இப்படி தனிப்பட்டு நிற்கும் யோவான் சுவிஷேச புஸ்தகத்தின் முதலாம் அதிகாரமானது, கர்த்தர் தன் சீஷர்களிடம், இதுமுதல் தேவதூதர்களை காண்பீர்கள் என்று சொன்னதுடன் முடிவடைகிறது - 49.அதற்கு நாத்தான்வேல்: ரபீ, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா என்றான். 50.இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: அத்திமரத்தின் கீழே உன்னைக் கண்டேன் என்று நான் உனக்குச் சொன்னதினாலேயா விசுவாசிக்கிறாய்; இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய் என்றார். 51.பின்னும், அவர் அவனை நோக்கி: வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் காண்பீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் - யோவான் 1:49-51
தேவதூதர்களை காண்பீர்கள் என்று கர்த்தர் தன் சீஷர்களிடம் சொன்னது, பரலோகத்தின் தேவனையே குறிக்கிறது, ஏனென்றால் பிதாவை வெளிப்படுத்தவே குமாரன் வெளிப்பட்டாரேயன்றி, தூதர்களை வெளிப்படுத்தவோ அல்லது எந்த ஒரு மனிதனை பிரசித்தபடுத்தவோ இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு வரவில்லை - தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார் - யோவான் 1:14-18
மேலும், பழைய ஏற்பாட்டு வசனங்கள், பரலோகத்தின் தேவனை தான் "தேவதூதன்" என்று அறிமுகப்படுத்துகிறது - 11.அன்றியும் தேவதூதன் ஒருவர் சொப்பனத்தில்: யாக்கோபே என்றார்; இதோ, இருக்கிறேன் என்றேன். 12.அப்பொழுது அவர்: உன் கண்களை ஏறெடுத்துப்பார்; ஆடுகளோடே பொலியும் கடாக்களெல்லாம் கலப்புநிறமும் புள்ளியும் வரியுமுள்ளவைகளாய் இருக்கிறது; லாபான் உனக்குச் செய்கிற யாவையும் கண்டேன். 13.நீ தூணுக்கு அபிஷேகஞ்செய்து, எனக்கு ஒரு பொருத்தனையைப் பண்ணின பெத்தேலிலே உனக்குத் தரிசனமான தேவன் நானே; இப்பொழுது நீ எழுந்து, இந்தத் தேசத்தைவிட்டுப் புறப்பட்டு, உன் இனத்தாரிருக்கிற தேசத்திற்குத் திரும்பிப்போ என்று சொன்னார் என்றான் - ஆதியாகமம் 31:11-13
தொடர்ந்து படிக்க கானா ஊர் கலியாணம்
முந்தைய பாகத்தை படிக்க தனிப்பட்டு நிற்கும் யோவான் சுவிஷேச புஸ்தகம்