முந்தைய பாகம்: மூன்று அப்பத்தின் விளக்கம்
இயேசு கிறிஸ்து பிதா, வார்த்தை, மற்றும் பரிசுத்த ஆவி என்ற காணக்கூடாத தேவனுடைய தற்சுரூபமாய், முதற்பேறானவராய், நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார், இயேசு கிறிஸ்துவின் திருத்துவதை அப்போஸ்தலனாகிய யோவான் இவ்வாறு விளக்கியுள்ளார், ஒருமுறை விபசாரத்திலே கண்டுபிடிக்கப்பட்டு, இயேசு கிறிஸ்துவால் காப்பாற்றப்பட்ட ஸ்திரீ தனித்திருந்த இயேசுவின் நடுவே நின்றாள் என்று எழுதியுள்ளார் - 1.இயேசு ஒலிவமலைக்குப் போனார். 2.மறுநாள் காலையிலே அவர் திரும்பி தேவாலயத்திற்கு வந்தபோது, ஜனங்களெல்லாரும் அவரிடத்தில் வந்தார்கள். அவர் உட்கார்ந்து அவர்களுக்கு உபதேசம்பண்ணினார். 3.அப்பொழுது விபசாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயை வேதபாரகரும் பரிசேயரும் அவரிடத்தில் கொண்டுவந்து, அவளை நடுவே நிறுத்தி: 4.போதகரே, இந்த ஸ்திரீ விபசாரத்தில் கையும் மெய்யுமாய்ப் பிடிக்கப்பட்டாள். 5.இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டுமென்று மோசே நியாயப்பிரமாணத்தில் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறாரே, நீர் என்ன சொல்லுகிறீர் என்றார்கள். 6.அவர்மேல் குற்றஞ்சுமத்துவதற்கான காரணம் உண்டாகும்பொருட்டு அவரைச் சோதிக்கும்படி இப்படிச் சொன்னார்கள். இயேசுவோ குனிந்து, விரலினால் தரையிலே எழுதினார். 7.அவர்கள் ஓயாமல் அவரைக் கேட்டுக்கொண்டிருக்கையில், அவர் நிமிர்ந்து பார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன் என்று சொல்லி, 8.அவர் மறுபடியும் குனிந்து, தரையிலே எழுதினார். 9.அவர்கள் அதைக் கேட்டு, தங்கள் மனச்சாட்சியினால் கடிந்துகொள்ளப்பட்டு, பெரியோர்முதல் சிறியோர்வரைக்கும் ஒவ்வொருவராய்ப் போய்விட்டார்கள். இயேசு தனித்திருந்தார், அந்த ஸ்திரீ நடுவே நின்றாள். 10.இயேசு நிமிர்ந்து அந்த ஸ்திரீயைத் தவிர வேறொருவரையுங் காணாமல்: ஸ்திரீயே, உன்மேல் குற்றஞ்சாட்டினவர்கள் எங்கே? ஒருவனாகிலும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவில்லையா என்றார். 11.அதற்கு அவள்: இல்லை, ஆண்டவரே, என்றாள். இயேசு அவளை நோக்கி: நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே என்றார் - யோவான் 8:1-11
இது எப்படி சாத்தியமாகும், நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பிதா, வார்த்தை, மற்றும் பரிசுத்த ஆவி என்கிற திருத்துவம் உள்ளவர் என்பதை நாம் அறிந்துக் கொள்ளவும், நாம் அவரை அண்டிக் கொள்ளும் பொழுது நம்மை சூழ்ந்திருப்பவராய் இருக்கிறார் என்பதை விளக்கவுமே அப்போஸ்தலனாகிய யோவான் இவ்வாறு எழுதியுள்ளார்.
அடுத்த பாகம்: நடுவே நில்