இயேசு கிறிஸ்துவின் தகப்பனாக கருதப்பட்ட யோசேப்பு, அதாவது மரியாளின் புருஷனாகிய யோசேப்பு, இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் போது அங்கு இல்லை என்பது அனைவரும் அறிந்த விஷயம், எப்படியெனில் மத்தேயு, மாற்கு, லூக்கா, மற்றும் யோவான் என நான்கு சுவிசேஷ புஸ்தகத்திலும் யோசேப்பை குறித்து ஒன்றுமே சொல்லப்படவில்லை, அது போலவே, மரியாளும் சிலுவையின் அருகே இல்லை என்பதை மத்தேயு, மாற்கு, மற்றும் லூக்கா புஸ்தகங்கள் பறை சாற்றுகின்றன, எப்படியெனில், முதலாம் சுவிசேஷ புஸ்தகத்தை எழுதிய மத்தேயு, கர்த்தரின் சிலுவை மரணத்தின் போது அநேக ஸ்திரீகள் பார்த்துக்கொண்டிருந்தார்கள் என்று சொல்லி அவர்களில் மூன்று பேரை குறிப்பிட்டுச் சொன்னவர், இயேசுவின் தாயாகிய மரியாளை குறித்து ஒன்றுமே சொல்லவில்லை, ஒருவேளை இயேசுவின் தாயார் அங்கிருந்திருந்தால் அவர்களின் பெயரை தானே முதல் பெயராக குறிப்பிட்டிருப்பார் - 54.நூற்றுக்கு அதிபதியும், அவனோடேகூட இயேசுவைக் காவல் காத்திருந்தவர்களும், பூமியதிர்ச்சியையும் சம்பவித்த காரியங்களையும் கண்டு, மிகவும் பயந்து: மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன் என்றார்கள். 55.மேலும், இயேசுவுக்கு ஊழியஞ்செய்யும்படி கலிலேயாவிலிருந்து அவரோடே வந்திருந்த அநேக ஸ்திரீகள் அங்கே தூரத்திலே நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். 56.அவர்களுக்குள்ளே மகதலேனா மரியாளும், யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளும், செபெதேயுவின் குமாரருடைய தாயும் இருந்தார்கள் - மத்தேயு 27:54-56
அது போலவே, கர்த்தரின் உயிர்தெழுதலின் சமயத்திலும், கர்த்தரை தரிசிக்க இரண்டு பேர் மகதலேனா மரியாளுக்கு உதவி செய்ததை பார்க்க முடிகிறது, மத்தேயு அவர்களை "மற்ற மரியாள்" மற்றும் "கர்த்தருடைய தூதன்" என்று குறிப்பிட்டுள்ளார் - 1.ஓய்வுநாள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் விடிந்துவருகையில், மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்க வந்தார்கள். 2.அப்பொழுது, பூமி மிகவும் அதிரும்படி, கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்திறங்கி வந்து, வாசலிலிருந்த கல்லைப் புரட்டித் தள்ளி, அதின்மேல் உட்கார்ந்தான். 3.அவனுடைய ரூபம் மின்னல் போலவும், அவனுடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போல வெண்மையாகவும் இருந்தது - மத்தேயு 28:1-3
தொடர்ந்து படிக்க மாற்கு சுவிஷேச புஸ்தகத்தில் இயேசுவின் தாய்
முந்தைய பாகத்தை படிக்க இங்கே ஒரு பையன் இருக்கிறான்