முந்தைய பாகத்தை படிக்க மூன்றாந்தரமும் அந்த வார்த்தைகளையே சொல்லி
இயேசு கிறிஸ்து சிலுவைக்குப் போகும் முன்பு, கெத்செமனே என்னப்பட்ட இடத்தில், மூன்று முறை தரையிலே முகங்குப்புற விழுந்து ஜெபம்பண்ணினது கர்த்தரின் திருத்துவத்தை வெளிப்படுத்துவதாகவே இருக்கிறது, அதாவது கர்த்தர் பிதாவின் மைந்தனாகவும், வார்த்தையானவரின் மைந்தனாகவும், பரிசுத்த ஆவியானவரின் மைந்தனாகவும் வேண்டிக் கொண்டதையே வெளிப்படுத்துகிறது - 15.அவர்கள் போஜனம்பண்ணினபின்பு, இயேசு சீமோன்பேதுருவை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக என்றார். 16.இரண்டாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார். 17.மூன்றாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா என்றார். என்னை நேசிக்கிறாயா என்று அவர் மூன்றாந்தரம் தன்னைக் கேட்டபடியினாலே, பேதுரு துக்கப்பட்டு: ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்றான். இயேசு: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார் - யோவான் 21:15-17
அடுத்த பாகம்: மத்தேயுவின் விளக்கம்