சிலுவையண்டையில் இரண்டு பேராக
ஆபிரகாம் தன் மகனை பலி கொடுக்க சென்ற பொழுது, இரண்டு பேர் கூட இருந்தார்கள் என்று வேதாகமத்தில் பார்க்கிறோம், அவர்கள் நிறைவேற போகிற காரியங்களுக்கு ஒரு மாதிரியாகவே இருந்தார்கள் - ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, தன் கழுதையின்மேல் சேணங்கட்டி, தன் வேலைக்காரரில் இரண்டுபேரையும் தன் குமாரன் ஈசாக்கையும் கூட்டிக்கொண்டு, தகனபலிக்குக் கட்டைகளையும் பிளந்துகொண்டு, தேவன் தனக்குக் குறித்த இடத்திற்குப் புறப்பட்டுப்போனான் - ஆதியாகமம் 22:3
அதன் நிறைவேறுதலாக தான், மகதலேனா மரியாள் கர்த்தரின் சிலுவையண்டையில் நின்ற பொழுது, வெவ்வேறு நாமத்தில் இரண்டு பேர் கூட இருந்ததை சுவிசேஷ புஸ்தகங்களில் பார்க்க முடிகிறது, மத்தேயு அவர்களை "யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாள்" மற்றும் "செபெதேயுவின் குமாரருடைய தாய்" என்று குறிப்பிட்டுள்ளார் - மகதலேனா மரியாளும், யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளும், செபெதேயுவின் குமாரருடைய தாயும் - மத்தேயு 27:56
மாற்கு அவர்களை "சின்ன யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாள்" மற்றும் "சலோமே" என்று குறிப்பிட்டுள்ளார் - மகதலேனா மரியாளும், சின்ன யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும் - மாற்கு 15:40
ஆனால், கர்த்தரால் பொவனெர்கேஸ் என்று பெயரிடப்பட்ட யோவானோ, அவர்களை இன்னும் அறிந்துக் கொண்டவனாய் "அவருடைய தாய்" மற்றும் "தாயின் சகோதரி கிலெயோப்பா மரியாள்" என்று எழுதியுள்ளார், அது பரலோகத்தின் தேவனே அன்றி வேறு யாரும் அல்ல - இயேசுவின் சிலுவையினருகே அவருடைய தாயும், அவருடைய தாயின் சகோதரி கிலெயோப்பா மரியாளும், மகதலேனா மரியாளும் - யோவான் 19:25-30
உயிர்தெழுதலின் சமயத்தில் இரண்டு பேராக
அது போலவே, கர்த்தரின் உயிர்தெழுதலின் சமயத்திலும், கர்த்தரை தரிசிக்க இரண்டு பேர் மகதலேனா மரியாளுக்கு உதவி செய்ததை பார்க்க முடிகிறது, மத்தேயு அவர்களை "மற்ற மரியாள்" மற்றும் "கர்த்தருடைய தூதன்" என்று குறிப்பிட்டுள்ளார் - 1.ஓய்வுநாள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் விடிந்துவருகையில், மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்க வந்தார்கள். 2.அப்பொழுது, பூமி மிகவும் அதிரும்படி, கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்திறங்கி வந்து, வாசலிலிருந்த கல்லைப் புரட்டித் தள்ளி, அதின்மேல் உட்கார்ந்தான். 3.அவனுடைய ரூபம் மின்னல் போலவும், அவனுடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போல வெண்மையாகவும் இருந்தது - மத்தேயு 28:1-3
மாற்கு அவர்களை "யாக்கோபின் தாயாகிய மரியாள்" மற்றும் "சலோமே" என்று குறிப்பிட்டுள்ளார் - 1.ஓய்வுநாளானபின்பு மகதலேனா மரியாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும், அவருக்குச் சுகந்தவர்க்கமிடும்படி அவைகளை வாங்கிக்கொண்டு, 2.வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே சூரியன் உதயமாகிறபோது கல்லறையினிடத்தில் வந்து, 3.கல்லறையின் வாசலிலிருக்கிற கல்லை நமக்காக எவன் புரட்டித்தள்ளுவான் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள் - மாற்கு 16:1-3
லூக்கா அவர்களை "பிரகாசமுள்ள வஸ்திரந்தரித்த இரண்டுபேர்" என்று குறிப்பிட்டுள்ளார் - 1.வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே தாங்கள் ஆயத்தம்பண்ணின கந்தவர்க்கங்களை அவர்கள் எடுத்துக்கொண்டு வேறு சில ஸ்திரீகளோடுங்கூடக் கல்லறையினிடத்தில் வந்தார்கள். 2.கல்லறையை அடைத்திருந்த கல் புரட்டித் தள்ளப்பட்டிருக்கிறதைக் கண்டு, 3.உள்ளே பிரவேசித்து, கர்த்தராகிய இயேசுவின் சரீரத்தைக் காணாமல், 4.அதைக்குறித்து மிகுந்த கலக்கமடைந்திருக்கையில், பிரகாசமுள்ள வஸ்திரந்தரித்த இரண்டுபேர் அவர்கள் அருகே, நின்றார்கள் - லூக்கா 24:1-4
யோவான் அவர்களை "வெள்ளுடை தரித்தவர்களாய் இரண்டு தூதர்கள்" என்று குறிப்பிட்டுள்ளார் - 11.மரியாள் கல்லறையினருகே வெளியே நின்று அழுதுகொண்டிருந்தாள்; அப்படி அழுதுகொண்டிருக்கையில் அவள் குனிந்து கல்லறைக்குள்ளே பார்த்து, 12.இயேசுவின் சரீரம் வைக்கப்பட்டிருந்த இடத்திலே வெள்ளுடை தரித்தவர்களாய் இரண்டு தூதர்கள், தலைமாட்டில் ஒருவனும் கால்மாட்டில் ஒருவனுமாக, உட்கார்ந்திருக்கிறதைக் கண்டாள். 13.அவர்கள் அவளை நோக்கி: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய் என்றார்கள். அதற்கு அவள்: என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எனக்குத் தெரியவில்லை என்றாள். 14.இவைகளைச் சொல்லிப் பின்னாகத் திரும்பி, இயேசு நிற்கிறதைக் கண்டாள்; ஆனாலும் அவரை இயேசு என்று அறியாதிருந்தாள் - யோவான் 20:11-14
இப்படி இரண்டு பேர், உயிர்தெழுந்த இயேசு கிறிஸ்துவை தரிசிக்க மகதலேனா மரியாளுக்கு துணையாக இருந்ததை பார்க்க முடிகிறது, ஆனால், கடைசியில் மகதலேனா மரியாள் மாத்திரமே கர்த்தரை தரிசித்தாள் என்றால், மகதலேனா மரியாளுக்கு துணையாக வெவ்வேறு நாமத்தில் வந்தவர் யார்? தன் குமாரனின் நீதியை கண்டு அவரை உயிரோடு எழுப்பினர் தானே - 9.வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே இயேசு எழுந்திருந்தபின்பு, மகதலேனா மரியாளுக்கு முதல்முதல் தரிசனமானார். 10.அவளிடத்திலிருந்து அவர் ஏழு பிசாசுகளைத் துரத்தியிருந்தார். அவள் புறப்பட்டு, அவரோடேகூட இருந்தவர்கள் துக்கப்பட்டு அழுதுகொண்டிருக்கையில், அவர்களிடத்தில் போய், அந்தச் செய்தியை அறிவித்தாள். 11.அவர் உயிரோடிருக்கிறாரென்றும் அவளுக்குக் காணப்பட்டார் என்றும் அவர்கள் கேட்டபொழுது நம்பவில்லை - மாற்கு 16:9-11
அதோ உன் பிதா