இயேசுவின் போதனைகள்

அப்போஸ்தலனாகிய பவுலை தேவன் ஊழியத்திற்கு அழைத்த பொழுது, கர்த்தரை அறிந்துக்கொள்ள அவர் யாரிடமும் செல்லவில்லை, கர்த்தரே பவுலுக்கு எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்தார், அது இயேசு கிறிஸ்து தன்னுடைய சீஷர்களுக்கு கற்றுக் கொடுத்ததற்கு ஒப்பாகவே இருந்தது - 16.தம்முடைய குமாரனை நான் புறஜாதிகளிடத்தில் சுவிசேஷமாய் அறிவிக்கும்பொருட்டாக, அவரை எனக்குள் வெளிப்படுத்தப் பிரியமாயிருந்தபோது, உடனே நான் மாம்சத்தோடும் இரத்தத்தோடும் யோசனைபண்ணாமலும்; 17.எனக்கு முன்னே அப்போஸ்தலரானவர்களிடத்திலே எருசலேமுக்குப் போகாமலும்; அரபிதேசத்திற்குப் புறப்பட்டுப்போய், மறுபடியும் தமஸ்கு ஊருக்குத் திரும்பிவந்தேன் - கலாத்தியர் 1:16-17

இயேசு கிறிஸ்து தன்னுடைய சீஷர்களுக்கு கொடுத்த ஊழிய உபதேசங்களையெல்லாம், அப்போஸ்தலனாகிய மத்தேயு, வேதாகம கல்லூரி பாடபுஸ்தகம் போல் ஒன்றாக தொகுத்து, அவைகளை மத்தேயு 10ஆம் அதிகாரத்தில் எழுதியுள்ளார்.

ஆனால், மார்க்கும் லூக்காவும், இயேசு கிறிஸ்து தான் தெரிந்துக் கொண்டவர்களுடன் வாழ்ந்து, ஒரு ஆசிரியர் நடைமுறை வகுப்பு பாடம் எடுப்பது போல, உண்மை சம்பவங்கள் மூலமாக, முரட்டாட்ட குணமுள்ளவர்களாய் இருந்தவர்களை எப்படியாக தன் பிள்ளைகளாக மாற்றினார் என்பதை எழுதியுள்ளனர், அவைகளை பின்வரும் தலைப்புகளில் பார்க்கலாம்.