இயேசு கிறிஸ்துவை கருவில் சுமந்த மரியாளை ஸ்திரீகளுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றும் பாக்கியவதி என்றும் வேதாகமம் சாட்சி கொடுத்ததை தான் இந்த வசனங்களில் பார்க்கிறோம், இதை தவறாக புரிந்துக் கொண்டு மரியாளை தெய்வமாக மாற்றினவர்களும் உண்டு, ஆனால் வேதாகமம் மரியாளை தெய்வம் என்று சொல்லாமல், தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றும், தேவனை விசுவாசித்ததாள் பாக்கியவதியானவள் என்றே சொல்லுகிறது - 10.அப்பொழுது, சீஷர்கள் அவரிடத்தில் வந்து: ஏன் அவர்களோடே உவமைகளாகப் பேசுகிறீர் என்று கேட்டார்கள். 11.அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: பரலோகராஜ்யத்தின் ரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது, அவர்களுக்கோ அருளப்படவில்லை. 12.உள்ளவன் எவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவன் எவனோ அவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும். 13.அவர்கள் கண்டும் காணாதவர்களாயும், கேட்டும் கேளாதவர்களாயும், உணர்ந்துகொள்ளாதவர்களாயும் இருக்கிறபடியினால், நான் உவமைகளாக அவர்களோடே பேசுகிறேன். 14.ஏசாயாவின் தீர்க்கதரிசனம் அவர்களிடத்தில் நிறைவேறுகிறது; அதாவது: காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள்; கண்ணாரக்கண்டும் அறியாதிருப்பீர்கள். 15.இந்த ஜனங்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படியாக, அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது; காதால் மந்தமாய்க் கேட்டு, தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள் என்பதே. 16.உங்கள் கண்கள் காண்கிறதினாலும், உங்கள் காதுகள் கேட்கிறதினாலும், அவைகள் பாக்கியமுள்ளவைகள் - மத்தேயு 13:10-16
இதை சற்றே பொறுமையாக ஆராய்ந்து, இதன் உண்மையனாக அர்த்ததை அறிந்து தெளிவான முடிவு எடுப்பது அவசியம், ஏனென்றால், நம் இரட்சகராகிய இயேசு கிறிஸ்து உவமைகள் மூலமாய் பேசுகிறவராகவே இந்த பூமிக்கு வந்தார் என்றும், உவமைகளாகளின் உண்மையான அர்த்தம், கர்த்தரின் பிள்ளைகளுக்கு மாத்திரமே பரிசுத்த ஆவியனவரால் சொல்லி கொடுக்கப்படும் என்றும் தீர்க்கதரிசனம் உரைக்கிறது - 1.என் ஜனங்களே, என் உபதேசத்தைக் கேளுங்கள்; என் வாயின் வசனங்களுக்கு உங்கள் செவிகளைச் சாயுங்கள். 2.என் வாயை உவமைகளால் திறப்பேன்; பூர்வகாலத்து மறைபொருள்களை வெளிப்படுத்துவேன். 3.அவைகளை நாங்கள் கேள்விப்பட்டு அறிந்தோம்; எங்கள் பிதாக்கள் அவைகளை எங்களுக்குத் தெரிவித்தார்கள். 4.பின்வரும் சந்ததியான பிள்ளைகளுக்கு நாங்கள் அவைகளை மறைக்காமல், கர்த்தரின் துதிகளையும் அவருடைய பலத்தையும், அவர் செய்த அவருடைய அதிசயங்களையும் விவரிப்போம் - சங்கீதம் 78:1-2
ஆனால் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை கேட்டு அதன்படி நாம் நடக்கும் பொழுது ஸ்திரீகளுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவள் என்று சொல்லப்பட்ட மரியாளை காட்டிலும் அதிக பாக்கியவான்களாக இருக்கிறோம் - 10.அவர் தனித்திருக்கிறபோது, பன்னிருவரோடுங்கூட அவரைச் சூழ்ந்திருந்தவர்கள் இந்த உவமையைக்குறித்து அவரிடத்தில் கேட்டார்கள். 11.அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது; புறம்பே இருக்கிறவர்களுக்கோ இவைகளெல்லாம் உவமைகளாகச் சொல்லப்படுகிறது. 12.அவர்கள் குணப்படாதபடிக்கும், பாவங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதபடிக்கும், அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கும்படி, இப்படிச் சொல்லப்படுகிறது என்றார். 13.பின்பு அவர் அவர்களை நோக்கி: இந்த உவமையை நீங்கள் அறியவில்லையா? அறியாவிட்டால் மற்ற உவமைகளையெல்லாம் எப்படி அறிவீர்கள்? - மாற்கு 4:10-13
அதனால் தான் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகள் என்ற தலைப்பில் கர்த்தரின் வார்த்தையின் மகத்துவங்களை குறித்து தியானிக்கிறோம்.