மோசேக்கு இரண்டு தாயார்கள் இருந்ததை பார்த்தோம், ஒருவர் மோசேயை "பெற்றேடுத்த எபிரெய ஸ்திரீ", மற்றோருவர் நாணற்பெட்டியில் விடப்பட்ட மோசேயை "கண்டெடுத்த பார்வோனின் குமாரத்தி", ஆனால், மோசே தான் பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்று என்னப்படுவதை வெறுத்தார் என்று வேதாகமம் சொல்லுகிறது, மோசே தன்னை நாணற்பெட்டியில் கண்டெடுத்த பார்வோனுடைய குமாரத்தியை வெறுக்கவில்லை, மாறாக அவரின் மகன் என்று என்னப்படுவதை வெறுத்தார் - 24.விசுவாசத்தினாலே மோசே தான் பெரியவனானபோது பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்னப்படுவதை வெறுத்து, 25.அநித்தியமான பாவசந்தோஷங்களை அநுபவிப்பதைப்பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அநுபவிப்பதையே தெரிந்துகொண்டு, 26.இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்து, எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான் - எபிரெயர் 11:24-26
அதை தான் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையிலும் பார்க்கிறோம், இயேசு கிறிஸ்து மரியாளை நேசித்தார், ஆனால், தான் மரியாளுடைய குமாரன் என்று அழைக்கப்படுவதை அவர் விரும்பவில்லை - இவன் தச்சன் அல்லவா? மரியாளுடைய குமாரன் அல்லவா? யாக்கோபு யோசே யூதா சீமோன் என்பவர்களுக்குச் சகோதரன் அல்லவா? இவன் சகோதரிகளும், இங்கே நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? என்று சொல்லி, அவரைக்குறித்து இடறலடைந்தார்கள் - மாற்கு 6:3
மேலும், நம்மை இரட்சிக்க, சிலுவையின் வலியையும் பொறுத்துக்கொண்ட கர்த்தர், தன்னை மரியாளுடைய குமாரன் என்று சொன்ன பொழுது அமைதியாய் இருக்கவில்லை, இது தன்னை கனவீன படுத்தும் காரியம் என்று சொன்னார் - இயேசு அவர்களை நோக்கி: தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் இனத்திலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான் என்றார் - மாற்கு 6:3
அது மாத்திரம் இல்லாமல், கர்த்தர் தன்னுடைய ஊழிய நாட்களில், உறவினர் என்கிற போர்வையில் ஒருவரும் பின்பற்ற அனுமதிக்கவில்லை, அதனால் தான் தன்னை சந்திக்க வந்த தன் தாயாரையும் சகோதரரையும், என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று கேட்டு அவர்களை அனுப்பி விட்டார் - 31.அப்பொழுது அவருடைய சகோதரரும், தாயாரும் வந்து, வெளியே நின்று, அவரை அழைக்கும்படி அவரிடத்தில் ஆள் அனுப்பினார்கள். 32.அவரைச் சுற்றிலும் உட்கார்ந்திருந்த ஜனங்கள் அவரை நோக்கி: இதோ, உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் வெளியே நின்று உம்மைத் தேடுகிறார்கள் என்றார்கள். 33.அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று சொல்லி, 34.தம்மைச்சூழ உட்கார்ந்திருந்தவர்களைச் சுற்றிப் பார்த்து: இதோ, என் தாயும் என் சகோதரரும் இவர்களே! 35.தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ அவனே எனக்குச் சகோதரனும், எனக்குச் சகோதரியும், எனக்குத் தாயுமாய் இருக்கிறான் என்றார் - மாற்கு 3:31-35
இயேசு கிறிஸ்துவின் சகோதரரும், கர்த்தருடைய ஊழியநாட்களில் அவருடன் இணைந்து செயல்பட வில்லை என்று வேதாகமம் சொல்லுகிறது - 2.யூதருடைய கூடாரப்பண்டிகை சமீபமாயிருந்தது. 3.அப்பொழுது அவருடைய சகோதரர் அவரை நோக்கி: நீர் செய்கிற கிரியைகளை உம்முடைய சீஷர்களும் பார்க்கும்படி, இவ்விடம்விட்டு யூதேயாவுக்குப் போம். 4.பிரபலமாயிருக்க விரும்புகிற எவனும் அந்தரங்கத்திலே ஒன்றையும் செய்யமாட்டான்; நீர் இப்படிப்பட்டவைகளைச் செய்தால் உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தும் என்றார்கள். 5.அவருடைய சகோதரரும் அவரை விசுவாசியாதபடியால் இப்படிச் சொன்னார்கள் - யோவான் 6:41-44
மேலும், கர்த்தர் சீஷர்களுடன் பயணம் செய்தார் என்று வேதாகமம் சொல்லும் பொழுது, அவருடைய தாயாகிய மரியாளும், அவருடைய சகோதரரும் கர்த்தருடன் பயணம் செய்யவில்லை என்பதை அறிந்துக் கொள்ளலாம், கர்த்தர் சில வேளைகளில் பேதுரு யாக்கோபு யோவானை மாத்திரம் அழைத்து கொண்டு போனார் என்று வேதாகமம் சொல்லும் பொழுது, அவருடைய தாயாகிய மரியாளும், அவருடைய சகோதரரும் அங்கு இல்லை என்பதை அறிந்துக் கொள்ளலாம், அது போலவே, கர்த்தர் தனது ஊழியத்தின் கடைசி பயணமாக எருசலேமுக்கு வந்த பொழுதும், ஜனங்கள் ஓசன்னா! என்று ஆர்ப்பரித்த பொழுதும், அவருடைய தாயாகிய மரியாளும், அவருடைய சகோதரரும் அங்கு இல்லை என்பதை அறிந்துக் கொள்ளலாம், அப்படி இருக்கும் பொழுது, கர்த்தருடைய சிலுவையின் அருகே அவருடைய தாயாகிய மரியாள் வந்தது எப்படி? கண்ணீரோடு அங்கு நின்றது இயேசுவின் தாயாகிய மரியாளா? அல்லது இயேசுவின் தாயாகிய பரலோகத்தின் தேவனா?
தொடர்ந்து படிக்க சிலுவையினருகே இல்லாத மரியாள்
முந்தைய பாகத்தை படிக்க ஸ்திரீயே என்று ஏன் அழைத்தார்?