மூன்று வகை ஆடுகளின் விளக்கம்
இயேசு கிறிஸ்து திரியேக தேவனாக, அதாவது பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியானவரின் தற்சுரூபமாய் இருக்கிறார்
இயேசு கிறிஸ்து திரியேக தேவனாக, அதாவது பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியானவரின் தற்சுரூபமாய் இருக்கிறார்
முந்தைய பாகம்: யாக்கோபின் விளக்கம்
இப்படி வெறும் கோலும் கையுமாய் ஆரானுக்கு வந்த யாக்கோபு, தன் தாய்மாமன் வீட்டில் 14 வருடங்கள் தன் இரண்டு மனைவிகளுக்காக வேலை செய்துவிட்டு, பெயெர்செபாவுக்கு திரும்பி செல்ல எத்தனிக்கும் பொழுது தான், யாக்கோபின் தாய்மாமனாகிய லாபான் தன் மந்தையை தொடர்ந்து கவனித்துக் கொள்ளச் சொன்னார் - 25.ராகேல் யோசேப்பைப் பெற்றபின், யாக்கோபு லாபானை நோக்கி: நான் என் ஸ்தானத்திற்கும் என் தேசத்திற்கும் போக என்னை அனுப்பிவிடும். 26.நான் உமக்கு ஊழியஞ்செய்து சம்பாதித்த என் மனைவிகளையும் என் பிள்ளைகளையும் எனக்குத் தாரும்; நான் போவேன், நான் உம்மிடத்தில் சேவித்த சேவகத்தை நீர் அறிந்திருக்கிறீர் என்றான். 27.அப்பொழுது லாபான்: உன் கண்களில் எனக்குத் தயவு கிடைத்ததேயானால் நீ இரு; உன் நிமித்தம் கர்த்தர் என்னை ஆசீர்வதித்தார் என்று குறிப்பினால் அறிந்தேன். 28.உன் சம்பளம் இன்னதென்று எனக்குச் சொல், நான் அதைத் தருவேன் என்றான் - ஆதியாகமம் 30:25-28
லாபானின் மந்தையை தொடர்ந்து பார்த்துக்கொள்ள யாக்கோபு ஒரு வித்தியாசமான சம்பளத்தை கேட்டார், அது என்னவென்றால் லாபானின் மந்தையில் சாதாரன ஆடுகளுடன், மூன்று விதமான விசேஷித்த ஆடுகளும் இருந்தன[Speckled and spotted sheep, black lamb, and spotted and speckled goat], தமிழ் மொழிபெயர்ப்பில் அதில் இரண்டை குறித்து தான் எழுதப்பட்டுள்ளது, ஆனால் எபிரேய மொழியிலும் ஆங்கில மொழிபெயர்ப்பிலும் மூன்று விதமான ஆடுகள் சொல்லப்பட்டிருப்பதை பார்க்கலாம். அப்பொழுது யாக்கோபு லாபானிடம், மந்தையிலுள்ள இந்த மூன்று விதமான எல்லா விசேஷித்த ஆடுகளையும் நீங்கள் உங்கள் வீட்டுக்கு கொண்டு போய் விடுங்கள், நான் மீதியுள்ள சாதாரன ஆடுகளை நான் மேய்கிறேன், இந்த சாதாரன ஆடுகள் அந்த மூன்று விதமான விசேஷித்த குட்டிகளை போட்டால் அது என்னுடையது, சாதாரன குட்டிகளை போட்டால் அது உம்முடையது என்றான் - 29.அதற்கு அவன்: நான் உம்மைச் சேவித்த விதமும், உம்முடைய மந்தை என்னிடத்தில் இருந்த விதமும் அறிந்திருக்கிறீர். 30.நான் வருமுன்னே உமக்கு இருந்தது கொஞ்சம்; நான் வந்தபின் கர்த்தர் உம்மை ஆசீர்வதித்ததினால் அது மிகவும் பெருகியிருக்கிறது; இனி நான் என் குடும்பத்துக்குச் சம்பாத்தியம்பண்ணுவது எப்பொழுது என்றான். 31.அதற்கு அவன்: நான் உனக்கு என்ன தரவேண்டும் என்றான்; யாக்கோபு: நீர் எனக்கு ஒன்றும் தரவேண்டியதில்லை; நான் சொல்லுகிறபடி நீர் எனக்குச் செய்தால், உம்முடைய மந்தையைத் திரும்ப மேய்த்துக் காப்பேன். 32.நான் இன்றைக்குப்போய், உம்முடைய மந்தைகளையெல்லாம் பார்வையிட்டு, அவைகளில் புள்ளியும் வரியும் கறுப்புமுள்ள செம்மறியாடுகளையும், வரியும் புள்ளியுமுள்ள வெள்ளாடுகளையும் பிரித்துவிடுகிறேன்; அப்படிப்பட்டவை இனி எனக்குச் சம்பளமாயிருக்கட்டும். 33.அப்படியே இனிமேல் என் சம்பளமாகிய இவற்றை நீர் பார்வையிடும்போது, என் நீதி விளங்கும்; புள்ளியும் வரியுமில்லாத வெள்ளாடுகளும், கறுப்பான செம்மறியாடுகளும் என் வசத்தில் இருந்தால், அவையெல்லாம் என்னால் திருடிக்கொள்ளப்பட்டவைகளாய் எண்ணப்படட்டும் என்றான் - ஆதியாகமம் 30:29-33
யாக்கோபு கேட்ட சம்பளம் இந்த உலகத்தில் யாருமே கேட்காத ஓன்று தான், அது லாபானுக்கும் மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுத்திருக்கும், அதனால் யாக்கோபு கேட்டதை சம்பளமாக தர உடனே ஒப்புக்கொண்டான், இதை எளிதாக புரிந்துக் கொள்ள இந்த உதாரணத்தை எடுத்துக் கொள்ளலாம், லாபானின் மந்தையில் பசு மாடுகளும் எருமை மாடுகளும் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள், அப்பொழுது யாக்கோபு லாபானிடம் நீர் உம்முடைய மந்தையில் இருக்கும் பசு மாடுகளை எல்லாம் கொண்டு போய் விடும், நான் மீதமுள்ள எருமை மாடுகளை பார்த்துக் கொள்ளுகிறேன், இப்பொழுது என்னிடம் இருக்கும் எருமை மாடுகள் பசு கன்றை ஈன்றால் அது என்னுடையது எருமை கன்றுகளை ஈன்றால் அது உம்முடையது என்றான், இதை லாபானும் உடனே ஏற்றுக் கொண்டான் ஏன் என்றால் எருமை மாடுகள் பசு கன்றை ஈன வாய்ப்பேயில்லை.
அதனால் தான் லாபான் அந்த மூன்று விதமான ஆடுகளையும் பிரித்து தன்னிடம் வைத்துக் கொண்டு, மற்ற ஆடுகளை யாக்கோபை பார்த்துக்கொள்ள சொன்னார் - 34.அதற்கு லாபான்: நீ சொன்னபடியே ஆகட்டும் என்று சொல்லி, 35.அந்நாளிலே கலப்பு நிறமும் வரியுமுள்ள வெள்ளாட்டுக் கடாக்களையும், புள்ளியும் வரியுமுள்ள வெள்ளாடுகள் யாவையும், சற்று வெண்மையும் கருமையுமுள்ள செம்மறியாடுகள் யாவையும் பிரித்து, தன் குமாரரிடத்தில் ஒப்புவித்து, 36.தனக்கும் யாக்கோபுக்கும் இடையிலே மூன்றுநாள் பிரயாணதூரத்தில் இருக்கும்படி வைத்தான். லாபானுடைய மற்ற ஆடுகளை யாக்கோபு மேய்த்தான் - ஆதியாகமம் 30:34-36
இப்படி யாக்கோபு விரும்பின மூன்று ஆடுகள், நாம் காணக்கூடாத அதரிசனமான பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்ற திரியேக தேவனையே குறிக்கிறது, இதை அப்போஸ்தலனாகிய யோவான் சொல்லும் போது அதரிசனமான தேவன் மூன்று நபர்களாக இருப்பதாகவும், அதே சமயத்தில் அவர்கள் மூன்று பேரும் பிரிக்க முடியாத ஒரே தேவனாக[பிதாவாக] இருக்கிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார் - பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள் - I யோவான் 5:7
அப்பொழுது யாக்கோபு மூன்று விதமான நற்குல மரமான புன்னை, வாதுமை, அர்மோன் மரங்களை தெரிந்துக் கொண்டு, அவைகளின் கோப்புகளை வெட்டி, அதின் பட்டையை உரித்து ஆடுகள் முன்பாக போட்டார், அப்பொழுது, யாக்கோபினிடமிருந்த இருந்த சாதாரண ஆடுகள் அவர் சம்பளமாக கேட்ட மூன்று விதமான குட்டிகளை போட்டது - 37.பின்பு யாக்கோபு பச்சையாயிருக்கிற புன்னை, வாதுமை, அர்மோன் என்னும் மரங்களின் கொப்புகளை வெட்டி, இடையிடையே வெண்மை தோன்றும்படி, பட்டையை உரித்து, 38.தான் உரித்த கொப்புகளை ஆடுகள் தண்ணீர் குடிக்க வரும் கால்வாய்களிலும் தொட்டிகளிலும் ஆடுகளுக்கு எதிராகப் போட்டுவைப்பான்; ஆடுகள் தண்ணீர் குடிக்க வரும்போது பொலிவதுண்டு. 39.ஆடுகள் அந்தக் கொப்புகளுக்கு முன்பாகப் பொலிந்தபடியால், அவைகள் கலப்பு நிறமுள்ளதும் புள்ளியுள்ளதும் வரியுள்ளதுமான குட்டிகளைப் போட்டது - ஆதியாகமம் 30:37-39
இப்படியாக எந்த மாம்ச சமபந்தமும் இல்லாமல், யாக்கோபு தான் விரும்பின மூன்று வகையான ஆடுகளை பெற்றுக் கொண்டான், இது நம் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவையே குறிக்கிறது, எப்படியெனில் தேவக்குமாரனாகிய இயேசு கிறிஸ்து பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்கிற மூன்று பேரிடத்திலிருந்து உண்டாவனராகவும், அவர்களின் தற்சுரூபமாகவும் இருக்கிறார். இதை அப்போஸ்தலனாகிய யோவான் விவரிக்கும் பொழுது பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியாகிய திரியேக தேவன் ஜலம், இரத்தம், ஆவியாக கிறிஸ்து இயேசுவுக்குள் இருந்தார்கள் என்று குறிப்பிட்டுள்ளார் - பூலோகத்திலே சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது - I யோவான் 5:8
இப்படியாக ஆறே வருடத்தில் யாக்கோபு திரளான ஆடுகளும், வேலைக்காரிகளும், வேலைக்காரரும், ஒட்டகங்களும், கழுதைகளும் உடையவனாகி மிகவும் விருத்தியடைந்தான் - 40.அந்த ஆட்டுக்குட்டிகளை யாக்கோபு பிரித்துக்கொண்டு, ஆடுகளை லாபானுடைய மந்தையிலிருக்கும் கலப்புநிறமானவைகளுக்கும் கறுப்பானவைகளெல்லாவற்றிற்கும் எதிராக நிறுத்தி, தன் ஆடுகளை லாபானுடைய மந்தையோடே சேர்க்காமல், தனிப்புறமாக வைத்துக்கொள்வான். 41.பலத்த ஆடுகள் பொலியும்போது, அந்தக் கொப்புகளுக்கு எதிரே பொலியும்படி யாக்கோபு அவைகளை அந்த ஆடுகளின் கண்களுக்கு முன்பாகக் கால்வாய்களிலே போட்டுவைப்பான். 42.பலவீனமான ஆடுகள் பொலியும்போது, அவைகளைப் போடாமலிருப்பான்; இதனால் பலவீனமானவைகள் லாபானையும், பலமுள்ளவைகள் யாக்கோபையும் சேர்ந்தன. 43.இவ்விதமாய் அந்தப் புருஷன் மிகவும் விருத்தியடைந்து, திரளான ஆடுகளும், வேலைக்காரிகளும், வேலைக்காரரும், ஒட்டகங்களும், கழுதைகளும் உடையவனானான் - ஆதியாகமம் 30:40-43
இப்படி யாக்கோபு அடைந்த ஆசீர்வாதம், லாபானின் குமாரர் பொறாமையடையும் அளவாக மாறி விட்டது, அப்பொழுது தான் தேவன் யாக்கோபினடம் தான் முன்குறித்த இடமாகிய கானான் தேசத்திற்கு, அதாவது இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு வர முன்குறித்த இடத்திற்கு போகச் சொன்னார் - 1.பின்பு, லாபானுடைய குமாரர்: எங்கள் தகப்பனுக்கு உண்டானவைகள் யாவையும் யாக்கோபு எடுத்துக்கொண்டான் என்றும், எங்கள் தகப்பனுடைய பொருளினாலே இந்தச் செல்வத்தையெல்லாம் அடைந்தான் என்றும் சொன்ன வார்த்தைகளை யாக்கோபு கேட்டான். 2.லாபானின் முகத்தை யாக்கோபு பார்த்தபோது, அது நேற்று முந்தைநாள் இருந்ததுபோல் இராமல் வேறுபட்டிருக்கக் கண்டான். 3.கர்த்தர் யாக்கோபை நோக்கி: உன் பிதாக்களுடைய தேசத்திற்கும் உன் இனத்தாரிடத்திற்கும் நீ திரும்பிப்போ; நான் உன்னோடேகூட இருப்பேன் என்றார் - ஆதியாகமம் 31:1-3
இதை குறித்து யாக்கோபு தன் மனைவியாகிய ராகேலிடமும் லேயாளிடமும் சாட்சி சொல்லும் பொழுது, லாபான் செய்த அநீதியான காரியத்தையும் சொன்னார், லாபான் பத்து முறை யாக்கோபின் சம்பளத்தை மாற்றினாராம், எப்படி என்றால் இந்த முறை புள்ளியுள்ளதும் வரியுள்ளதுமான குட்டிகள் மாத்திரம் உன் சம்பளம் என்று சொல்லும் பொழுது, ஆடுகள் புள்ளியுள்ளதும் வரியுள்ளதுமான குட்டிகளை போட்டது, இந்த முறை புள்ளியுள்ளது மாத்திரமே உன் சம்பளம் என்று சொல்லும் பொழுது ஆடுகள் புள்ளியுள்ள குட்டிகளை மாத்திரமே போட்டதாம் - 4.அப்பொழுது யாக்கோபு, ராகேலையும் லேயாளையும் வெளியிலே தன் மந்தையிடத்தில் அழைப்பித்து, 5.அவர்களை நோக்கி: உங்கள் தகப்பனுடைய முகம் நேற்று முந்தைநாள் இருந்ததுபோல இருக்கவில்லை என்று எனக்குத் தோன்றுகிறது; ஆனாலும் என் தகப்பனுடைய தேவன் என்னோடேகூட இருக்கிறார். 6.என்னால் இயன்றமட்டும் நான் உங்கள் தகப்பனுக்கு ஊழியஞ்செய்தேன் என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். 7.உங்கள் தகப்பனோ, என்னை வஞ்சித்து, என் சம்பளத்தைப் பத்துமுறை மாற்றினான்; ஆனாலும் அவன் எனக்குத் தீங்குசெய்ய தேவன் அவனுக்கு இடங்கொடுக்கவில்லை. 8.புள்ளியுள்ளவைகள் உன் சம்பளமாயிருக்கும் என்று அவன் சொன்னபோது, ஆடுகளெல்லாம் புள்ளியுள்ள குட்டிகளைப் போட்டது; கலப்புநிறமானவைகள் உன் சம்பளமாயிருக்கும் என்று அவன் சொன்னபோது, ஆடுகளெல்லாம் கலப்புநிறக் குட்டிகளைப் போட்டது. 9.இவ்விதமாய் தேவன் உங்கள் தகப்பனுடைய ஆடுகளை எடுத்து, எனக்குத் தந்தார் - ஆதியாகமம் 31:4-9
மேலும் யாக்கோபு லாபானை விட்டுச் செல்லும் பொழுது, தான் கண்ட தரிசனத்தையும் அதின் உண்மையான அர்த்தத்தை கர்த்தர் விளக்கிச் சொன்னதையும் தன் மனைவியாகிய ராகேலிடமும் லேயாளிடமும் சொன்னார், அந்த தரிசனமானது ஆடுகள் பொலியும் காலத்திலே கலப்புநிறமும் புள்ளியும் வரியும் உள்ள மூன்று விதமான கடாக்கள் ஆட்டின் மேல் அசைவாடினதாம் [ஆடுகளோடே பொலியும் கடாக்கள் என்று மொழிப் பெயர்க்கப் பட்டுள்ளது, ஆடுகள் மேல் அசைவாடின கடாக்கள் என்பதே சரியான மொழிப் பெயர்ப்பு ஆகும்], இது கிறிஸ்துவின் பிறப்பை குறித்த ரகசியமாகவே இருந்தது, அதாவது ஒரு உற்பவகாலத்திட்டத்தில் திரியேக தேவனின் குமாரனாகிய இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு வருவார் என்கிற இரகசியத்தையும் விளக்குவதாகவே இருந்தது - 10.ஆடுகள் பொலியும் காலத்திலே நான் கண்ட சொப்பனத்தில் என் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, ஆடுகளோடே பொலியும் கடாக்கள் கலப்புநிறமும் புள்ளியும் வரியும் உள்ளவைகளாயிருக்கக் கண்டேன். 11.அன்றியும் தேவதூதன் ஒருவர் சொப்பனத்தில்: யாக்கோபே என்றார்; இதோ, இருக்கிறேன் என்றேன். 12.அப்பொழுது அவர்: உன் கண்களை ஏறெடுத்துப்பார்; ஆடுகளோடே பொலியும் (அசைவாடும்) கடாக்களெல்லாம் கலப்புநிறமும் புள்ளியும் வரியுமுள்ளவைகளாய் இருக்கிறது; லாபான் உனக்குச் செய்கிற யாவையும் கண்டேன். 13.நீ தூணுக்கு அபிஷேகஞ்செய்து, எனக்கு ஒரு பொருத்தனையைப் பண்ணின பெத்தேலிலே உனக்குத் தரிசனமான தேவன் நானே; இப்பொழுது நீ எழுந்து, இந்தத் தேசத்தைவிட்டுப் புறப்பட்டு, உன் இனத்தாரிருக்கிற தேசத்திற்குத் திரும்பிப்போ என்று சொன்னார் என்றான் - ஆதியாகமம் 31:10-13
அடுத்த பாகம்: மூன்று வகை மரங்களின் விளக்கம்