இந்த யோவானை குறித்து சில காரியங்களை நாம் அவசியம் அறிந்துக் கொள்ளவேண்டும், இவர் இயேசு கிறிஸ்துவால் பொவனெர்கேஸ் என்று பெயரிடப்பட்டு, ஒரு மேன்மையான ஊழியத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார் - செபெதேயுவின் குமாரனாகிய யாக்கோபு, யாக்கோபின் சகோதரனாகிய யோவான், இவ்விருவருக்கும் இடிமுழக்க மக்களென்று அர்த்தங்கொள்ளும் பொவனெர்கேஸ் என்கிற பெயரிட்டார் - மாற்கு 3:17
மேலும், யோவானுக்கு இயேசு கிறிஸ்து கொடுத்த கிருபை, அவருக்கு பிதாவோடு பேசும் பாக்கியத்தையும் கொடுத்தது, அதனால் தான் பிதாவானவர் இடிமுழக்க சத்தத்தில் பதிலளித்த பொழுது, எல்லோரும் இது இடிமுழக்க சத்தம் என்றார்கள், ஆனால் பொவனெர்கேஸ் என்று அழைக்கப்பட்ட யோவானோ அந்த இடிமுழக்க சத்தத்தின் வியாக்கியானத்தை[அர்த்தத்தை] அறிந்துக் கொண்டார், அதன் பொருளை தன்னுடைய சுவிசேஷ புஸ்தகத்தில் எழுதியுள்ளார், மற்ற சீஷர்களுக்கு அது இடிமுழக்க சத்தமாக இருந்ததினால் தான் இந்த சம்பவம் மற்ற சுவிசேஷ புஸ்தகத்தில் சொல்லப்படவில்லை, இப்படி ஒரு மேலான வரம் பெற்ற யோவானே, சிலுவையினருகே கர்த்தரின் தாயாவரை கண்டதாக எழுதியுள்ளார் - 27.இப்பொழுது என் ஆத்துமா கலங்குகிறது, நான் என்ன சொல்லுவேன். பிதாவே, இந்த வேளையினின்று என்னை இரட்சியும் என்று சொல்வேனோ; ஆகிலும், இதற்காகவே இந்த வேளைக்குள் வந்தேன். 28.பிதாவே, உமது நாமத்தை மகிமைப்படுத்தும் என்றார். அப்பொழுது: மகிமைப்படுத்தினேன், இன்னமும் மகிமைப்படுத்துவேன் என்கிற சத்தம் வானத்திலிருந்து உண்டாயிற்று. 29.அங்கே நின்று கொண்டிருந்து, அதைக் கேட்ட ஜனங்கள்: இடிமுழக்கமுண்டாயிற்று என்றார்கள். வேறுசிலர்: தேவதூதன் அவருடனே பேசினான் என்றார்கள். 30.இயேசு அவர்களை நோக்கி: இந்தச் சத்தம் என்னிமித்தம் உண்டாகாமல் உங்கள் நிமித்தமே உண்டாயிற்று - யோவான் 12:27-30
- இயேசுவின் சிலுவையினருகே அவருடைய தாயும், அவருடைய தாயின் சகோதரி கிலெயோப்பா மரியாளும், மகதலேனா மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள் - யோவான் 19:25
, தன் ஊழியத்தின் துவக்கத்திலும் இரண்டு படவுகள் இருக்க அதில் ஒன்றில் ஏறி ஜனங்களுக்குப் போதகம்பண்ணினார் - 1.பின்பு அவர் கெனேசரேத்துக் கடலருகே நின்றபோது, திரளான ஜனங்கள் தேவவசனத்தைக் கேட்கும்படி அவரிடத்தில் நெருங்கினார்கள். 2.அப்பொழுது கடற்கரையிலே நின்ற இரண்டு படவுகளைக் கண்டார். மீன்பிடிக்கிறவர்கள் அவைகளை விட்டிறங்கி, வலைகளை அலசிக்கொண்டிருந்தார்கள். 3.அப்பொழுது அந்தப் படவுகளில் ஒன்றில் ஏறினார், அது சீமோனுடையதாயிருந்தது; அதைக் கரையிலிருந்து சற்றே தள்ளும்படி அவனைக் கேட்டுக்கொண்டு, அந்தப் படவில் உட்கார்ந்து, ஜனங்களுக்குப் போதகம்பண்ணினார் - லூக்கா 5:1-3