எஜமானைப்போல இருப்பது போதும்
எஜமானைப்போல இருப்பது போதும்
இயேசு கிறிஸ்து தன் பன்னிரண்டு சீஷர்களை அப்போஸ்தல ஊழியத்திற்கு தெரிந்துக் கொண்டதை தான் இந்த வசனங்களில் பார்க்கிறோம் - 1.அப்பொழுது, அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து, அசுத்த ஆவிகளைத் துரத்தவும், சகல வியாதிகளையும், சகல நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார். 2.அந்தப் பன்னிரண்டு அப்போஸ்தலருடைய நாமங்களாவன: முந்தினவன் பேதுரு என்னப்பட்ட சீமோன், அவன் சகோதரன் அந்திரேயா, செபெதேயுவின் குமாரன் யாக்கோபு, அவன் சகோதரன் யோவான், 3.பிலிப்பு, பர்த்தொலொமேயு, தோமா, ஆயக்காரனாகிய மத்தேயு, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு என்னும் மறுநாமமுள்ள லெபேயு, 4.கானானியனாகிய சீமோன், அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவைகளே - மத்தேயு 10:1-4
இப்படி ஊழியத்திற்கு அழைத்த இயேசு கிறிஸ்து, சொல்லிக்கொடுத்த பாடம் தான் "சீஷன் தன் போதகனைப்போலவும், வேலைக்காரன் தன் எஜமானைப்போலவும் இருப்பது போதும்" என்பதாகும், ஏனென்றால் ஒரு பக்குவப்படாத ஊழியக்காரன், மக்கள் முன்பு பெரிய காரியங்களை செய்ய வேண்டும், பிரபலமாக வேண்டும் என்று தன்னை அறியாமலேயே ஒரு முதன்மையான இடத்தை விரும்புகிறவனாக தான் இருப்பான், இது மிகவும் ஆபத்தானதாகவும், பிசாசின் தந்திரமாகவும் இருக்கிறது, அதனை திருத்தி கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் வேலைக்காரன் தன் எஜமானைப்போலவும் இருப்பது போதும் என்று கர்த்தரே சொல்லி கொடுத்தார் - 24.சீஷன் தன் போதகனிலும், வேலைக்காரன் தன் எஜமானிலும் மேற்பட்டவனல்ல. 25.சீஷன் தன் போதகனைப்போலவும், வேலைக்காரன் தன் எஜமானைப்போலவும் இருப்பது போதும். வீட்டெஜமானையே பெயல்செபூல் என்று சொன்னார்களானால், அவன் வீட்டாரை அப்படிச் சொல்வது அதிக நிச்சயமல்லவா? - மத்தேயு 10:24-25
எப்படி விசுவாசிப்பீர்கள்?
துதி, கனம், மகிமை எல்லாம் நம்மை இரட்சித்த இயேசு கிறிஸ்துவுக்கே உரியது என்பதை தான் வேதாகமம் இந்த வசனங்கள் மூலமாக நமக்கு போதிக்கிறது - கர்த்தாவே, மாட்சிமையும் வல்லமையும் மகிமையும் ஜெயமும் மகத்துவமும் உம்முடையவைகள்; வானத்திலும் பூமியிலும் உள்ளவைகளெல்லாம் உம்முடையவைகள்; கர்த்தாவே, ராஜ்யமும் உம்முடையது; தேவரீர் எல்லாருக்கும் தலைவராய் உயர்ந்திருக்கிறீர் - I நாளாகமம் 29:11
ஒரு ஊழியகாரனின் அழைப்பே துதி, கனம், மகிமை, சாட்சிகள் எல்லாவற்றையும் முதற்பேறான இயேசு கிறிஸ்துவுக்கு உரித்தாக்குவது தான், ஒரு ஊழியகாரனின் அழைப்பும் நோக்கமும் இப்படியாக இருக்கும் பொழுது, மற்றவர்கள் நம்மை புகழ்வது போல் நடந்துக்கொள்வது நிச்சியமாகவே ஒரு நம்பிக்கைத் துரோகம காரியம் தான் - 29.தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்; 30.எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார் - ரோமர் 8:29-30
இப்படி மற்றவர்கள் நம்மை புகழ்வது போல் நடந்துக்கொள்வது மாத்திரம் இல்லாமல், அதனை ஏற்றுக்கொள்ளுகிறவர்களை பார்த்து கேட்கப்பட்ட கேள்வி தான் இது - தேவனாலேமாத்திரம் வருகிற மகிமையைத் தேடாமல், ஒருவராலொருவர் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிற நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள்? - யோவான் 5:44
அதனால் புகழை திருடுகிற இது போன்ற நம்பிக்கை துரோக காரியங்களை உதறித் தள்ளிவிட்டு, இயேசு கிறிஸ்துவுக்கே துதி, கனம், மகிமையை உரித்தாக்கும் பொழுது, விசுவாசத்தைத் துவக்குகிறவர் நம்மோடிருப்பது நிச்சியம் - ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம் - எபிரெயர் 12:1
நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள்
இப்படி பட்டவைகள் சத்துருவின் அடையாளமாகவும், தேவன் வெறுக்கிற காரியமாகவும் இருப்பதினால் தான், கர்த்தர் தன் சீஷர்களுக்கு வேதபாரகர் மற்றும் பரிசேயரின் செய்கையின்படி செய்யாதிருங்கள் என்றும், ரபீ என்றழைக்கப்படாதிருங்கள் என்றும் கட்டளைகளை கொடுத்தார் - 8.நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார், நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள். 9.பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார். 10.நீங்கள் குருக்கள் என்றும் அழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குக் குருவாயிருக்கிறார். 11.உங்களில் பெரியவனாயிருக்கிறவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன். 12.தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் - மத்தேயு 23:8-12
இவ்வாறு ஊழியத்தின் துவக்கத்தில், தன் சீஷர்களிடம் ஏளிமையாய் இருக்க சொல்லி கொடுத்த இயேசு கிறிஸ்து, தான் சிலுவைக்கு போகும் முன்பு, நாம் எக்காரணத்தைக் கொண்டும் மற்றவர்களை காட்டிலும் ஒரு விசேஷமானவர்கள் போல ஒரு அடைமொழியோடு அழைக்கப்படக் கூடாது என்றும் அறிவுறுத்தினார் - 8.நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார், நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள். 9.பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார். 10.நீங்கள் குருக்கள் என்றும் அழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குக் குருவாயிருக்கிறார் - மத்தேயு 23:8-10
அது மாத்திரம் இல்லாமல், ஊழியத்தில் மேலான ஊழியமான இயேசு கிறிஸ்து சீஷன் என்கிற ஊழியத்தின் அடையாளமே சிறியர்(தாழ்மையுள்ளவர்கள்) என்பது தான் என்றும் சொல்லி கொடுத்தார் - 40.உங்களை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான். 41.தீர்க்கதரிசி என்னும் நாமத்தினிமித்தம் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தீர்க்கதரிசிக்கேற்ற பலனை அடைவான்; நீதிமான் என்னும் நாமத்தினிமித்தம் நீதிமானை ஏற்றுக்கொள்ளுகிறவன் நீதிமானுக்கேற்ற பலனை அடைவான். 42.சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒருகலசம் தண்ணீர் மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற்போகான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் - மத்தேயு 10:40-42
அதனால் தான் "தீர்க்கதரிசி என்னும் நாமத்தினிமித்தம் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்ளுகிறவன், தீர்க்கதரிசி என்னும் நாமத்தினிமித்தம் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தீர்க்கதரிசிக்கேற்ற பலனை அடைவான்; நீதிமான் என்னும் நாமத்தினிமித்தம் நீதிமானை ஏற்றுக்கொள்ளுகிறவன் நீதிமானுக்கேற்ற பலனை அடைவான்" என்று சொன்ன கர்த்தர் "சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒருகலசம் தண்ணீர் மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற்போகான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்" என்று சொன்னார்.
ஒருவேளை இந்த உலகம் ஒரு தீர்க்கதரிசியை கவுரவப்படுத்தலாம், ஒரு நீதிமானைக் கூட ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் ஒருவன் இயேசு கிறிஸ்துவின் உண்மையான சீஷனாக(அப்போஸ்தலனாக) இருந்தால், வீட்டு வாசலிலேயே ஒருகலசம் தண்ணீர் மாத்திரம் குடிக்கக் கொடுத்து அனுப்பப்படும் நபராக தான் இருப்பார், அப்படி பட்ட சிறியவராக தான் இருக்கவும் வேண்டும், அது தான் கர்த்தரின் பார்வையில் மேலான ஊழியம்.