தேவஆவியானவர், மத்தேயு மற்றும் லூக்கா மூலமாக எழுதி தந்த இயேசு கிறிஸ்துவின் சுவிஷேச புஸ்தகத்தை காட்டிலும், மாற்கு மற்றும் யோவான் மூலமாக எழுதி தந்த சுவிஷேச புஸ்தகங்கள் சற்று வித்தியாசமாக தான் இருக்கிறது, எப்படியெனில், மத்தேயு மற்றும் லூக்கா சுவிஷேச புஸ்தகங்கள், இயேசு கிறிஸ்துவின் குழந்தை பருவத்தை சொல்லித் துவங்கும் பொழுது, மாற்கு மற்றும் யோவான் சுவிஷேச புஸ்தகங்கள் இயேசு கிறிஸ்துக்கும் பரலோக தேவனுக்கும் இடையேயான பிதா குமாரன் என்கிற உறவை மாத்திரம் சொல்லித் துவங்குகிறது.
மேலும், இந்த மத்தேயு மற்றும் லூக்கா சுவிஷேச புஸ்தகங்கள், இயேசு கிறிஸ்து இப்பூமிக்கு வரத் தெரிந்து கொண்ட குடும்பமாகிய மரியாள் மற்றும் யோசேப்பை பற்றியும், அவர்களின் குடும்ப வம்சத்தை பற்றியும் ஒரு முன்னுரையாக சொல்லியிருக்கும் பொழுது, மாற்கு மற்றும் யோவான் சுவிஷேச புஸ்தகங்கள், மரியாளையோ அல்லது யோசேப்பையோ பற்றி ஒன்றுமே சொல்லாமலிருந்ததற்கு காரணம் இருக்க தான் செய்கிறது, நமக்கு ஒரு விலையுர்ந்த பரிசு வெளிநாட்டிலிருந்து வருமானால், அந்த பரிசை மிகவும் பிரயாசப்பட்டு அனுப்பினவருக்கு நன்றி சொல்ல வேண்டுமேயன்றி, அந்த பரிசை கையில் கொடுத்த தபால்காரருக்கு நன்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, அது போலவே, மாற்கு மற்றும் யோவான் சுவிஷேச புஸ்தகங்கள், நம்முடைய ஆத்ம ரட்சிப்புக்காக தன்னுடைய சொந்த குமாரனையே தந்த பரலோக தேவனை மாத்திரம் பிரசித்தப்படுத்தி, அவருக்கே நாம் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்றும், கர்த்தரை கருவில் சுமந்த மரியாளினாலோ அல்லது மரியாளின் புருஷனாகிய யோசேப்பினாலோ, அல்லது அவர்களின் வம்சத்தினாலோ நம்முடைய ஆத்ம இரட்சிப்புக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை என்பதால் அவர்களை பற்றி ஒன்றுமே சொல்லவில்லை.
இதில், மாற்கு சுவிஷேச புஸ்தகமானது, முதல் வசனத்திலேயே தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் ஆரம்பம் - மாற்கு 6:1 என்று சொல்லி, இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்கிற மேலான அறிக்கையுடன் துவங்குகிறது, அக்காலத்தில், சுவிஷேச புஸ்தகங்கம் தனித்தனியாக தான் எழுதப்பட்டு உபயோகப்படுத்தப்பட்டன, அதனால், இந்த மாற்கு சுவிஷேசத்தை மாத்திரம் படிக்கும் சபையாரிடம், "இயேசு கிறிஸ்து யார்?" என்று கேட்டால், "இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன்" என்பதை மாத்திரமே அவர்களால் சொல்லக்கூடும், மேலும் அவர்களிடம், கர்த்தர் பிறந்து வளர்ந்த குடும்பத்தை குறித்துக் கேட்டால், சில பெயர்களை மாத்திரம் பின் வரும் வசனங்களின் மூலமாக சொல்ல தெரியுமேயன்றி வேறொன்றும் சொல்லத்தெரியாது - 3.இவன் தச்சன் அல்லவா? மரியாளுடைய குமாரன் அல்லவா? யாக்கோபு யோசே யூதா சீமோன் என்பவர்களுக்குச் சகோதரன் அல்லவா? இவன் சகோதரிகளும், இங்கே நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? என்று சொல்லி, அவரைக்குறித்து இடறலடைந்தார்கள். 4.இயேசு அவர்களை நோக்கி: தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் இனத்திலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான் என்றார் - மாற்கு 6:3-4
ஆனால், இந்த யோவான் சுவிஷேசத்தை மாத்திரம் படிக்கும் சபையாரிடம், கர்த்தர் பிறந்து வளர்ந்த குடும்பத்தை குறித்துக் கேட்டால், ஒரு பெயரை கூடச்சொல்லத் தெரியாது, ஏனென்றால், "மரியாள்" என்றோ அல்லது "யோசேப்பு" என்றோ ஒரு இடத்தில கூட சொல்லப்பட வில்லை, மேலும் அவர்களிடம், இயேசு கிறிஸ்துவின் தாய் யார்? அல்லது தந்தை யார்? என்று கேட்டால், "பரலோகத்தின் தேவன்" என்றே பதில் சொல்லுவார்கள், ஏனென்றால் இந்த யோவான் சுவிஷேச புஸ்தகமானது, ஒரு தாயின் வயிற்றிலிருக்கிற குழந்தையை போல, பிதாவின் மடியிலிருக்கிற இயேசு கிறிஸ்து நமக்காக இந்த பூமிக்கு வந்தார் என்பதை மாத்திரமே கற்றுக் கொடுக்கிறது - 14.அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது. 15.யோவான் அவரைக்குறித்துச் சாட்சிகொடுத்து: எனக்குப் பின்வருகிறவர் எனக்கு முன்னிருந்தவர், ஆகையால் அவர் என்னிலும் மேன்மையுள்ளவர் என்று நான் சொல்லியிருந்தேனே, அவர் இவர்தான் என்று சத்தமிட்டுக் கூறினான். 16.அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின்மேல் கிருபை பெற்றோம். 17.எப்படியெனில் நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின. 18.தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார் - யோவான் 1:14-18
இப்படி தனிப்பட்டு நிற்கும் யோவான் சுவிஷேச புஸ்தகத்தின் முதலாம் அதிகாரமானது, கர்த்தர் தன் சீஷர்களிடம், இதுமுதல் தேவதூதர்களை காண்பீர்கள் என்று சொன்னதுடன் முடிவடைகிறது - 49.அதற்கு நாத்தான்வேல்: ரபீ, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா என்றான். 50.இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: அத்திமரத்தின் கீழே உன்னைக் கண்டேன் என்று நான் உனக்குச் சொன்னதினாலேயா விசுவாசிக்கிறாய்; இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய் என்றார். 51.பின்னும், அவர் அவனை நோக்கி: வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் காண்பீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் - யோவான் 1:49-51
இயேசு கிறிஸ்து தன் சீஷர்களிடம் சொன்ன "தேவதூதன்" என்பது பரலோகத்தின் தேவனையே குறிக்கிறது, ஏனென்றால் பிதாவை வெளிப்படுத்தவே குமாரன் வெளிப்பட்டாரேயன்றி, தூதர்களை வெளிப்படுத்த இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு வரவில்லை, மேலும் பழைய ஏற்பாட்டின் இந்த வசனங்களிலிருந்து பரலோகத்தின் தேவனை தான் இயேசு கிறிஸ்து "தேவதூதன்" என்று சொன்னார் என்பதை அறிந்துக் கொள்ளலாம் - 11.அன்றியும் தேவதூதன் ஒருவர் சொப்பனத்தில்: யாக்கோபே என்றார்; இதோ, இருக்கிறேன் என்றேன். 12.அப்பொழுது அவர்: உன் கண்களை ஏறெடுத்துப்பார்; ஆடுகளோடே பொலியும் கடாக்களெல்லாம் கலப்புநிறமும் புள்ளியும் வரியுமுள்ளவைகளாய் இருக்கிறது; லாபான் உனக்குச் செய்கிற யாவையும் கண்டேன். 13.நீ தூணுக்கு அபிஷேகஞ்செய்து, எனக்கு ஒரு பொருத்தனையைப் பண்ணின பெத்தேலிலே உனக்குத் தரிசனமான தேவன் நானே; இப்பொழுது நீ எழுந்து, இந்தத் தேசத்தைவிட்டுப் புறப்பட்டு, உன் இனத்தாரிருக்கிற தேசத்திற்குத் திரும்பிப்போ என்று சொன்னார் என்றான் - ஆதியாகமம் 31:11-13
இப்படி இயேசு கிறிஸ்து தன் சீஷர்களிடம் பரலோகத்தின் தேவனை வெளிப்படுத்துவேன் என்று அறிவித்த பின்பு, சொல்லப்பட்டது தான் இந்த "கானா ஊர் கலியாணம்" என்கிற அழகான சம்பவம் - 1.மூன்றாம் நாளிலே கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே ஒரு கலியாணம் நடந்தது; இயேசுவின் தாயும் அங்கேயிருந்தாள். 2.இயேசுவும் அவருடைய சீஷரும் அந்தக் கலியாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். 3.திராட்சரசம் குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை என்றாள். 4.அதற்கு இயேசு: ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை என்றார். 5.அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதின்படி செய்யுங்கள் என்றாள். 6.யூதர்கள் தங்களைச் சுத்திகரிக்கும் முறைமையின்படியே, ஒவ்வொன்று இரண்டு மூன்று குடம் தண்ணீர் கொள்ளத்தக்க ஆறு கற்சாடிகள் அங்கே வைத்திருந்தது. 7.இயேசு வேலைக்காரரை நோக்கி: ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள் என்றார்; அவர்கள் அவைகளை நிறைய நிரப்பினார்கள். 8.அவர் அவர்களை நோக்கி: நீங்கள் இப்பொழுது மொண்டு, பந்திவிசாரிப்புக்காரனிடத்தில் கொண்டுபோங்கள் என்றார்; அவர்கள் கொண்டுபோனார்கள். 9.அந்தத் திராட்சரசம் எங்கேயிருந்து வந்ததென்று தண்ணீரை மொண்ட வேலைக்காரருக்குத் தெரிந்ததேயன்றி பந்திவிசாரிப்புக்காரனுக்குத் தெரியாததினால், அவன் திராட்சரசமாய் மாறின தண்ணீரை ருசிபார்த்தபோது, மணவாளனை அழைத்து: 10.எந்த மனுஷனும் முன்பு நல்ல திராட்சரசத்தைக் கொடுத்து, ஜனங்கள் திருப்தியடைந்தபின்பு, ருசி குறைந்ததைக் கொடுப்பான், நீரோ நல்ல ரசத்தை இது வரைக்கும் வைத்திருந்தீரே என்றான். 11.இவ்விதமாக இயேசு இந்த முதலாம் அற்புதத்தைக் கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே செய்து, தம்முடைய மகிமையை வெளிப்படுத்தினார்; அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள் - யோவான் 2:1-11
இந்த கானா ஊர் கலியாணத்தை, உலக அனுபவத்தோடு படிக்கும் பொழுது ஒரு விளக்கத்தையும், அதே சமயத்தில், இயேசு கிறிஸ்து வாக்குத்தத்தம் பண்ணின "இதுமுதல் தேவதூதர்களை காண்பீர்கள்" என்பதை அடிப்படையாக கொண்டு படிக்கும் பொழுது பரலோக ராஜ்யத்திற்கான விளக்கத்தையும் கொடுக்கிறது, அதனால் கலியாணம் என்றவுடனே, நம் நினைவுகள் நம்மை ஒரு கல்யாண மண்டபத்திற்குள் அழைத்துச் செல்ல அனுமதிக்காமல், சற்று நிதானமாய் ஆராய்ந்து, நம் இருதயத்தை இயேசு கிறிஸ்து சொன்ன "இதுமுதல் தேவதூதர்களை காண்பீர்கள்" என்கிற வாக்குத்தத்தை நோக்கி திருப்புவோம்.
இந்த "கானா" என்கிற கிராமம் இஸ்ரவேல் தேசத்தில் இன்றைக்கும் இருக்கிறது, அது கலிலேயா கடலிலிருந்து ஏறக்குறைய 18 கிமீ தொலைவில் இருக்கிறது, ஆனால் வேதாகமம் சொல்லும் "கலிலேயாவிலுள்ள கானா" என்பது இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் நாம் சுதந்தரிக்கும் பரலோக ராஜ்ஜியத்தை குறிக்கிறது - 7.அவரே நம்முடைய தேவனாகிய கர்த்தர், அவருடைய நியாயத்தீர்ப்புகள் பூமியெங்கும் விளங்கும். 8.ஆயிரந்தலைமுறைக்கென்று அவர் கட்டளையிட்ட வாக்கையும், ஆபிரகாமோடே அவர் பண்ணின உடன்படிக்கையையும், 9.அவர் ஈசாக்குக்கு இட்ட ஆணையையும் என்றென்றைக்கும் நினைத்திருக்கிறார். 10.அதை யாக்கோபுக்குப் பிரமாணமாகவும், இஸ்ரவேலுக்கு நித்திய உடன்படிக்கையாகவும் உறுதிப்படுத்தி: 11.உங்கள் சுதந்தரபாகமான கானான் தேசத்தை உனக்குத் தருவேன் என்றார் - சங்கீதம் 105:7-11
மேலும் அந்த கானா ஊர் கலியாணத்தில், இயேசுவின் தாய் அங்கேயிருந்தார் என்று வேதாகமம் சொல்லுகிறது, அந்த இயேசுவின் தாய், கர்த்தரை நமக்குத் தந்த பரலோக தேவனையே குறிக்கிறது, ஏனென்றால் அவரே எல்லாவற்றையும் உண்டுபண்ணினவர், அவரே தன் குமாரனுக்காக அந்த கலியாணத்தையும் ஏற்படுத்தியிருந்தார், அதனால் தான் மூலபாஷையாகிய கிரேக்க மொழியில் "இயேசுவின் தாயும் தாய் அங்கேயிருந்தாள்" என்று எழுதப்பட்டுள்ளது, அதாவது ஏக சக்கராதிபதியாய், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவராய் பரலோகத்தில் வீற்றிருப்பதை இப்படி அழகாக "இயேசுவின் தாய் அங்கேயிருந்தாள்" என்று தேவ ஆவியானவர் எழுதியுள்ளார், சாலொமோன் ஞானி கூட ஒரு இடத்தில, பரலோகத்தின் தேவனை "தாய்" என்றும், இயேசு கிறிஸ்துவை "அவரின் ஒரே பிள்ளை" என்றும் குறிப்பிடுகிறார், தேவனிடத்திலிருந்து வந்த இயேசு கிறிஸ்துவை "ஒரே பிள்ளை" என்றால், தேவனை "அவரின் தாய்" என்று சாலொமோன் ஞானி குறிப்பிட்டது சரி தானே! - என் புறாவோ, என் உத்தமியோ ஒருத்தியே; அவள் தன் தாய்க்கு ஒரே பிள்ளை; அவள் தன்னைப் பெற்றவளுக்கு அருமையானவள் - உன்னதப்பாட்டு 6:9
மோசேயின் தாய் யார்?
இதை ஒரு உதாரணத்தோடு பார்த்தால் மிகவும் எளிதாக புரிந்துக் கொள்ளலாம், வேதாகமத்தில் மோசேக்கு "லேவியின் குமாரத்தி" மற்றும் "பார்வோனின் குமாரத்தி என இரண்டு தாய்கள் இருந்தார்கள் என்பதை பார்க்க முடிகிறது, ஆனால் மோசே குழந்தையாக இருந்த பொழுது "பிள்ளையின் தாய்" பால் கொடுத்து வளர்த்தாள் என்று சொல்லும் பொழுது, அது லேவியின் குமாரத்தியை குறிக்கிறதே அன்றி பார்வோனுடைய குமாரத்தியை அல்ல, அது போலவே "இயேசுவின் தாய்" என்பது பரலோகத்தின் தேவனை குறிக்கிறதே அன்றி மரியாளை அல்ல - 1.லேவியின் குடும்பத்தாரில் ஒருவன் லேவியின் குமாரத்திகளில் ஒருத்தியை விவாகம்பண்ணினான். 2.அந்த ஸ்திரீ கர்ப்பவதியாகி, ஒரு ஆண்பிள்ளையைப் பெற்று, அது அழகுள்ளது என்று கண்டு, அதை மூன்று மாதம் ஒளித்துவைத்தாள். 3.அவள் அதை அப்புறம் ஒளித்துவைக்கக்கூடாமல், ஒரு நாணற்பெட்டியை எடுத்து, அதற்குப் பிசினும் கீலும் பூசி, அதிலே பிள்ளையை வளர்த்தி, நதியோரமாய் நாணலுக்குள்ளே வைத்தாள். 4.அதற்கு என்ன சம்பவிக்கும் என்பதை அறியும்படி அதின் தமக்கை தூரத்திலே நின்றுகொண்டிருந்தாள். 5.அப்பொழுது பார்வோனுடைய குமாரத்தி நதியில் ஸ்நானம்பண்ண வந்தாள்; அவளுடைய தாதிகள் நதியோரத்தில் உலாவினார்கள்; அவள் நாணலுக்குள்ளே இருக்கிற பெட்டியைக் கண்டு, தன் தாதியை அனுப்பி அதைக் கொண்டுவரும்படி செய்தாள். 6.அதைத் திறந்தபோது பிள்ளையைக் கண்டாள்; பிள்ளை அழுதது; அவள் அதின்மேல் இரக்கமுற்று, இது எபிரெயர் பிள்ளைகளில் ஒன்று என்றாள். 7.அப்பொழுது அதின் தமக்கை பார்வோனின் குமாரத்தியை நோக்கி: உமக்கு இந்தப் பிள்ளையை வளர்க்கும்படி எபிரெய ஸ்திரீகளில் பால்கொடுக்கிற ஒருத்தியை நான் போய் உம்மிடத்தில் அழைத்துக்கொண்டு வரட்டுமா என்றாள். 8.அதற்குப் பார்வோனுடைய குமாரத்தி: அழைத்துக்கொண்டுவா என்றாள். இந்தப் பெண் போய்ப் பிள்ளையின் தாயையே அழைத்துக்கொண்டுவந்தாள். 9.பார்வோனுடைய குமாரத்தி அவளை நோக்கி: நீ இந்தப் பிள்ளையை எடுத்துக்கொண்டுபோய், அதை எனக்கு வளர்த்திடு, நான் உனக்குச் சம்பளம் கொடுக்கிறேன் என்றாள். அந்த ஸ்திரீ பிள்ளையை எடுத்துக்கொண்டுபோய், அதை வளர்த்தாள். 10.பிள்ளை பெரிதானபோது, அவள் அதைப் பார்வோனுடைய குமாரத்தியினிடத்தில் கொண்டுபோய் விட்டாள். அவளுக்கு அவன் குமாரனானான். அவள்: அவனை ஜலத்தினின்று எடுத்தேன் என்று சொல்லி, அவனுக்கு மோசே என்று பேரிட்டாள் - யாத்திராகமம் 2:1-10
அடுத்ததாக, அந்தக் கலியாணத்துக்கு இயேசுவும் அவருடைய சீஷரும் அழைக்கப்பட்டிருந்தார்களாம், ஏனென்றால் அந்த கலியாணம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததே அவர்களுக்காகத்தான், அங்கு மணவாளன் நம் இரட்சகராகிய இயேசு கிறிஸ்து, மணவாட்டி அவரின் ரத்தத்தால் மீட்கப்பட்ட சீஷர்களாகிய சபை - பின்னும், அவன் என்னை நோக்கி: ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள் என்றெழுது என்றான். மேலும், இவைகள் தேவனுடைய சத்தியமான வசனங்கள் என்று என்னுடனே சொன்னான் - வெளி 19:9
அடுத்ததாக, பரலோகத்தின் தேவன்[இயேசுவின் தாய்] தன் குமாரனிடம், அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை என்று சொன்னது, தேவனால் தெரிந்துக் கொள்ளப்பட்டவர்களின் ஆத்ம ரட்சிப்புக்காக செய்யப்பட வேண்டிய விலைக்கிரயத்தை குறிக்கிறது, அது தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த ரத்தமே, அவரின் ரத்தமேயன்றி வேறொன்றும் மனுகுலத்தின் பாவத்தை போக்காது, அதனால் தான் பரலோகத்தின் தேவன் தன் குமாரனிடம் "அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை" என்றார் - 3.திராட்சரசம் குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை என்றாள். 4.அதற்கு இயேசு: ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை என்றார் - யோவான் 2:3-4
இப்படி பரலோகத்தின் தேவன் தன் குமாரனிடம் "அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை" என்று சொன்ன பொழுது, கர்த்தர் "ஸ்திரீயே" என்று தன் பிதாவை அழைத்ததற்கு ஒரு காரணம் இருக்க தான் செய்கிறது, ஏனென்றால், ஏதேன் தோட்டத்தில் தேவன் கொடுத்த வாக்குத்தத்ததில், "ஸ்திரீ" என்று உவமையாக சொல்லப்பட்டது "தன் பிதா" தான் என்பதையும், தான் தான் பிசாசின் தலையை நசுக்கும் அந்த "வித்து" என்பதையும் விளக்கவே இயேசு கிறிஸ்து தன் பிதாவை "ஸ்திரீயே" என்று அழைத்தார் - 14.அப்பொழுது தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப் பார்த்து: நீ இதைச் செய்தபடியால் சகல நாட்டுமிருகங்களிலும் சகல காட்டுமிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய்; 15.உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார் - ஆதியாகமம் 3:14-15
தேவனுடைய வார்த்தைகள் ஒவ்வொன்றும் உவமைகள் நிறைந்ததாக இருக்கிறது, மேலும் நம் இரட்சகராகிய இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு வந்த காரணங்களில் ஒன்று, உலகத்தோற்றமுதல் சொல்லப்பட்ட மறைபொருளானவைகளை வெளிப்படுத்த என்பதை முதலாவது நம் மனதில் வைத்துக் கொள்ளவேண்டும் - 34.இவைகளையெல்லாம் இயேசு ஜனங்களோடே உவமைகளாகப் பேசினார்; உவமைகளினாலேயன்றி, அவர்களோடே பேசவில்லை. 35.என் வாயை உவமைகளினால் திறப்பேன்; உலகத்தோற்றமுதல் மறைபொருளானவைகளை வெளிப்படுத்துவேன் என்று தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது - மத்தேயு 13:34-35 [சங்கீதம் 78:2]
ஏன் தேவனுடைய வார்த்தைகள் ஒவ்வொன்றும் உவமைகள் நிறைந்ததாக இருந்தது? அது தேவனை தேடாதவர்களுக்கு மறைபொருளாய் இருக்கும் படியாக அப்படி சொல்லப்பட்டதாம், அதனால் தான் இயேசு கிறிஸ்துவின் உபதேசங்களும் உவமைகள் நிறைந்ததாகவே இருந்தது - 10.அப்பொழுது, சீஷர்கள் அவரிடத்தில் வந்து: ஏன் அவர்களோடே உவமைகளாகப் பேசுகிறீர் என்று கேட்டார்கள். 11.அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: பரலோகராஜ்யத்தின் ரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது, அவர்களுக்கோ அருளப்படவில்லை. 12.உள்ளவன் எவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவன் எவனோ அவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும். 13.அவர்கள் கண்டும் காணாதவர்களாயும், கேட்டும் கேளாதவர்களாயும், உணர்ந்துகொள்ளாதவர்களாயும் இருக்கிறபடியினால், நான் உவமைகளாக அவர்களோடே பேசுகிறேன் - மத்தேயு 13:10-13
எப்படியெனில், நாம் தேவ அன்பில்லாமல், மனமேட்டிமை, சுயநீதியுள்ளவர்களாக இருப்போமானால் இயேசு கிறிஸ்துவின் உபதேசங்கள் ஒரு பொருளுடையதாகவும், அதே சமயத்தில் கர்த்தரை அண்டிக் கொண்டு, அவரிடமே உவமைகளின் விளக்கத்தை கேட்டால் அவர் அதின் உண்மையான அர்த்தத்தை சொல்லிக் கொடுக்கிறவராகவும் இருக்கிறார், அதனால் கர்த்தரை அண்டிக் கொண்டு நம் ஆத்துமாவை நித்திய நரகத்துக்குத் தப்பித்துக் கொள்ளுவோம் - 10.அவர் தனித்திருக்கிறபோது, பன்னிருவரோடுங்கூட அவரைச் சூழ்ந்திருந்தவர்கள் இந்த உவமையைக்குறித்து அவரிடத்தில் கேட்டார்கள். 11.அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது; புறம்பே இருக்கிறவர்களுக்கோ இவைகளெல்லாம் உவமைகளாகச் சொல்லப்படுகிறது. 12.அவர்கள் குணப்படாதபடிக்கும், பாவங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதபடிக்கும், அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கும்படி, இப்படிச் சொல்லப்படுகிறது என்றார் - மாற்கு 4:10-12
இப்படியாக உவமைகள் நிறைந்த அந்த கானா ஊர் கலியாணத்தில், பிதாவும் குமாரனும் பேசிக்கொண்டிருக்கும் பொழுது, வேலைக்காரர்கள் என்று சிலரை பார்க்க முடிகிறது, அவர்கள் பிதாவாகிய தேவனுக்கும் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுக்கும் வேலைக்காரர்களாக இருக்கலாம், ஆனால் நமக்கோ தேவனால் அருளப்பட்ட பரிசுத்த ஆவியானவராய் இருக்கிறார், அவர்களுக்கு பிதாவாகிய தேவன் முதலாவது கட்டளை கொடுக்கிறார் [அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி], அடுத்து குமாரனாகிய இயேசு கிறிஸ்துவும் கட்டளை கொடுக்கிறார் [இயேசு வேலைக்காரரை நோக்கி], அவர்களே திராட்சரசத்தை மொண்டு கொடுத்தார்கள், இப்படி பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியானவர் என்கிற திரியேக தேவனால் நாம் பெற்றுக் கொண்டது தான் இந்த விலையேறப்பெற்ற இரட்சிப்பு - 5.அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதின்படி செய்யுங்கள் என்றாள். 6.யூதர்கள் தங்களைச் சுத்திகரிக்கும் முறைமையின்படியே, ஒவ்வொன்று இரண்டு மூன்று குடம் தண்ணீர் கொள்ளத்தக்க ஆறு கற்சாடிகள் அங்கே வைத்திருந்தது. 7.இயேசு வேலைக்காரரை நோக்கி: ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள் என்றார்; அவர்கள் அவைகளை நிறைய நிரப்பினார்கள். 8.அவர் அவர்களை நோக்கி: நீங்கள் இப்பொழுது மொண்டு, பந்திவிசாரிப்புக்காரனிடத்தில் கொண்டுபோங்கள் என்றார்; அவர்கள் கொண்டுபோனார்கள் - யோவான் 2:5-8
முடிவை நன்றாய் ஆராய்ந்துப் பார்த்தால், பிதாவினால் அழைக்கப்பட்டிருந்த சீஷர்கள் திராட்சரசத்தினால் திருப்தி அடைந்திருந்தார்கள், அது மாத்திரம் இல்லாமல், வேலைக்காரர்களின் உதவியுடன் [பரிசுத்த ஆவியானவரின் கிருபையினால்] மணவாளனாகிய இயேசு கிறிஸ்துவின் விசுவாசிகளாய் அதாவது மணவாட்டியாய் மாறியிருந்தார்கள் - 9.அந்தத் திராட்சரசம் எங்கேயிருந்து வந்ததென்று தண்ணீரை மொண்ட வேலைக்காரருக்குத் தெரிந்ததேயன்றி பந்திவிசாரிப்புக்காரனுக்குத் தெரியாததினால், அவன் திராட்சரசமாய் மாறின தண்ணீரை ருசிபார்த்தபோது, மணவாளனை அழைத்து: 10.எந்த மனுஷனும் முன்பு நல்ல திராட்சரசத்தைக் கொடுத்து, ஜனங்கள் திருப்தியடைந்தபின்பு, ருசி குறைந்ததைக் கொடுப்பான், நீரோ நல்ல ரசத்தை இது வரைக்கும் வைத்திருந்தீரே என்றான். 11.இவ்விதமாக இயேசு இந்த முதலாம் அற்புதத்தைக் கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே செய்து, தம்முடைய மகிமையை வெளிப்படுத்தினார்; அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள் - யோவான் 2:1-11
இதுவே, பிதாவாகிய தேவன்[இயேசுவின் தாய்] தன் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுக்கு[மணவாளனுக்கு] ஒழுங்கு செய்திருந்த கானா ஊர் கலியாணம், சீஷர்கள் வேலைக்காரர்களின்[பரிசுத்த ஆவியானவரின்] உதவியுடன் அதை சுதந்தரித்துக் கொண்டார்கள், பந்திவிசாரிப்புக்காரர்களினோலோ ருசி பார்க்க மாத்திரமே முடிந்தது, மேலும் அந்த பந்திவிசாரிப்புக்காரர்களுக்கு அந்த ருசி நிறைந்த திராட்சரசம் எங்கேயிருந்து வந்ததென்றும் தெரியாது, அது தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த இரத்தினால் உண்டானது.