முந்தைய பாகம்: யோனாவிலும் பெரியவரும் சாலொமோனிலும் பெரியவருமாக
யோனா தீர்க்கத்தரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை என்று சொன்ன கர்த்தர், யோனாவிலும் பெரியவராக தன்னோடு இருக்கும் பிதாவின் அடையாளத்தை குறித்தும் சாலொமோனிலும் பெரியவராகிய பரிசுத்த ஆவியின் அடையாளத்தை குறித்தும் சொன்னதை தான் இந்த தொகுப்பில் பார்த்தோம் - 39.அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இந்தப் பொல்லாத விபசாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள்; ஆனாலும் யோனா தீர்க்கத்தரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. 40.யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்ததுபோல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார். 41.யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினார்கள். இதோ, யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே நினிவே பட்டணத்தார் இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவார்கள். 42.தென்தேசத்து ராஜஸ்திரீ பூமியின் எல்லைகளிலிருந்து சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்க வந்தாள். இதோ, சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே அந்த ராஜஸ்திரீ இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவாள் - மத்தேயு 12:39-42
ஆனால் அதே மத்தேயு எழுதின புத்தகத்தில், இன்னொரு இடத்திலும் நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை என்று சொன்னதை தான் இந்த வசனத்தில் பார்க்கிறோம் - 1.பரிசேயரும் சதுசேயரும் அவரைச் சோதிக்கும்படி அவரிடத்தில் வந்து: வானத்திலிருந்து ஓர் அடையாளத்தைத் தங்களுக்குக் காண்பிக்கவேண்டும் என்று கேட்டார்கள். 2.அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: அஸ்தமனமாகிறபோது, செவ்வானமிட்டிருக்கிறது, அதினால் வெளிவாங்கும் என்று சொல்லுகிறீர்கள். 3.உதயமாகிறபோது, செவ்வானமும் மந்தாரமுமாயிருக்கிறது, அதினால் இன்றைக்குக் காற்றும் மழையும் உண்டாகும் என்று சொல்லுகிறீர்கள். மாயக்காரரே, வானத்தின் தோற்றத்தை நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, காலங்களின் அடையாளங்களை நிதானிக்க உங்களால் கூடாதா? 4.இந்தப் பொல்லாத விபசார சந்ததியார் அடையாளம் தேடுகிறார்கள்; யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை என்று சொல்லி, அவர்களை விட்டுப் புறப்பட்டுப்போனார் - மத்தேயு 16:1-4
யோனாவிலும் பெரியவர் மற்றும் சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார் என்று இரண்டு அடையாளத்தை குறித்து சொன்னது போலவே, இந்த இடத்திலும் காற்று மழை என்கிற இரண்டு அடையாளத்தை கர்த்தர் சொன்னார், இப்படியாக நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவானவர், பிதா, வார்த்தை, மற்றும் பரிசுத்த ஆவி என்கிற காணக்கூடாத தேவனுடைய தற்சுரூபமாயிருக்கிறார் - 1.பரிசேயரும் சதுசேயரும் அவரைச் சோதிக்கும்படி அவரிடத்தில் வந்து: வானத்திலிருந்து ஓர் அடையாளத்தைத் தங்களுக்குக் காண்பிக்கவேண்டும் என்று கேட்டார்கள். 2.அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: அஸ்தமனமாகிறபோது, செவ்வானமிட்டிருக்கிறது, அதினால் வெளிவாங்கும் என்று சொல்லுகிறீர்கள். 3.உதயமாகிறபோது, செவ்வானமும் மந்தாரமுமாயிருக்கிறது, அதினால் இன்றைக்குக் காற்றும் மழையும் உண்டாகும் என்று சொல்லுகிறீர்கள். மாயக்காரரே, வானத்தின் தோற்றத்தை நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, காலங்களின் அடையாளங்களை நிதானிக்க உங்களால் கூடாதா? 4.இந்தப் பொல்லாத விபசார சந்ததியார் அடையாளம் தேடுகிறார்கள்; யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை என்று சொல்லி, அவர்களை விட்டுப் புறப்பட்டுப்போனார் - மத்தேயு 16:1-4
இப்படியாக இந்த உவமையில் சொல்லப்பட்ட "அஸ்தமனமாகிறபோது, செவ்வானமிட்டிருக்கிறது" என்கிற காரியம் இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தையும், "அதினால் வெளிவாங்கும்" என்கிற காரியம் கிறிஸ்துவின் ரத்தத்தினால் உண்டாகும் சுத்திகரிப்பையும் குறிக்கிறது, அதேபோல தானே உதயமாகிறபோது என்கிற காரியம் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலையும், "செவ்வானமும் மந்தாரமுமாயிருக்கிறது அதினால் இன்றைக்குக் காற்றும் மழையும் உண்டாகும்" என்கிற காரியம் இயேசு கிறிஸ்துவால் நாம் பெற்றுக் கொள்ளும் கிருபையையும் சத்தியத்தையும் குறிக்கிறது
அடுத்த பாகம்: கர்த்தரோடு இருக்கிறவரும் கர்த்தரோடு சேர்க்கிறவரும்