மூன்று தேவதூதர்களின் விளக்கம்
இயேசு கிறிஸ்து திரியேக தேவனாக, அதாவது பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியானவரின் தற்சுரூபமாய் இருக்கிறார்
இயேசு கிறிஸ்து திரியேக தேவனாக, அதாவது பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியானவரின் தற்சுரூபமாய் இருக்கிறார்
முந்தைய பாகம்: மூன்று வகை மரங்களின் விளக்கம்
தேவக் கட்டளையின் படி, ஆரானிலிருந்து கானான் தேசத்தை நோக்கி சென்று கொண்டிருந்த யாக்கோபை, பெத்தேலுக்கு அருகே வந்த சமயத்தில் தேவதூதர்கள் சந்தித்தார்கள், அவர்களை கண்ட யாக்கோபு இது தேவனுடைய சேனை என்று சொல்ல காரணம் என்ன? தேவனுடைய சேனையாக வந்தவர்கள் எத்தனை பேராய் இருந்தார்கள்? - 1.யாக்கோபு பிரயாணம்பண்ணுகையில், தேவதூதர்கள் அவனைச் சந்தித்தார்கள். 2.யாக்கோபு அவர்களைக் கண்டபோது: இது தேவனுடைய சேனை என்று சொல்லி, அந்த ஸ்தலத்திற்கு மக்னாயீம் என்று பேரிட்டான். 3.பின்பு, யாக்கோபு ஏதோம் சீமையாகிய சேயீர் தேசத்திலிருக்கிற தன் சகோதரனாகிய ஏசாவினிடத்துக்குப் போகும்படி ஆட்களை அழைப்பித்து: 4.நீங்கள் என் ஆண்டவனாகிய ஏசாவினிடத்தில் போய், நான் இதுவரைக்கும் லாபானிடத்தில் தங்கியிருந்தேன் என்றும், 5.எனக்கு எருதுகளும், கழுதைகளும், ஆடுகளும், வேலைக்காரரும், வேலைக்காரிகளும் உண்டென்றும், உம்முடைய கண்களில் எனக்குத் தயவுகிடைக்கத்தக்கதாக ஆண்டவனாகிய உமக்கு இதை அறிவிக்கும்படி ஆட்களை அனுப்பினேன் என்றும் உம்முடைய தாசனாகிய யாக்கோபு சொல்லச்சொன்னான் என்று சொல்லும்படி கட்டளைகொடுத்துத் தனக்கு முன்னாக அவர்களை அனுப்பினான். 6.அந்த ஆட்கள் யாக்கோபினிடத்துக்குத் திரும்பிவந்து: நாங்கள் உம்முடைய சகோதரனாகிய ஏசாவினிடத்துக்குப் போய்வந்தோம்; அவரும் நானூறுபேரோடே உம்மை எதிர்கொள்ள வருகிறார் என்றார்கள் - ஆதியாகமம் 32:1-6
ஏறக்குறைய 20 வருடங்களுக்கு முன்பு அவ்வழியே ஆரானுக்கு செல்கையில் தான், அவன் தேவனை தரிசித்து, மெய்யாகவே கர்த்தர் இந்த ஸ்தலத்தில் இருக்கிறார் என்று சொல்லி, நீர் என்னை சமாதானத்தோடே திரும்பிவரச் செய்தால் உமக்குத் தசமபாகம் செலுத்துவேன் என்று பொருத்தனைபண்ணியிருந்தான், அதன் பின்பு, ஏறக்குறைய 20 வருடங்கள் ஆரானிலே தங்கி வேலை செய்து விட்டு, தனது 97வது வயதில் திரும்பி வந்த யாக்கோபு, பெத்தேலுக்கு அருகே வந்த சமயத்தில் தனது சகோதரனாகிய ஏசாவை சந்திக்க ஆள் அனுப்பி, தனது மந்தையில் ஒரு பெரும் பாகத்தை ஏசாவுக்கு வெகுமானமாக பிரித்து வைத்ததின் காரணம் என்ன? - 7.அப்பொழுது யாக்கோபு மிகவும் பயந்து, வியாகுலப்பட்டு, தன்னிடத்திலிருந்த ஜனங்களையும் ஆடுமாடுகளையும் ஒட்டகங்களையும் இரண்டு பகுதியாகப் பிரித்து: 8.ஏசா ஒரு பகுதியின்மேல் விழுந்து அதை முறிய அடித்தாலும், மற்றப் பகுதி தப்பித்துக்கொள்ள இடம் உண்டு என்றான். 9.பின்பு யாக்கோபு: என் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும், என் தகப்பனாகிய ஈசாக்கின் தேவனுமாய் இருக்கிறவரே: உன் தேசத்துக்கும் உன் இனத்தாரிடத்துக்கும் திரும்பிப்போ, உனக்கு நன்மை செய்வேன் என்று என்னுடனே சொல்லியிருக்கிற கர்த்தாவே, 10.அடியேனுக்கு தேவரீர் காண்பித்த எல்லா தயவுக்கும் எல்லா சத்தியத்துக்கும் நான் எவ்வளவேனும் பாத்திரன் அல்ல, நான் கோலும் கையுமாய் இந்த யோர்தானைக் கடந்துபோனேன்; இப்பொழுது இவ்விரண்டு பரிவாரங்களையும் உடையவனானேன். 11.என் சகோதரனாகிய ஏசாவின் கைக்கு என்னைத் தப்புவியும், அவன் வந்து என்னையும் பிள்ளைகளையும் தாய்மார்களையும் முறிய அடிப்பான் என்று அவனுக்கு நான் பயந்திருக்கிறேன். 12.தேவரீரோ: நான் உனக்கு மெய்யாகவே நன்மைசெய்து, உன் சந்ததியை எண்ணிமுடியாத கடற்கரை மணலைப்போல மிகவும் பெருகப்பண்ணுவேன் என்று சொன்னீரே என்றான். 13.அன்று ராத்திரி அவன் அங்கே தங்கி, தன் கைக்கு உதவினவைகளிலே தன் சகோதரனாகிய ஏசாவுக்கு வெகுமானமாக, 14.இருநூறு வெள்ளாடுகளையும், இருபது வெள்ளாட்டுக் கடாக்களையும், இருநூறு செம்மறியாடுகளையும், இருபது ஆட்டுக்கடாக்களையும், 15.பால் கொடுக்கிற முப்பது ஒட்டகங்களையும், அவைகளின் குட்டிகளையும், நாற்பது கடாரிகளையும், பத்துக் காளைகளையும், இருபது கோளிகைக் கழுதைகளையும், பத்துக் கழுதைக்குட்டிகளையும் பிரித்தெடுத்து - ஆதியாகமம் 32:7-15
யாக்கோபு தன் சகோதரனாகிய ஏசாவுக்கு கொடுத்தது வெறும் அன்பளிப்புதான் என்றால், அதில் தியானிப்பதற்கு ஒன்றும் இல்லை, அது வேதாகமத்தில் இடம் பெற வேண்டிய அவசியமும் இல்லை, ஆனால் யாக்கோபு இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்த ஏரோது ராஜாக்களின் தகப்பனான ஏசாவுக்கு கொடுத்தது தேவனிடம் பொருத்தனை பண்ணிக்கொண்ட தசமபாகம் என்றால், அது கிறிஸ்துவை குறித்த தீர்க்கதரிசனமாகவும், தியானிக்க வேண்டிய காரியமாகவும் இருக்கிறது.
முதலாவது யாக்கோபு தன் மந்தையிலிருந்து 9 வகையான ஆடு மாடுகளை பிரித்தெடுத்தான் என்று பார்க்கிறோம், அவைகள் நம் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டாகும் 9 வகையான ஆவியின் கனிகளையே குறிக்கிறது, அதின் சொந்தக்காரர் நம் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவே - 22.ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், 23.சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை. 24.கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள். 25.நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும் கடவோம். 26.வீண் புகழ்ச்சியை விரும்பாமலும், ஒருவரையொருவர் கோபமூட்டாமலும், ஒருவர்மேல் ஒருவர் பொறாமைகொள்ளாமலும் இருக்கக்கடவோம் - கலாத்தியர் 5:22-26
மேலும், வேதாகமத்தில் தசமபாகம் என்பதும், முதற்கனி என்பதும், தலைச்சன் என்பதும், நம் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவையே குறிக்கிறது.
அதே சமயத்தில், யாக்கோபு கொடுத்த தசமபாகத்திலிருந்து யாக்கோபின் ஆஸ்தியையும் கணக்கிடலாம், அதன் படி அவனிடம் 5500 ஆடு மாடுகள் இருந்ததை அறிந்துக் கொள்ளலாம், ஒருவன் 6 வருடத்தில் இவ்வளவு சம்பாதிக்க கூடுமானால், அது நிச்சியமாகவே தேவனால் உண்டான ஆசிர்வாதமே.
மேலும், யாக்கோபை சந்தித்த தேவதூதர்கள் மூன்று பேராய் இருந்தார்கள் என்பதை அறிந்துக் கொள்ளலாம், மூலபாஷையில் அவர்களுக்கு "அல்பா ஒமெகா" என்கிற நாமம் கொடுக்கப்பட்டிருக்கிறது, ஆனால் அவர்களை வேலைக்காரன் என்று மொழிபெயர்த்து இருப்பது வேதனையான காரியம் தான், அவர்களே யாக்கோபு தன் சகோதரனாகிய ஏசாவை சந்திக்கவும், வெகுமதியை ஒப்படைக்கவும் உதவி செய்தார்கள், அவர்களை மந்தைக்கு "முன்னே போகிற அல்பா ஒமெகா" என்றும், "இரண்டாம் அல்பா ஒமெகா" மற்றும் "மூன்றாம் அல்பா ஒமெகா" என்றும் மூலபாஷையில் குறிக்கப்பட்டுள்ளது - 16.வேலைக்காரர் கையில் ஒவ்வொரு மந்தையை தனித்தனியாக ஒப்புவித்து, நீங்கள் மந்தை மந்தைக்கு முன்னும் பின்னுமாக இடம் விட்டு எனக்கு முன்னாக ஓட்டிக்கொண்டுபோங்கள் என்று தன் வேலைக்காரருக்குச் சொல்லி, 17.முன்னே போகிறவனை அல்பாவும் ஒமெகாவுமானவரை நோக்கி: என் சகோதரனாகிய ஏசா உனக்கு எதிர்ப்பட்டு: நீ யாருடையவன்? எங்கே போகிறாய்? உனக்குமுன் போகிற மந்தை யாருடையது? என்று உன்னைக் கேட்டால், 18.நீ: இது உமது அடியானாகிய யாக்கோபுடையது; இது என் ஆண்டவனாகிய ஏசாவுக்கு அனுப்பப்படுகிற வெகுமதி; இதோ, அவனும் எங்கள் பின்னே வருகிறான் என்று சொல் என்றான். 19.இரண்டாம் மூன்றாம் வேலைக்காரனையும் அல்பாவும் ஒமெகாவுமானவரையும், மந்தைகளின் பின்னாலே போகிற அனைவரையும் நோக்கி: நீங்களும் ஏசாவைக் காணும்போது, இந்தப்பிரகாரமாக அவனோடே சொல்லி, 20.இதோ, உமது அடியானாகிய யாக்கோபு எங்கள் பின்னாலே வருகிறான் என்றும் சொல்லுங்கள் என்று கட்டளையிட்டான்; முன்னே வெகுமதியை அனுப்பி, அவனைச் சாந்தப்படுத்திக்கொண்டு, பின்பு அவன் முகத்தைப் பார்ப்பேன், அப்பொழுது ஒருவேளை என்பேரில் தயவாயிருப்பான் என்றான் - ஆதியாகமம் 32:16-20
இப்படி மூன்று பேராய் யாக்கோபை சந்தித்தவர்கள், நம் பரலோக தேவனாகிய பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்கிற திரியேக தேவனை வெளிப்படுத்துகிறவர்களாய் இருந்தார்கள், இதை அப்போஸ்தலனாகிய யோவான் சொல்லும் போது அதரிசனமான தேவன் மூன்று நபர்களாக இருப்பதாகவும், அதே சமயத்தில் அவர்கள் மூன்று பேரும் பிரிக்க முடியாத ஒரே தேவனாக[பிதாவாக] இருக்கிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார் - பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள் - I யோவான் 5:7
ஆனால் இரட்சிப்பு என்று வரும் பொழுது, அது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாகவே உண்டாகும் என்பதை வெளிப்படுத்தவும், அவர் திரியேக தேவனின் தத்ரூபமானவர் என்பதை உணர்த்தவும், தேவன் ஒரு புருஷனாக யாக்கோபினிடம் வெளிப்பட்டார் - 21.அந்தப்படியே வெகுமதி அவனுக்குமுன் போயிற்று; அவனோ அன்று ராத்திரி பாளயத்திலே தங்கி, 22.இராத்திரியில் எழுந்திருந்து, தன் இரண்டு மனைவிகளையும், தன் இரண்டு பணிவிடைக்காரிகளையும், தன்னுடைய பதினொரு குமாரரையும் கூட்டிக்கொண்டு, யாப்போக்கு என்கிற ஆற்றின் துறையைக் கடந்தான். 23.அவர்களையும் சேர்த்து, ஆற்றைக் கடக்கப்பண்ணி, தனக்கு உண்டான யாவையும் அக்கரைப்படுத்தினான். 24.யாக்கோபு பிந்தித் தனித்திருந்தான்; அப்பொழுது ஒரு புருஷன் பொழுது விடியுமளவும் அவனுடனே போராடி, 25.அவனை மேற்கொள்ளாததைக் கண்டு, அவனுடைய தொடைச்சந்தைத் தொட்டார்; அதினால் அவருடனே போராடுகையில் யாக்கோபின் தொடைச்சந்து சுளுக்கிற்று. 26.அவர்: நான் போகட்டும், பொழுது விடிகிறது என்றார். அதற்கு அவன்: நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன் என்றான். 27.அவர்: உன் பேர் என்ன என்று கேட்டார்; யாக்கோபு என்றான். 28.அப்பொழுது அவர்: உன் பேர் இனி யாக்கோபு என்னப்படாமல் இஸ்ரவேல் என்னப்படும்; தேவனோடும் மனிதரோடும் போராடி மேற்கொண்டாயே என்றார். 29.அப்பொழுது யாக்கோபு: உம்முடைய நாமத்தை எனக்கு அறிவிக்கவேண்டும் என்று கேட்டான்; அதற்கு அவர்: நீ என் நாமத்தைக் கேட்பானேன் என்று சொல்லி, அங்கே அவனை ஆசீர்வதித்தார். 30.அப்பொழுது யாக்கோபு: நான் தேவனை முகமுகமாய்க் கண்டேன், உயிர் தப்பிப் பிழைத்தேன் என்று சொல்லி, அந்த ஸ்தலத்துக்கு பெனியேல் என்று பேரிட்டான் - ஆதியாகமம் 32:24-30
இதில் "போராடி" என்ற வார்த்தை யாக்கோபை ஒரு மல்யுத்த வீரன் போல தான் காட்டுகிறது, ஆனால் உண்மையில் நடந்தது என்னவென்றால், அந்த இரவு முழுவது யாக்கோபு தன்னிடம் தரிசனமான அந்த புருஷனிடம் அவர் இரக்கத்திற்காக அழுது கெஞ்சினானாம், அவருடைய நாமம் யேகோவா என்பதை தேவஆவியானவர் ஓசியா தீர்க்கதரிசியின் மூலமாய் வெளிப்படுத்தி இருந்தார், அது நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே - 3.அவன் தாயின் கர்ப்பத்திலே தன் சகோதரனுடைய குதிகாலைப் பிடித்தான், தன் பெலத்தினால் தேவனோடே போராடினான். 4.அவன் தூதனானவரோடே போராடி மேற்கொண்டான், அழுது அவரை நோக்கிக் கெஞ்சினான்; பெத்தேலிலே அவர் அவனைக் கண்டு சந்தித்து, அவ்விடத்திலும் நம்மோடே பேசினார். 5.கர்த்தராகிய அவர் சேனைகளின் தேவன்; யேகோவா என்பது அவருடைய நாமசங்கீர்த்தனம். 6.இப்போதும் நீ உன் தேவனிடத்தில் திரும்பு; தயவையும் நியாயத்தையும் கைக்கொண்டு, இடைவிடாமல் உன் தேவனை நம்பிக்கொண்டிரு - ஓசியா 12:3-6
இப்படி தேவக்குமாரனாகிய இயேசு கிறிஸ்து பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்கிற மூன்று பேரிடத்திலிருந்து உண்டாவனராகவும், அவர்களின் தற்சுரூபமாகவும் இருக்கிறார். இதை அப்போஸ்தலனாகிய யோவான் விவரிக்கும் பொழுது பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியாகிய திரியேக தேவன் ஜலம், இரத்தம், ஆவியாக கிறிஸ்து இயேசுவுக்குள் இருந்தார்கள் என்று குறிப்பிட்டுள்ளார் - பூலோகத்திலே சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது - I யோவான் 5:8
அடுத்த பாகம்: ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபின் விளக்கம்