மூன்றாவது சுவிசேஷ புஸ்தகத்தை எழுதிய லூக்காவும், இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் போது, அங்கிருந்தவர்களை, கர்த்தருக்கு அறிமுகமானவர்கள் என்றும், மற்றும் கலிலேயாவிலிருந்து அவருக்குப் பின்சென்று வந்த ஸ்திரீகள் என்று இரண்டு சாராராக பிரித்து ழுதியுள்ளார், இதில் "இயேசுவின் தாயாகிய மரியாள்" கர்த்தருக்கு அறிமுகமானவர்களில் ஒருவராகவோ, அல்லது கலிலேயாவிலிருந்து அவருக்குப் பின்சென்று வந்த ஸ்திரீகளின் ஒருவராகவோ இருந்திருக்க வாய்ப்பே இல்லை - 46.இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனைவிட்டார். 47.நூற்றுக்கு அதிபதி சம்பவித்ததைக் கண்டு: மெய்யாகவே இந்த மனுஷன் நீதிபரனாயிருந்தான் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினான். 48.இந்தக் காட்சியைப் பார்க்கும்படி கூடிவந்திருந்த ஜனங்களெல்லாரும் சம்பவித்தவைகளைப் பார்த்தபொழுது, தங்கள் மார்பில் அடித்துக்கொண்டு திரும்பிப்போனார்கள். 49.அவருக்கு அறிமுகமானவர்களெல்லாரும், கலிலேயாவிலிருந்து அவருக்குப் பின்சென்று வந்த ஸ்திரீகளும் தூரத்திலே நின்று இவைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள் - லூக்கா 23:46-49
ஆனால், அதே லூக்கா, அப்போஸ்தலர் புஸ்தகத்தில், பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்திற்கு காத்திருந்தவர்களை பற்றி சொல்லும் பொழுது, "இயேசுவின் தாயாகிய மரியாள்" என்று சந்தேகத்திற்க்கு இடமில்லாத படி எழுதியுள்ளார், அப்படியென்றால் கர்த்தரின் சிலுவை மரணத்தின் சமயத்தில் "இயேசுவின் தாயாகிய மரியாள்" அங்கு இல்லை என்று தானே அர்த்தம் - 12.அப்பொழுது அவர்கள் எருசலேமுக்குச் சமீபமாய் ஒரு ஓய்வுநாள் பிரயாண தூரத்திலிருக்கிற ஒலிவமலை என்னப்பட்ட மலையிலிருந்து எருசலேமுக்குத் திரும்பிப்போனார்கள். 13.அவர்கள் அங்கே வந்தபோது மேல்வீட்டில் ஏறினார்கள்; அதில் பேதுருவும், யாக்கோபும், யோவானும், அந்திரேயாவும், பிலிப்பும், தோமாவும், பர்த்தொலொமேயும், மத்தேயும், அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபும், செலோத்தே என்னப்பட்ட சீமோனும், யாக்கோபின் சகோதரனாகிய யூதாவும் தங்கியிருந்தார்கள். 14.அங்கே இவர்களெல்லாரும், ஸ்திரீகளோடும் இயேசுவின் தாயாகிய மரியாளோடும், அவருடைய சகோதரரோடுங்கூட ஒருமனப்பட்டு, ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள் - அப்போஸ்தலர் 1:12-14
லூக்கா அவர்களை "பிரகாசமுள்ள வஸ்திரந்தரித்த இரண்டுபேர்" என்று குறிப்பிட்டுள்ளார் - 1.வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே தாங்கள் ஆயத்தம்பண்ணின கந்தவர்க்கங்களை அவர்கள் எடுத்துக்கொண்டு வேறு சில ஸ்திரீகளோடுங்கூடக் கல்லறையினிடத்தில் வந்தார்கள். 2.கல்லறையை அடைத்திருந்த கல் புரட்டித் தள்ளப்பட்டிருக்கிறதைக் கண்டு, 3.உள்ளே பிரவேசித்து, கர்த்தராகிய இயேசுவின் சரீரத்தைக் காணாமல், 4.அதைக்குறித்து மிகுந்த கலக்கமடைந்திருக்கையில், பிரகாசமுள்ள வஸ்திரந்தரித்த இரண்டுபேர் அவர்கள் அருகே, நின்றார்கள் - லூக்கா 24:1-4
தொடர்ந்து படிக்க இங்கே ஒரு பையன் இருக்கிறான்
முந்தைய பாகத்தை படிக்க மாற்கு சுவிஷேச புஸ்தகத்தில் இயேசுவின் தாய்