ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபின் விளக்கம்
இயேசு கிறிஸ்து திரியேக தேவனாக, அதாவது பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியானவரின் தற்சுரூபமாய் இருக்கிறார்
இயேசு கிறிஸ்து திரியேக தேவனாக, அதாவது பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியானவரின் தற்சுரூபமாய் இருக்கிறார்
முந்தைய பாகம்: மூன்று தேவதூதர்களின் விளக்கம்
தேவன் "ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு" என்ற மூன்று பேருடன் செய்த உடன்படிக்கையின் நிமித்தமாகவே இஸ்ரவேல் மக்கள் பல காலகட்டங்களில் பாதுகாக்கப்பட்டார்கள் என்பதை இந்த வசனங்களில் பார்க்கலாம் - 22.யோவாகாசின் நாட்களிலெல்லாம் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேல் இஸ்ரவேலை ஒடுக்கினான். 23.ஆனாலும் கர்த்தர் அவர்களுக்கு இரங்கி, ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களோடு செய்த தமது உடன்படிக்கையினிமித்தம் அவர்களை அழிக்கச் சித்தமாயிராமலும், அவர்களை இன்னும் தம்முடைய முகத்தைவிட்டுத் தள்ளாமலும் அவர்கள்மேல் மனதுருகி, அவர்களை நினைத்தருளினார் - II இராஜாக்கள் 13:22-23
அது மாத்திரம் இல்லாமல், நாம் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஜெபிப்பது போல, மோசே "ஆபிரகாம், ஈசாக்கு, மற்றும் யாக்கோபு" என்ற மூன்று பெயரை முன்னிறுத்தி ஜெபித்ததையும் இந்த வசனங்களில் பார்க்கிறோம் - 25.கர்த்தர் உங்களை அழிப்பேன் என்று சொன்னபடியினால், நான் முன்போல் கர்த்தரின் சமுகத்தில் இரவும் பகலும் நாற்பதுநாள் விழுந்துகிடந்தேன்; அப்பொழுது நான் கர்த்தரை நோக்கிப் பண்ணின விண்ணப்பமாவது: 26.கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் உம்முடைய மகத்துவத்தினாலே மீட்டு, பலத்த கையினால் எகிப்திலிருந்து கொண்டுவந்த உமது ஜனத்தையும், உமது சுதந்தரத்தையும் அழிக்காதிருப்பீராக. 27.கர்த்தர் அவர்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணியிருந்த தேசத்தில் அவர்களைப் பிரவேசிக்கப்பண்ணக் கூடாமற்போனபடியினாலும், அவர்களை வெறுத்தபடியினாலும், அவர்களை வனாந்தரத்தில் கொன்றுபோடும்படிக்கே கொண்டுவந்தார் என்று நாங்கள் விட்டுப் புறப்படும்படி நீர் செய்த தேசத்தின் குடிகள் சொல்லாதபடிக்கு, 28.தேவரீர் இந்த ஜனங்களின் முரட்டாட்டத்தையும், இவர்கள் ஆகாமியத்தையும், இவர்கள் பாவத்தையும் பாராமல், உமது தாசராகிய ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களை நினைத்தருளும். 29.நீர் உமது மகா பலத்தினாலும், ஓங்கிய புயத்தினாலும் புறப்படப்பண்ணின இவர்கள் உமது ஜனமும் உமது சுதந்தரமுமாயிருக்கிறார்களே என்று விண்ணப்பம்பண்ணினேன் - உபாகமம் 9:25-29
எது எப்படி சாத்தியமாகும்? மோசே எப்படி இஸ்ரவேல் மக்களின் முன்னோர்களான "ஆபிரகாம், ஈசாக்கு, மற்றும் யாக்கோபு" என்கிற பெயரை முன்னிறுத்தி ஜெபிக்கலாம்? நன்றாய் ஆராய்ந்துப் பார்த்தால், ஆபிரகாம், ஈசாக்கு, மற்றும் யாக்கோபு என்கிற பெயர்கள் இயேசு கிறிஸ்துவையே குறிக்கிறது என்பதை அறிந்துக் கொள்ளலாம்.
இதை எப்படி ஊர்ஜிதம் செய்வது? இயேசு கிறிஸ்து ஒருமுறை தன்னை விசுவாசிப்பவர்கள், பரலோகராஜ்யத்தில் "ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களோடே பந்தியிருப்பார்கள்" என்று சொன்னார் - 10.இயேசு இதைக் கேட்டு ஆச்சரியப்பட்டு, தமக்குப் பின் செல்லுகிறவர்களை நோக்கி: இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 11.அநேகர் கிழக்கிலும் மேற்கிலுமிருந்து வந்து, பரலோகராஜ்யத்தில் ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களோடே பந்தியிருப்பார்கள். 12.ராஜ்யத்தின் புத்திரரோ புறம்பான இருளிலே தள்ளப்படுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்குமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் - மத்தேயு 8:10-12
அது தன்னை சூழ்ந்திருந்த அவிசுவாசிகளின் நிமித்தமாகவே அப்படிச் சொன்னார், இப்படி எல்லோர் முன்பும், "ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களோடே பந்தியிருப்பார்கள்" என்று சொன்ன கர்த்தர், தன் அன்பு சீஷர்களுடன் தனித்திருக்கும் பொழுது "என்னோடு பந்தியிருப்பீர்கள்" என்று சொன்னதை பார்க்கலாம் - நீங்கள் என் ராஜ்யத்திலே என் பந்தியில் போஜனபானம்பண்ணி, இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாய்ச் சிங்காசனங்களின்மேல் உட்காருவீர்கள் என்றார் - லூக்கா 22:30
இப்படியாக தேவக்குமாரனாகிய இயேசு கிறிஸ்து, ஆபிரகாம், ஈசாக்கு, மற்றும் யாக்கோபு என்கிற மூன்று நபர்களைக் கொண்டு பேசப்பட்டதற்கு காரணம் கர்த்தரின் திரித்துவமே, அதாவது இயேசு கிறிஸ்து பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்கிற மூன்று பேரிடத்திலிருந்து உண்டாவனராகவும், அவர்களின் தற்சுரூபமாகவும் இருக்கிறார் என்பதை விளக்குவதற்க்காகவே, இதை அப்போஸ்தலனாகிய யோவான் விவரிக்கும் பொழுது பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியாகிய திரியேக தேவன் ஜலம், இரத்தம், ஆவியாக கிறிஸ்து இயேசுவுக்குள் இருந்தார்கள் என்று குறிப்பிட்டுள்ளார் - பூலோகத்திலே சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது - I யோவான் 5:8
இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது
இம்மூன்றும் ஒருமைப்பட்டி இருக்கிறது என்பதை விளக்குவதற்காகவே, "ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு" என்ற மூன்று பேரை பயன்படுத்துவதற்கு பதிலாக, தேவன் "தாவீதின்" நிமித்தம் இந்த நகரத்தை ரட்சிப்பேன் என்று சொன்னதை பார்க்கிறோம் - 32.ஆகையால் கர்த்தர் அசீரியா ராஜாவைக்குறித்து: அவன் இந்த நகரத்திற்குள் பிரவேசிப்பதில்லை; இதின்மேல் அம்பு எய்வதுமில்லை; இதற்குமுன் கேடகத்தோடே வருவதுமில்லை; இதற்கு எதிராகக் கொத்தளம் போடுவதுமில்லை. 33.அவன் இந்த நகரத்திற்குள் பிரவேசியாமல், தான் வந்தவழியே திரும்பிப்போவான். 34.என்நிமித்தமும் என் தாசனாகிய தாவீதின்நிமித்தமும் நான் இந்த நகரத்தை இரட்சிக்கும்படிக்கு, இதற்கு ஆதரவாயிருப்பேன் என்பதைக் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்லியனுப்பினான் - II இராஜாக்கள் 19:32-34
ஒருவேளை கர்த்தர் சொன்ன "பரலோகராஜ்யத்தில் ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களோடே பந்தியிருப்பார்கள்" என்கிற வாக்குத்தத்தம், ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களையே குறிக்குமானால், இந்த வாக்குத்தத்தை சாராள் எப்படி எடுத்துக் கொள்வார்? சாராள் இந்த பூமியிலேயே ஆபிரகாமையும் ஈசாக்கையும் கண்டவர் அல்லவா? ஒருவேளை ஆபிரகாமுக்கு முன்னோரான ஏனோக்கு இந்த வாக்குத்தத்தை எப்படி எடுத்துக் கொள்வார், ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு மூன்று பேருமே அவருக்கு பேரக்குழந்தைகள் தானே? இதற்காகவா நாங்கள் பரலோகம் செல்ல வேண்டும் என்று தானே கேட்பார்கள்? இதிலிருந்து ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பது பிதா, வார்த்தை, மற்றும் பரிசுத்த ஆவியானவரையே குறிக்கிறது என்பதை அறிந்துக் கொள்ளலாம், அது நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே, அவரே நம் பரலோக பாக்கியமாகிய தேவனுடைய ராஜ்யத்தின் பந்தி - 23.அப்பொழுது ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, இரட்சிக்கப்படுகிறவர்கள் சிலபேர்தானோ என்று கேட்டான்; அதற்கு அவர்: 24.இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள், அநேகர் உட்பிரவேசிக்க வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 25.வீட்டெஜமான் எழுந்து, கதவைப் பூட்டின பின்பு, நீங்கள் வெளியே நின்று: ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டுமென்று சொல்லிக் கதவைத் தட்டும்போது, அவர் பிரதியுத்தரமாக: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன் என்று உங்களுக்குச் சொல்லுவார். 26.அப்பொழுது நீங்கள்: உம்முடைய சமுகத்தில் போஜனபானம்பண்ணினோமே, நீர் எங்கள் வீதிகளில் போதகம்பண்ணினீரே என்று சொல்லுவீர்கள். 27.ஆனாலும் அவர்: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன், அக்கிரமக்காரராகிய நீங்களெல்லாரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று சொல்லுவார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 28.நீங்கள் ஆபிரகாமையும் ஈசாக்கையும் யாக்கோபையும் சகல தீர்க்கதரிசிகளையும் தேவனுடைய ராஜ்யத்திலிருக்கிறவர்களாகவும், உங்களையோ புறம்பே தள்ளப்பட்டவர்களாகவும் காணும்போது உங்களுக்கு அழுகையும் பற்கடிப்பும் அங்கே உண்டாயிருக்கும். 29.கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் இருந்து ஜனங்கள் வந்து, தேவனுடைய ராஜ்யத்தில் பந்தியிருப்பார்கள். 30.அப்பொழுது முந்தினோர் பிந்தினோராவார்கள், பிந்தினோர் முந்தினோராவார்கள் என்றார் - லூக்கா 13:23-30
உதாரணத்திற்கு, தரித்திரனாகிய லாசரு மரித்த ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான், என்று சொல்லும் பொழுது, அது பிதாவின் மடியையே குறிக்கிறது, ஒருவேளை அது ஆபிரகாமுடைய மடியாய் இருக்குமானால், இன்று முதல் லாசரு உங்கள் மடியில் தான் இருப்பான் செய்தியை கேட்டவுடனே ஆபிரகாமே முகத்தை சுழித்திருப்பார் - 22.பின்பு அந்தத் தரித்திரன் மரித்து, தேவதூதரால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான்; ஐசுவரியவானும் மரித்து அடக்கம்பண்ணப்பட்டான். 23.பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான். 24.அப்பொழுது அவன்: தகப்பனாகிய ஆபிரகாமே, நீர் எனக்கு இரங்கி, லாசரு தன் விரலின் நுனியைத் தண்ணீரில் தோய்த்து, என் நாவைக் குளிரப்பண்ணும்படி அவனை அனுப்பவேண்டும்; இந்த அக்கினிஜுவாலையில் வேதனைப்படுகிறேனே என்று கூப்பிட்டான். 25.அதற்கு ஆபிரகாம்: மகனே, நீ பூமியிலே உயிரோடிருக்குங் காலத்தில் உன் நன்மைகளை அனுபவித்தாய், லாசருவும் அப்படியே தீமைகளை அநுபவித்தான், அதை நினைத்துக்கொள்; இப்பொழுது அவன் தேற்றப்படுகிறான், நீயோ வேதனைப்படுகிறாய் - லூக்கா 16:24
அது போல யோவான் ஸ்நானனைக் குறித்து, அவன் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே நடப்பான் என்று சொல்லும் போது, அது பரிசுத்த ஆவியானவரையே குறிக்கிறது - 15.அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாயிருப்பான், திராட்சரசமும் மதுவும் குடியான், தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பான். 16.அவன் இஸ்ரவேல் சந்ததியாரில் அநேகரை அவர்கள் தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திருப்புவான். 17.பிதாக்களுடைய இருதயங்களைப் பிள்ளைகளிடத்திற்கும், கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்கும் திருப்பி, உத்தமமான ஜனத்தைக் கர்த்தருக்கு ஆயத்தப்படுத்தும்படியாக, அவன் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே நடப்பான் என்றான் - லூக்கா 1:15-17
அடுத்த பாகம்: யூதாவின் விளக்கம்