவே இருக்கிறது - நான் பிதாவினிடத்திலிருந்து புறப்பட்டு உலகத்திலே வந்தேன் - யோவான் 16:28a
உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன்
இப்படியாக தேவசாயலில் படைக்கப்பட்ட மனிதனும் மனுஷியும், பரலோகத்தின் தேவன் பிதாவாகவும் குமாரனுமாக இருப்பதை விளக்குகிறது, மேலும் ஒரு வீட்டில் சில மாறுதல்களை செய்ய வேண்டும் என்றால், முதலாவது அதன் cardboard model(சாயலை) வீட்டில் செய்வது போலவே, கர்த்தர் நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன் என்று சொன்னது, அநேகரை தனது பிள்ளைகளாக மாற்ற கர்த்தரின் சிலுவை பாடுகளை முன்னறிவிப்பதாகவே இருந்தது - அவர் ஸ்திரீயை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன்; வேதனையோடே பிள்ளை பெறுவாய்; உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான் என்றார் - ஆதியாகமம் 3:16
அதனால் தான் ஏசாயா தீர்க்கதரிசி கர்த்தரை பிள்ளைபெறாத மலடியே என்றும், உன் பிள்ளைகள் அதிகம் என்றும் தீர்க்கதரிசனம் உரைத்தார் - 1.பிள்ளைபெறாத மலடியே, மகிழ்ந்துபாடு; கர்ப்பவேதனைப்படாதவளே, கெம்பீரமாய்ப் பாடி ஆனந்த சத்தமிடு; வாழ்க்கைப்பட்டவளுடைய பிள்ளைகளைப் பார்க்கிலும், அநாத ஸ்திரீயினுடைய பிள்ளைகள் அதிகம் என்று கர்த்தர் சொல்லுகிறார். 2.உன் கூடாரத்தின் இடத்தை விசாலமாக்கு; உன் வாசஸ்தலங்களின் திரைகள் விரிவாகட்டும்; தடைசெய்யாதே; உன் கயிறுகளை நீளமாக்கி, உன் முளைகளை உறுதிப்படுத்து. 3.நீ வலதுபுறத்திலும் இடதுபுறத்திலும் இடங்கொண்டு பெருகுவாய்; உன் சந்ததியார் ஜாதிகளைச் சுதந்தரித்துக்கொண்டு, பாழாய்க்கிடந்த பட்டணங்களைக் குடியேற்றுவிப்பார்கள். 4.பயப்படாதே, நீ வெட்கப்படுவதில்லை; நாணாதே, நீ இலச்சையடைவதில்லை; உன் வாலிபத்தின் வெட்கத்தை நீ மறந்து, உன் விதவையிருப்பின் நிந்தையை இனி நினையாதிருப்பாய். 5.உன் சிருஷ்டிகரே உன் நாயகர்; சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம்; இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் மீட்பர், அவர் சர்வபூமியின் தேவன் என்னப்படுவார். 6.கைவிடப்பட்டு மனம்நொந்தவளான ஸ்திரீயைப்போலவும், இளம்பிராயத்தில் விவாகஞ்செய்து தள்ளப்பட்ட மனைவியைப்போலவும் இருக்கிற உன்னைக் கர்த்தர் அழைத்தார் என்று உன் தேவன் சொல்லுகிறார் - ஏசாயா 54:1-6
இப்படி ஏசாயா தீர்க்கதரிசி சொன்னது கர்த்தரை குறித்தது தான் என்று அபோஸ்தனாகிய பவுலும் உறுதிப்படுத்தியுள்ளார் - 26.மேலான எருசலேமோ சுயாதீனமுள்ளவள், அவளே நம்மெல்லாருக்கும் தாயானவள். 27.அந்தப்படி பிள்ளைபெறாத மலடியே, மகிழ்ந்திரு; கர்ப்பவேதனைப்படாதவளே, களிப்பாய் எழும்பி ஆர்ப்பரி; புருஷனுள்ளவளைப் பார்க்கிலும் அநாத ஸ்திரீக்கே அதிக பிள்ளைகளுண்டு என்று எழுதியிருக்கிறது - கலாத்தியர் 4:26-27