ஸ்திரீயே என்று ஏன் அழைத்தார்?
என் வாயை உவமைகளினால் திறப்பேன்
என் வாயை உவமைகளினால் திறப்பேன்
தேவனுடைய வார்த்தைகள் ஒவ்வொன்றும் உவமைகள் நிறைந்ததாக இருக்கிறது, உதாரணத்திற்கு, ஏதேன் தோட்டத்தில் தேவன் கொடுத்த வாக்குத்தத்ததில், "சர்ப்பம்" என்பது பாம்பை குறிக்காமல், சாத்தானை குறிக்கிறது, அது போலவே, "வித்து" என்பது விதையை குறிக்காமல், இயேசு கிறிஸ்துவை குறிக்கிறது, அப்படியென்றால் "ஸ்திரீ" என்பது மாத்திரம் எப்படி ஒரு ஸ்திரீயையே அதாவது மரியாளை குறிக்கும்? அது நிச்சியமாக வேறொரு நபரை தான் குறிக்க வேண்டும் - 14.அப்பொழுது தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப் பார்த்து: நீ இதைச் செய்தபடியால் சகல நாட்டுமிருகங்களிலும் சகல காட்டுமிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய்; 15.உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார் - ஆதியாகமம் 3:14-15
அந்த ஸ்திரீ விதையாகிய இயேசு கிறிஸ்துவை நமக்கு தந்த பரலோகத்தின் தேவனே, இந்த மறைபொருளை வெளிப்படுத்த தான், இயேசு கிறிஸ்து, தன் பிதாவை ஸ்திரீயே என்று அழைத்தார் - 3.திராட்சரசம் குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை என்றாள். 4.அதற்கு இயேசு: ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை என்றார் - யோவான் 2:1-11
ஏனென்றால், நம் இரட்சகராகிய இயேசு கிறிஸ்து, உலகத்தோற்றமுதல் சொல்லப்பட்ட மறைபொருளானவைகளை வெளிப்படுத்தவே இந்த பூமிக்கு வந்தார் - என் வாயை உவமைகளினால் திறப்பேன்; உலகத்தோற்றமுதல் மறைபொருளானவைகளை வெளிப்படுத்துவேன் என்று தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது - மத்தேயு 13:35 [சங்கீதம் 78:2]
ஏன் தேவனுடைய வார்த்தைகள் ஒவ்வொன்றும் உவமைகள் நிறைந்ததாக இருந்தது? அது தேவனை தேடாதவர்களுக்கு மறைபொருளாய் இருக்கும் படியாக அப்படி சொல்லப்பட்டதாம் - 10.அப்பொழுது, சீஷர்கள் அவரிடத்தில் வந்து: ஏன் அவர்களோடே உவமைகளாகப் பேசுகிறீர் என்று கேட்டார்கள். 11.அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: பரலோகராஜ்யத்தின் ரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது, அவர்களுக்கோ அருளப்படவில்லை. 12.உள்ளவன் எவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவன் எவனோ அவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும். 13.அவர்கள் கண்டும் காணாதவர்களாயும், கேட்டும் கேளாதவர்களாயும், உணர்ந்துகொள்ளாதவர்களாயும் இருக்கிறபடியினால், நான் உவமைகளாக அவர்களோடே பேசுகிறேன் - மத்தேயு 13:10-13
எப்படியெனில், நாம் தேவ அன்பில்லாமல், மனமேட்டிமை, சுயநீதியுள்ளவர்களாக இருப்போமானால் இயேசு கிறிஸ்துவின் உபதேசங்கள் ஒரு அர்த்தத்தை கொடுக்கும், அதே சமயத்தில் நாம் கர்த்தரை அண்டிக் கொண்டால், அவர் அதின் உண்மையான அர்த்தத்தை நமக்கு கற்றுக் கொடுப்பார், அதனால் கர்த்தரை அண்டிக் கொண்டு நம் ஆத்துமாவை நித்திய நரகத்துக்குத் தப்பித்துக் கொள்ளுவோம் - 10.அவர் தனித்திருக்கிறபோது, பன்னிருவரோடுங்கூட அவரைச் சூழ்ந்திருந்தவர்கள் இந்த உவமையைக்குறித்து அவரிடத்தில் கேட்டார்கள். 11.அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது; புறம்பே இருக்கிறவர்களுக்கோ இவைகளெல்லாம் உவமைகளாகச் சொல்லப்படுகிறது. 12.அவர்கள் குணப்படாதபடிக்கும், பாவங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதபடிக்கும், அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கும்படி, இப்படிச் சொல்லப்படுகிறது என்றார் - மாற்கு 4:10-12
தொடர்ந்து படிக்க மரியாளுடைய குமாரன் அல்லவா?
முந்தைய பாகத்தை படிக்க கானா ஊர் கலியாணம்