எஜமானைப்போல இருப்பது போதும்
எஜமானைப்போல இருப்பது போதும்
வேலைக்காரன் தன் எஜமானைப்போலவும் இருப்பது போதும்
இயேசு கிறிஸ்து தன் பன்னிரண்டு சீஷர்களை அப்போஸ்தல ஊழியத்திற்கு தெரிந்துக் கொண்டதை தான் இந்த வசனங்களில் பார்க்கிறோம் - 1.அப்பொழுது, அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து, அசுத்த ஆவிகளைத் துரத்தவும், சகல வியாதிகளையும், சகல நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார். 2.அந்தப் பன்னிரண்டு அப்போஸ்தலருடைய நாமங்களாவன: முந்தினவன் பேதுரு என்னப்பட்ட சீமோன், அவன் சகோதரன் அந்திரேயா, செபெதேயுவின் குமாரன் யாக்கோபு, அவன் சகோதரன் யோவான், 3.பிலிப்பு, பர்த்தொலொமேயு, தோமா, ஆயக்காரனாகிய மத்தேயு, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு என்னும் மறுநாமமுள்ள லெபேயு, 4.கானானியனாகிய சீமோன், அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவைகளே - மத்தேயு 10:1-4
இப்படி ஊழியத்திற்கு அழைத்த இயேசு கிறிஸ்து, சொல்லிக்கொடுத்த பாடம் தான் "சீஷன் தன் போதகனைப்போலவும், வேலைக்காரன் தன் எஜமானைப்போலவும் இருப்பது போதும்" என்பதாகும், ஏனென்றால் ஒரு பக்குவப்படாத ஊழியக்காரன், மக்கள் முன்பு பெரிய காரியங்களை செய்ய வேண்டும், பிரபலமாக வேண்டும் என்று தன்னை அறியாமலேயே ஒரு முதன்மையான இடத்தை விரும்புகிறவனாக தான் இருப்பான், இது மிகவும் ஆபத்தானதாகவும், பிசாசின் தந்திரமாகவும் இருக்கிறது, அதனை திருத்தி கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் வேலைக்காரன் தன் எஜமானைப்போலவும் இருப்பது போதும் என்று கர்த்தரே சொல்லி கொடுத்தார் - 24.சீஷன் தன் போதகனிலும், வேலைக்காரன் தன் எஜமானிலும் மேற்பட்டவனல்ல. 25.சீஷன் தன் போதகனைப்போலவும், வேலைக்காரன் தன் எஜமானைப்போலவும் இருப்பது போதும். வீட்டெஜமானையே பெயல்செபூல் என்று சொன்னார்களானால், அவன் வீட்டாரை அப்படிச் சொல்வது அதிக நிச்சயமல்லவா? - மத்தேயு 10:24-25
மோசேயினுடைய ஆசனத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள்
வேதபாரகரும் பரிசேயரும் மோசேயினுடைய ஆசனத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள் என்று இயேசு கிறிஸ்து சொன்னது, கர்த்தருக்குரிய முதன்மையான இடத்தை ஊழியக்காரர்கள் திருடுவதை குறித்த ஆதங்கமாகவே இருக்கிறது - 1.பின்பு இயேசு ஜனங்களையும் தம்முடைய சீஷர்களையும் நோக்கி: 2.வேதபாரகரும் பரிசேயரும் மோசேயினுடைய ஆசனத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள் - மத்தேயு 23:1-2
அப்படிப்பட்டவர்கள், மற்றவர்கள் காணும் படியாக நற்காரியங்களை செய்பவர்களாகவும், மக்களை கவர்ந்து, தாங்கள் மாத்திரமே விருத்தியடைய வேண்டும் என்று உழைப்பவர்களாகவும் (காப்புநாடாக்களை அகலமாக்கி), மன மேட்டிமை கொண்டு(வஸ்திரங்களின் தொங்கல்களைப் பெரிதாக்கி), விருந்துகளில் முதன்மையான இடங்களையும், ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களையும், சந்தைவெளிகளில் வந்தனங்களையும், மற்றவர்களால் அடைமொழிகளோடு அழைக்கப்பட விருப்பம் உள்ளவர்களாக இருப்பார்களாம் - 3.ஆகையால், நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிற யாவையும் கைக்கொண்டு செய்யுங்கள்; அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள்; ஏனெனில், அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள். 4.சுமப்பதற்கரிய பாரமான சுமைகளைக் கட்டி மனுஷர் தோள்களின்மேல் சுமத்துகிறார்கள்; தாங்களோ ஒரு விரலினாலும் அவைகளைத் தொடமாட்டார்கள். 5.தங்கள் கிரியைகளையெல்லாம் மனுஷர் காணவேண்டுமென்று செய்கிறார்கள்; தங்கள் காப்புநாடாக்களை அகலமாக்கி, தங்கள் வஸ்திரங்களின் தொங்கல்களைப் பெரிதாக்கி, 6.விருந்துகளில் முதன்மையான இடங்களையும், ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களையும், 7.சந்தைவெளிகளில் வந்தனங்களையும், மனுஷரால் ரபீ, ரபீ, என்று அழைக்கப்படுவதையும் விரும்புகிறார்கள் - மத்தேயு 23:3-7
யார் சிங்காசனத்தில் உட்கார தகுதியுள்ளவர்?
வேதபாரகரும் பரிசேயரும் மோசேயினுடைய ஆசனத்தில் உட்கார துகுதியற்றவர்களாய் இருந்தார்கள், காரணம் அவர்களால் தாங்கள் போதிக்கின்ற படி வாழ முடியவில்லை
தாங்கள் போதிக்கின்ற படி வாழ்ந்துக் காட்ட யாரால் தான் கூடும்? அதனால் தான் கர்த்தர் தன் சீஷர்களிடம், வேதபாரகர் மற்றும் பரிசேயரின் செய்கையின்படி செய்யாதிருங்கள் என்றார், அப்படியென்றால் சிங்காசனத்தில் உட்கார தகுதியுள்ளவர் யார்? யாரால் தான் போதிக்கின்ற படி வாழ்ந்துக் காட்ட முடியும்? அது நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மாத்திரமே - 1.பின்பு இயேசு ஜனங்களையும் தம்முடைய சீஷர்களையும் நோக்கி: 2.வேதபாரகரும் பரிசேயரும் மோசேயினுடைய ஆசனத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள்; 3.ஆகையால், நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிற யாவையும் கைக்கொண்டு செய்யுங்கள்; அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள்; ஏனெனில், அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள். 4.சுமப்பதற்கரிய பாரமான சுமைகளைக் கட்டி மனுஷர் தோள்களின்மேல் சுமத்துகிறார்கள்; தாங்களோ ஒரு விரலினாலும் அவைகளைத் தொடமாட்டார்கள். 5.தங்கள் கிரியைகளையெல்லாம் மனுஷர் காணவேண்டுமென்று செய்கிறார்கள்; தங்கள் காப்புநாடாக்களை அகலமாக்கி, தங்கள் வஸ்திரங்களின் தொங்கல்களைப் பெரிதாக்கி, 6.விருந்துகளில் முதன்மையான இடங்களையும், ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களையும், 7.சந்தைவெளிகளில் வந்தனங்களையும், மனுஷரால் ரபீ, ரபீ, என்று அழைக்கப்படுவதையும் விரும்புகிறார்கள் - மத்தேயு 23:1-10
தேவனுடைய ஆலயத்தில் தேவன்போல உட்கார்ந்து
மேலும் அந்திக்கிறிஸ்து, கேட்டின் மகனாகவும் பாவமனுஷனாகவும் வெளிப்படும் பொழுது, அவன் தேவனுடைய ஆலயத்தில் தேவன்போல உட்கார்ந்து இருப்பானாம், காரியங்கள் இப்படி இருக்க, தேவனுடைய ஆலயத்தில் முதன்மையான இடத்தில் உட்கார்வது எவ்வளவு ஆபத்தானது - 1.அன்றியும், சகோதரரே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வருகையையும், நாம் அவரிடத்திலே சேர்க்கப்படுவதையுங்குறித்து, நாங்கள் உங்களை வேண்டிக்கொள்ளுகிறது என்னவென்றால், 2.ஒரு ஆவியினாலாவது, வார்த்தையினாலாவது, எங்களிடத்திலிருந்து வந்ததாய்த் தோன்றுகிற ஒரு நிருபத்தினாலாவது, கிறிஸ்துவினுடைய நாள் சமீபமாயிருக்கிறதாகச் சொல்லப்பட்டால், உடனே சஞ்சலப்படாமலும் கலங்காமலும் இருங்கள். 3.எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது. 4.அவன் எதிர்த்து நிற்கிறவனாயும், தேவனென்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன்போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான் - II தெசலோனிக்கேயர் 2:1-4
நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள்
இப்படி பட்டவைகள் சத்துருவின் அடையாளமாகவும், தேவன் வெறுக்கிற காரியமாகவும் இருப்பதினால் தான், கர்த்தர் தன் சீஷர்களுக்கு வேதபாரகர் மற்றும் பரிசேயரின் செய்கையின்படி செய்யாதிருங்கள் என்றும், ரபீ என்றழைக்கப்படாதிருங்கள் என்றும் கட்டளைகளை கொடுத்தார் - 8.நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார், நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள். 9.பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார். 10.நீங்கள் குருக்கள் என்றும் அழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குக் குருவாயிருக்கிறார். 11.உங்களில் பெரியவனாயிருக்கிறவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன். 12.தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் - மத்தேயு 23:8-12
இவ்வாறு ஊழியத்தின் துவக்கத்தில், தன் சீஷர்களிடம் ஏளிமையாய் இருக்க சொல்லி கொடுத்த இயேசு கிறிஸ்து, தான் சிலுவைக்கு போகும் முன்பு, நாம் எக்காரணத்தைக் கொண்டும் மற்றவர்களை காட்டிலும் ஒரு விசேஷமானவர்கள் போல ஒரு அடைமொழியோடு அழைக்கப்படக் கூடாது என்றும் அறிவுறுத்தினார் - 8.நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார், நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள். 9.பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார். 10.நீங்கள் குருக்கள் என்றும் அழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குக் குருவாயிருக்கிறார் - மத்தேயு 23:8-10
அது மாத்திரம் இல்லாமல், ஊழியத்தில் மேலான ஊழியமான இயேசு கிறிஸ்து சீஷன் என்கிற ஊழியத்தின் அடையாளமே சிறியர்(தாழ்மையுள்ளவர்கள்) என்பது தான் என்றும் சொல்லி கொடுத்தார் - 40.உங்களை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான். 41.தீர்க்கதரிசி என்னும் நாமத்தினிமித்தம் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தீர்க்கதரிசிக்கேற்ற பலனை அடைவான்; நீதிமான் என்னும் நாமத்தினிமித்தம் நீதிமானை ஏற்றுக்கொள்ளுகிறவன் நீதிமானுக்கேற்ற பலனை அடைவான். 42.சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒருகலசம் தண்ணீர் மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற்போகான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் - மத்தேயு 10:40-42
அதனால் தான் "தீர்க்கதரிசி என்னும் நாமத்தினிமித்தம் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்ளுகிறவன், தீர்க்கதரிசி என்னும் நாமத்தினிமித்தம் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தீர்க்கதரிசிக்கேற்ற பலனை அடைவான்; நீதிமான் என்னும் நாமத்தினிமித்தம் நீதிமானை ஏற்றுக்கொள்ளுகிறவன் நீதிமானுக்கேற்ற பலனை அடைவான்" என்று சொன்ன கர்த்தர் "சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒருகலசம் தண்ணீர் மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற்போகான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்" என்று சொன்னார்.
ஒருவேளை இந்த உலகம் ஒரு தீர்க்கதரிசியை கவுரவப்படுத்தலாம், ஒரு நீதிமானைக் கூட ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் ஒருவன் இயேசு கிறிஸ்துவின் உண்மையான சீஷனாக(அப்போஸ்தலனாக) இருந்தால், வீட்டு வாசலிலேயே ஒருகலசம் தண்ணீர் மாத்திரம் குடிக்கக் கொடுத்து அனுப்பப்படும் நபராக தான் இருப்பார், அப்படி பட்ட சிறியவராக தான் இருக்கவும் வேண்டும், அது தான் கர்த்தரின் பார்வையில் மேலான ஊழியம்.
நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள்