நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, சிலுவையில் தன் ஜீவனை விடும் கடைசி வினாடிகளில், தம்முடைய தாயாரிடமும், தமக்கு அன்பாயிருந்த சீஷனிடம் பேசினது யோவான் சுவிசேஷ புஸ்தகத்தில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது - 26.அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார். 27.பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார். அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான். 28.அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன் என்றார். 29.காடி நிறைந்த பாத்திரம் அங்கே வைக்கப்பட்டிருந்தது; அவர்கள் கடற்காளானைக் காடியிலே தோய்த்து, ஈசோப்புத்தண்டில் மாட்டி, அவர் வாயினிடத்தில் நீட்டிக்கொடுத்தார்கள். 30.இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார் - யோவான் 19:26-30
இப்படி கர்த்தர், தம்முடைய தாயாரிடமும், தமக்கு அன்பாயிருந்த சீஷனிடம் பேசினது, படிப்பவர்களின் உள்ளத்தை உடைக்கும் உயிருள்ள வார்த்தைகளாக இருக்கிறது, அதிலும் தமக்கு அன்பாயிருந்த சீஷனிடம் "அதோ உன் தாய்" என்று சொன்னது, கர்த்தர் மனுகுலத்திற்கே தெய்வத்தை அடையாளம் காட்டினது என்று சொல்லி மரியாளை தெய்வமாக வணங்குவோரும் உண்டு, இதுவே ரோமன் கத்தோலிக்க சபையின் ஆதாரமாகவும் இருக்கிறது, அதே சமயத்தில், யோவான் சுவிசேஷ புஸ்தகத்தில் மாத்திரம் சொல்லப்பட்ட இந்த சம்பவம், மரியாளுக்கும் யோவனுக்கும் சம்பந்தபட்ட விஷயம், இதில் நமக்கு ஒன்றும் இல்லை என்று சொல்லி, கர்த்தர் பேசின உயிருள்ள வார்த்தைகளை ஒதுக்கி தள்ளுவோரும் உண்டு.
இதை சற்றே பொறுமையாக ஆராய்ந்து, இதன் உண்மையனாக அர்த்ததை அறிந்து தெளிவான முடிவு எடுப்பது அவசியம், ஏனென்றால், நம் இரட்சகராகிய இயேசு கிறிஸ்து உவமைகள் மூலமாய் பேசுகிறவராகவே இந்த பூமிக்கு வந்தார் என்றும், உவமைகளாகளின் உண்மையான அர்த்தம், கர்த்தரின் பிள்ளைகளுக்கு மாத்திரமே பரிசுத்த ஆவியனவரால் சொல்லி கொடுக்கப்படும் என்றும் தீர்க்கதரிசனம் உரைக்கிறது - 1.என் ஜனங்களே, என் உபதேசத்தைக் கேளுங்கள்; என் வாயின் வசனங்களுக்கு உங்கள் செவிகளைச் சாயுங்கள். 2.என் வாயை உவமைகளால் திறப்பேன்; பூர்வகாலத்து மறைபொருள்களை வெளிப்படுத்துவேன். 3.அவைகளை நாங்கள் கேள்விப்பட்டு அறிந்தோம்; எங்கள் பிதாக்கள் அவைகளை எங்களுக்குத் தெரிவித்தார்கள். 4.பின்வரும் சந்ததியான பிள்ளைகளுக்கு நாங்கள் அவைகளை மறைக்காமல், கர்த்தரின் துதிகளையும் அவருடைய பலத்தையும், அவர் செய்த அவருடைய அதிசயங்களையும் விவரிப்போம் - சங்கீதம் 78:1-2
இதை தான் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையிலும் பார்க்கிறோம், கர்த்தர் "எலியா வந்தாயிற்று" என்று சொன்னால், யோவான் ஸ்நானனைக் குறித்துப் பேசுகிறார் என்று அர்த்தம், கர்த்தர் "என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதிருங்கள்" என்று சொன்னால், தேவாலயத்தை குறித்துப் பேசுகிறார் என்று அர்த்தம், "இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள்" என்று சொன்னால், கர்த்தர் தன் சரீரத்தைக் குறித்துப் பேசுகிறார் என்று அர்த்தம், "புளித்தமாவைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்" என்றால், தன்னை தேவன் அல்ல என்பவர்களிடம் எச்சரிக்கையாயிருங்கள் என்று அர்த்தம், இதை தான் வேதாகமம் இப்படிச் சொல்லுகிறது - 34.இவைகளையெல்லாம் இயேசு ஜனங்களோடே உவமைகளாகப் பேசினார்; உவமைகளினாலேயன்றி, அவர்களோடே பேசவில்லை. 35.என் வாயை உவமைகளினால் திறப்பேன்; உலகத்தோற்றமுதல் மறைபொருளானவைகளை வெளிப்படுத்துவேன் என்று தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. 36.அப்பொழுது இயேசு ஜனங்களை அனுப்பிவிட்டு வீட்டுக்குப் போனார். அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து, நிலத்தின் களைகளைப்பற்றிய உவமையை எங்களுக்கு வெளிப்படுத்தவேண்டுமென்று கேட்டார்கள் - மத்தேயு 13:34-36
உவமையை எங்களுக்கு வெளிப்படுத்தவேண்டுமென்று என்று கேட்ட சீஷர்களை போல, நாம் கர்த்தரை வேண்டிக் கொள்ளுவோமானால், தேவ ஆவியானவர் உவமைகளின் உண்மையான அர்த்தத்தை சொல்லி கொடுப்பார் என்று வேதாகமம் சொல்லுகிறது - 12.ஆனாலும், எலியா வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள்; இவ்விதமாய் மனுஷகுமாரனும் அவர்களால் பாடுபடுவார் என்றார். 13.அவர் யோவான் ஸ்நானனைக்குறித்துத் தங்களுக்குச் சொன்னார் என்று சீஷர்கள் அப்பொழுது அவர்கள் அறிந்துகொண்டார்கள் - மத்தேயு 17:12-13
அப்படியென்றால், பரலோகத்தின் பிள்ளையாம் இயேசு கிறிஸ்து, சிலுவையில் தன் ஜீவனை விடும் கடைசி நேரத்தில் சொன்ன "அதோ உன் தாய்" என்பதும் உவமை தானே? உவமை என்றால் அது மரியாளை குறித்ததாய் இல்லாமல், வேறு ஒரு நபரை குறித்ததாய் தானே இருக்க வேண்டும், இயேசுவின் தாயாக சிலுவையினருகே கண்ணீரோடு நின்ற அந்த நபர் யார்?
தொடர்ந்து படிக்க மோசேயின் இரண்டு தாயார்கள்