யாக்கோபின் விளக்கம்
இயேசு கிறிஸ்து திரியேக தேவனாக, அதாவது பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியானவரின் தற்சுரூபமாய் இருக்கிறார்
இயேசு கிறிஸ்து திரியேக தேவனாக, அதாவது பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியானவரின் தற்சுரூபமாய் இருக்கிறார்
முந்தைய பாகம்: ஈசாக்கின் விளக்கம்
தேவனால் ஆசிர்வதிக்கப்பட்டு சீமானாயிருந்த ஆபிரகாமின் பேரனும், ஈசாக்கின் குமாரனுமாகிய யாக்கோபு, தனது 77வது வயதில், தலையனைக்கு பதிலாக கல்லை வைத்து தூங்கும் ஒரு பரதேசியாய், வெறும் கோலும் கையுமாய், பெயெர்செபாவிலிருந்து ஆரானுக்கு சென்றார், ஆனாலும் அவருக்கு தேவன் மேல் ஒரு நம்பிக்கை இருந்தது - 10.யாக்கோபு பெயெர்செபாவை விட்டுப் புறப்பட்டு ஆரானுக்குப் போகப் பிரயாணம்பண்ணி, 11.ஒரு இடத்திலே வந்து, சூரியன் அஸ்தமித்தபடியினால், அங்கே ராத்தங்கி, அவ்விடத்துக் கற்களில் ஒன்றை எடுத்து, தன் தலையின்கீழ் வைத்து, அங்கே நித்திரை செய்யும்படி படுத்துக்கொண்டான் - ஆதியாகமம் 28:10-11
யாக்கோபின் வயதை எப்படி கணக்கிடுவது?
30 வயதில் பார்வோனுக்கு முன்பாக நின்ற யோசேப்பு[ஆதியாகமம் 41:46], பரிபூரணமுள்ள 7 வருடங்கள் முடிந்து[ஆதியாகமம் 41:46], அதற்கு பின்பு 2 வருட பஞ்சமும் முடிந்து[ஆதியாகமம் 45:6], அதாவது தனது 39ம் வயதில் தன் தகப்பனாகிய யாக்கோபை சந்தித்த பொழுது, யாக்கோபின் வயது 130 என்று வேதாகமம் சொல்லுகிறது, அப்படியென்றால் யோசேப்பு பிறந்த பொழுது யாக்கோபின் வயது 91[ஆதியாகமம் 30:25], இந்த யோசேப்பு, யாக்கோபு ராகேலை திருமணம் செய்து 7ம் வருடத்தின் முடிவில் பிறந்தவர் என்றால், யாக்கோபு ராகேலை செய்தபொழுது அவரின் வயது 84[ஆதியாகமம் 29:30], அதற்கு 7 வருடங்களுக்கு முன்பே திருமண ஒப்பந்தம் செய்தார் என்றால்[ஆதியாகமம் 29:18], யாக்கோபு ஆரானுக்கு வந்த பொழுது அவரின் வயது 77.
அப்படி வெறும் கோலும் கையுமாய் சென்ற யாக்கோபுக்கு பெத்தேல் என்ற இடத்தில், தேவன் சொப்பனத்தில் தரிசனம் தந்து அவனை ஆசிர்வதித்தார் - 12.அங்கே அவன் ஒரு சொப்பனங் கண்டான்; இதோ, ஒரு ஏணி பூமியிலே வைக்கப்பட்டிருந்தது, அதின் நுனி வானத்தை எட்டியிருந்தது, அதிலே தேவதூதர் ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களுமாய் இருந்தார்கள். 13.அதற்கு மேலாகக் கர்த்தர் நின்று: நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனுமாகிய கர்த்தர்; நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன். 14.உன் சந்ததி பூமியின் தூளைப்போலிருக்கும்; நீ மேற்கேயும், கிழக்கேயும், வடக்கேயும், தெற்கேயும் பரம்புவாய்; உனக்குள்ளும் உன் சந்ததிக்குள்ளும் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும். 15.நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்தத் தேசத்துக்கு உன்னைத் திரும்பிவரப்பண்ணுவேன்; நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்றார். 16.யாக்கோபு நித்திரை தெளிந்து விழித்தபோது: மெய்யாகவே கர்த்தர் இந்த ஸ்தலத்தில் இருக்கிறார்; இதை நான் அறியாதிருந்தேன் என்றான். 17.அவன் பயந்து, இந்த ஸ்தலம் எவ்வளவு பயங்கரமாயிருக்கிறது! இது தேவனுடைய வீடேயல்லாமல் வேறல்ல, இது வானத்தின் வாசல் என்றான். 18.அதிகாலையிலே யாக்கோபு எழுந்து, தன் தலையின்கீழ் வைத்திருந்த கல்லை எடுத்து, அதைத் தூணாக நிறுத்தி, அதின்மேல் எண்ணெய் வார்த்து, 19.அந்த ஸ்தலத்திற்குப் பெத்தேல் என்று பேரிட்டான்; அதற்கு முன்னே அவ்வூருக்கு லூஸ் என்னும் பேர் இருந்தது - ஆதியாகமம் 28:12-19
அப்பொழுது யாக்கோபு தன்னை ஆசிர்வதித்த தேவனோடு ஒரு பொருத்தனை பண்ணிக்கொண்டார் என்று வேதாகமத்தில் பார்க்கிறோம், இது தான் வேதாகமத்தில் சொல்லப்பட்ட முதல் தசமபாக பொருத்தனையாகும், ஏன் மனித வரலாற்றிலேயே கூட இதுதான் முதல் பொருத்தனை சம்பவம் ஆகும், இந்த பொருத்தனையின் முதல் வேண்டுகோளே தேவன் யாக்கோபுடன் இருந்து, அவரை ஆசிர்வதிக்க வேண்டும் என்பதாய் இருந்தது - 20.அப்பொழுது யாக்கோபு: தேவன் என்னோடே இருந்து, நான் போகிற இந்த வழியிலே என்னைக் காப்பாற்றி, உண்ண ஆகாரமும், உடுக்க வஸ்திரமும் எனக்குத் தந்து, 21.என்னை என் தகப்பன் வீட்டுக்குச் சமாதானத்தோடே திரும்பிவரப்பண்ணுவாரானால், கர்த்தர் எனக்குத் தேவனாயிருப்பார்; 22.நான் தூணாக நிறுத்தின இந்தக் கல் தேவனுக்கு வீடாகும்; தேவரீர் எனக்குத் தரும் எல்லாவற்றிலும் உமக்குத் தசமபாகம் செலுத்துவேன் என்று சொல்லிப் பொருத்தனைபண்ணிக்கொண்டான் - ஆதியாகமம் 28:20-22
மூன்று மேய்ப்பர்களின் விளக்கம்
இந்த பொருத்தனைக்கு பின்பு பிரயாணம் செய்த யாக்கோபு மூன்று ஆட்டுமந்தைகளை கண்டு அதின் மேய்ப்பர்களோடு பேசினாராம் - 1.யாக்கோபு பிரயாணம்பண்ணி, கீழ்த்திசையாரின் தேசத்தில் போய்ச் சேர்ந்தான். 2.அங்கே வயல்வெளியிலே ஒரு கிணற்றையும், அதின் அருகே மடக்கியிருக்கிற மூன்று ஆட்டுமந்தைகளையும் கண்டான்; அந்தக் கிணற்றிலே மந்தைகளுக்குத் தண்ணீர் காட்டுவார்கள்; அந்தக் கிணற்றின் வாய் ஒரு பெரிய கல்லினால் அடைக்கப்பட்டிருந்தது. 3.அவ்விடத்தில் மந்தைகள் எல்லாம் சேர்ந்தபின் கிணற்றின் வாயிலிருக்கும் கல்லை மேய்ப்பர் புரட்டி, ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டி, மறுபடியும் கல்லை முன்னிருந்தபடி கிணற்றின் வாயில் வைப்பார்கள். 4.யாக்கோபு அவர்களைப் பார்த்து: சகோதரரே, நீங்கள் எவ்விடத்தார் என்றான்; அவர்கள், நாங்கள் ஆரான் ஊரார் என்றார்கள் - ஆதியாகமம் 29:1-4
தேவ ஆவியானவர் மோசேயின் மூலமாக இதை எழுதும் பொழுது, இது ஏறக்குறைய 500 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவமாக இருந்தது, 500 ஆண்டுகளுக்கு முன்பு யாக்கோபு மூன்று ஆட்டுமந்தைகளை கண்டதை குறித்து ஏன் தேவ ஆவியானவர் மோசேயிடம் சொல்ல வேண்டும்? ஏனென்றால் மூன்று ஆட்டுமந்தைகளின் மேய்ப்பர்கள் என்று சொல்லும் பொழுது, அவர்கள் மூன்று பேராய் இருந்தார்கள் என்பதை அறிந்துக் கொள்ளலாம், அது யாக்கோபு நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவை அப்போஸ்தலனாகிய பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான் மூன்று நபர்களாக தரிசித்ததிற்க்கு ஒப்பாகவும், ஆபிரகாம் மம்ரேயின் சமபூமியிலே இயேசு கிறிஸ்துவை மூன்று புருஷர்களாக தரிசித்ததிற்க்கு ஒப்பாகவும் இருந்தது.
இப்படி தன்னை சந்தித்த கர்த்தரிடம், யாக்கோபு பெத்துவேலின் குமாரனாகிய லாபானை அறிவீர்களா என்று கேட்பதற்க்கு பதிலாக, நாகோரின் குமாரனாகிய லாபானை அறிவீர்களா என்று கேட்டது, தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்துவை குறித்த கேள்வியாகவே இருக்கிறது, ஏனென்றால் லாபான் என்கிற பெயரின் உண்மையான அர்த்தம் பரிசுத்தம் என்பதாகும் - 5.அப்பொழுது அவன்: நாகோரின் குமாரனாகிய லாபானை அறிவீர்களா என்று கேட்டான்; அறிவோம் என்றார்கள். 6.அவன் சுகமாயிருக்கிறானா என்று விசாரித்தான்; அதற்கு அவர்கள்: சுகமாயிருக்கிறான்; அவன் குமாரத்தியாகிய ராகேல், அதோ, ஆடுகளை ஓட்டிக்கொண்டு வருகிறாள் என்று சொன்னார்கள். 7.அப்பொழுது அவன்: இன்னும் வெகு பொழுதிருக்கிறதே; இது மந்தைகளைச் சேர்க்கிற வேளை அல்லவே, ஆடுகளுக்குத் தண்ணீர்காட்டி, இன்னும் மேயவிடலாம் என்றான். 8.அதற்கு அவர்கள்: எல்லா மந்தைகளும் சேருமுன்னே அப்படிச் செய்யக்கூடாது; சேர்ந்தபின் கிணற்றின் வாயிலுள்ள கல்லைப் புரட்டுவார்கள்; அப்பொழுது ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டுவோம் என்றார்கள். 9.அவர்களோடே அவன் பேசிக்கொண்டிருக்கும்போதே, தன் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த ராகேல் அந்த ஆடுகளை ஓட்டிக்கொண்டு வந்தாள் - ஆதியாகமம் 29:5-9
முறைப்படி, யாக்கோபு தன்னை சந்தித்த கர்த்தரிடம், பெத்துவேலின் குமாரனாகிய லாபானை அறிவீர்களா என்று தான் கேட்டிருக்க வேண்டும், அப்படி தான் ஈசாக்கு யாக்கோபை சொல்லி அனுப்பியிருந்தார் - 1.ஈசாக்கு யாக்கோபை அழைத்து, அவனை ஆசீர்வதித்து, நீ கானானியருடைய குமாரத்திகளில் பெண்கொள்ளாமல், 2.எழுந்து புறப்பட்டு, பதான் அராமிலிருக்கிற உன் தாயினுடைய தகப்பனாகிய பெத்துவேலுடைய வீட்டுக்குப்போய், அவ்விடத்தில் உன் தாயின் சகோதரனாகிய லாபானின் குமாரத்திகளுக்குள் பெண்கொள் என்று அவனுக்குக் கட்டளையிட்டான். 3.சர்வவல்லமையுள்ள தேவன் உன்னை ஆசீர்வதித்து, நீ பல ஜனக்கூட்டமாகும்படி உன்னைப் பலுகவும் பெருகவும்பண்ணி; 4.தேவன் ஆபிரகாமுக்குக் கொடுத்ததும் நீ பரதேசியாய்த் தங்குகிறதுமான தேசத்தை நீ சுதந்தரித்துக்கொள்ளும்படி ஆபிரகாமுக்கு அருளிய ஆசீர்வாதத்தை உனக்கும் உன் சந்ததிக்கும் அருளுவாராக என்று சொல்லி; 5.ஈசாக்கு யாக்கோபை அனுப்பிவிட்டான். அப்பொழுது அவன் பதான் அராமிலிருக்கும் சீரியா தேசத்தானாகிய பெத்துவேலுடைய குமாரனும், தனக்கும் ஏசாவுக்கும் தாயாகிய ரெபெக்காளின் சகோதரனுமான லாபானிடத்துக்குப் போகப் புறப்பட்டான் - ஆதியாகமம் 28:1-5
மேலும், யாக்கோபு குறிப்பிட்ட நேரத்திற்க்கு முன்பே ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டினது, அக்கினிக்கு வைக்கப்பட்டிருந்த இந்த உலகம் அழியும் முன்பே இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு ஜீவ தண்ணீராக வந்ததையும் குறிக்கிறது - யாக்கோபு தன் தாயின் சகோதரனான லாபானுடைய குமாரத்தியாகிய ராகேலையும், தன் தாயின் சகோதரனாகிய லாபானின் ஆடுகளையும் கண்டபோது, யாக்கோபு போய், கிணற்றின் வாயிலிருந்த கல்லைப் புரட்டி, தன் தாயின் சகோதரனாகிய லாபானின் ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டினான் - ஆதியாகமம் 29:10
அடுத்த பாகம்: மூன்று வகை ஆடுகளின் விளக்கம்